காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

SHARE

மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை கோட்பாடுகள்தாம் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்திச் சென்றன என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஜோ பைடன் தனது அறிக்கையில்:

மிகப்பெரிய சவால்கள் உள்ள இந்த காலத்தில் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கடந்த 1947-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை கோட்பாடுகளின் வழியில் சுதந்திரத்தை நோக்கிய மிக நீண்ட பயணத்தில் இந்தியா வெற்றிகண்டது.

ஜனநாயக வழியில் இந்திய மக்கள் புரிந்த சாதனை உலகுக்கே முன்னுதாரணமாக இருப்பதோடு, இரு நாடுகளிடையேயான சிறப்பான உறவுக்கும் அடித்தளமிட்டது.

கடந்த பல ஆண்டுகளாக, இரு நாட்டு மக்களிடையேயான நல்லுறவு மற்றும் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்திய-அமெரிக்கா்களின் துடிப்பான பங்களிப்பானது இரு நாடுகளின் உறவை வலுவானதாகவும், நிலைத்தன்மையுடையதாகவும் மாற்றியிருப்பதாக கூறினார்.

இரு நாடுகளிடையேயான இந்த நல்லுறவு வரும் நாள்களில் மேலும் மலர வாழ்த்துகிறேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

தாலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு… யாருக்கு என்ன பதவி?

Admin

அமேசான் சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து ஜெப் ஃபெசோஸ் விலகல்.. இதுதான் காரணமா.?

Admin

காஷ்மீரில் லித்தியம் தனிமம் : இந்தியாவின் பொருளாதாரமே மாறப்போகின்றதா?

Nagappan

இயல்புக்கு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளைஞர் … பரபரப்பான பிரான்ஸ்!

Admin

ஆப்கனை விட்டு வெளியேறும் மக்கள் – விமானத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் அவலம்

Admin

ஊசி போட்டால் மாஸ்க் வேண்டாம்! – அமெரிக்காவில் அப்படி…

ஆப்கானில் போராளி குழுக்களுடனான சண்டையில் 600 தாலிபான்கள் பலி

Admin

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

Leave a Comment