“மிகப்பெரிய திட்டம் வருது” … மோடியின் சுதந்திர தின உரையில் வெளியான அறிவிப்பு

SHARE

நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.

அப்போது விமான படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து பூக்களை தூவின.பின்னர் பிரதமர் மோடி 8வது முறையாக சுதந்திர தின விழாவில் உரையாற்றினார்.

அப்போது சுதந்திரத்தை பெற்று தந்த போராட்டத் தியாகிகள், நாட்டை உருவாக்கியவர்கள், வளர்ச்சியடைய செய்த அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுக் கூறுவதாக தெரிவித்தார்.

நாடு பிரிவினை அடைந்த போது பொதுமக்கள் பட்ட கடும் துயரத்தை இன்றளவும் தான் உணர்வதாக மோடி குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

மேலும் இன்னும் சிறிது காலத்தில் மிகப் பெரிய திட்டம் ஒன்றை நாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம்.

நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக தடைக்கற்களைத் தாண்டி செல்லும் வகையில் இருக்கும் அந்த திட்டம் நம்முடைய தொழில்துறை உலக நாடுகளுடன் போட்டியிட இந்த திட்டம் உதவி செய்யும் எனவும் தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

ஏன்யா கருப்பு பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என பீதிய கிளப்புறீங்க..? கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி.!!

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

Admin

Leave a Comment