Author: Admin

கொரியன் வெப் சீரிஸ் ரீமேக்கில் நடிகை சமந்தா ஆடையில்லாமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா கடைசியாக தெலுங்கில் ஜானு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் ஆகும். தற்போது விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல், தி ஃபேமிலி மேன் என்ற தொலைக்காட்சி தொடரிலும் சமந்தா நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு உச்சம் சென்ற அவரின் சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. சமீபத்தில் கூட கணவர் நாக சைதன்யாவின் குடும்ப பெயரை தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கி இருந்தார். உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் தேவைக்காக படுக்கையை பகிரும் இலங்கை தமிழ் பெண்ணாக சமந்தா நடித்திருந்ததற்கு…

Read More

தமிழ்நாடு சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய சட்டசபை கூட்டத்தில்பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானிய கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ. வேலு உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார். அதற்கு முன்பு அவையின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்து உரையாற்றினார். அப்போது உரையை ஆரம்பிக்கும் முன்னர் ஸ்டாலின், சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என்று வலியுறுத்தினார். நேரம் குறைவாக இருப்பதால் அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிப்பதாக முதல்வர் கூறினார். தமிழ்நாடு சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன்பு பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதனை வழக்கமாக்கியிருப்பதால் இது போன்ற புகழ்ச்சி உரையை சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரங்களில் பயன்படுத்துவதால் நேரம் விரயம்…

Read More

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு புதிய தலைவலியாக தீவிரவாத அமைப்பு ஒன்று அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் விலக்கி கொல்லப்பட்டதையடுத்து அங்கு தலிபான்கள் முழுமையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் நாட்டு மக்கள் உயிர் வாழ பயந்து வேறு நாடுகளில் தஞ்சம் அடைய விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்திற்குன் ஐஎஸ்ஐஎஸ்-கே என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதேசமயம் இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு தீவிரவாத அமைப்பின் மீது மற்றொரு தீவிரவாத அமைப்பு பழிபோடும் விளையாட்டை தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வானொலிக்கு தாலிபான்…

Read More

ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன் இருந்ததுபோல, ராமனுக்கு அனுமன் இருந்தது போல திமுக ஆட்சியமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளிக்கும் முன் பேசிய அமைச்சர் எ.வவேலு கே.ஆர்.ராமசாமி, பி.வி.நாராயாணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர், மு.க.ஸ்டாலின் வழியில் திரையுலகத்தில் திராவிட கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கும் நம்முடைய பிரச்னைகளையும் எடுத்துச் சொல்வதற்கும் நகைச்சுவை தென்றலாக உதயநிதி உலாவிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை சொல்லும் போதெல்லாம் தங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், திமுக திரையுலகில் பட்டுப்போய்விடுமோ என்று அஞ்சிய நிலையில் நமக்கு ஒரு திராவிட நடிகர் கிடைத்திருக்கிறார் என்று எ.வ.வேலு புகழ்ந்துள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் பிரசாரத்திற்கு செல்ல முடியாத கிராமப்புற தொகுதிகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்து இன்று மேஜை தட்டும் பல சட்டமன்ற உறுப்பினர்கள்…

Read More

‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படம் தொடர்பான விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் – வடிவேலு இருவருக்கும் இடையே சுமூகதீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’. இதன் 2 ஆம் பாகம் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் உருவாக உள்ளதாக இரு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே கதையில் வடிவேலு தலையிடுவதாகவும், இயக்குனர் சிம்புதேவனுடன் மோதல் போன்ற தகவல்கள் நிலவி வந்த நிலையில் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.நடுவில்…

Read More

டெல்லி அரசு கொண்டுவந்துள்ள ‘Desh Ke Mentors’ என்ற ‘மாணவர்களுக்கான வழிகாட்டி’ திட்டத்தின் தூதராக நடிகர் சோனு சூட் அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் இணைந்து பேட்டியளித்த நடிகர் சோனு சூட், இத்திட்டத்தில் இணைந்ததை உறுதி செய்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, தான் அரசியலில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை என்றும், கெஜ்ரிவாலிடமும் அதுகுறித்து எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும் விளக்கினார். ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குவது அவசியம் என்பதால், விரைவில் அறிமுகமாக உள்ள அத்திட்டத்தின் தூதராக தாம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதாக தெரிவித்தார்.

Read More

தாய்பூனை தனது குட்டிக்கு படியேற கற்றுக்கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்களை போல் விலங்குகளும் தங்களின் குட்டிகள் மீது அதீத அன்பு கொண்டதாக உள்ளன. அவ்வபோது இணையத்தில் வெளியாகும் விலங்குகளின் அதீத அன்பு கொண்ட வீடியோ இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் வீட்டில் வலம் வந்த பூனை, தனது குட்டிகளும் விரும்பிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தனது 3 குட்டிகளை வீட்டில் உள்ள படிக்கட்டு அருகே வரவழைத்து ஒவ்வொரு பூனைக்குட்டிகளுக்கும் படிக்கட்டு ஏற கற்றுக்கொடுத்ததுள்ளது. தாய் பூனையின் கண்ணசைவிற்கேற்ப, பூனைக்குட்டி ஒன்று படியில் தவழ்ந்து, உருண்டு மேற்படிக்கு சென்ற வீடியோ இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் அதிகமான பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Read More

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், –> 50 % மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் –> வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட வேண்டும் மற்றும் ஆன்லைன் வகுப்புகளையும் தொடர வேண்டும் –> ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிகள் அனுமதி தர வேண்டும் –> வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் –> வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்து அடிக்கடி சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கூட்டம் சேராமல் தடுத்தல் போன்றவை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் –> பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை பயன்படுத்தக் கூடாது…

Read More

பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன் தனது மொபைல்போனில் ஆபாச வீடியோ சாட்டிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பாக பாஜகவில் உள்ள பெண் தலைவர்களான வானதி சீனிவாசன், குஷ்பு, காயத்ரி ரகுராம் போன்றவர்கள்கருத்து எதுவும் தெரிவிக்காதது குறித்து பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனிடையே நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பெயர் குறிப்பிடாமல் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன்னிருந்து தப்பினாலும் தெய்வம் தண்டிக்கும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இணையவாசி ஒருவர் ட்விட்டரில் குஷ்புவின் ஐடியை குறிப்பிட்டு ‘பாஜக பெண் தொண்டர்களின் நிலை உண்மையாகவே பரிதாபத்திற்குரிய நிலைல தான் இருக்கு. அவங்களுக்கு ஆதரவா நீங்க எல்லாம் முன் வரனும்ன்னு நினைக்கிறோம்’ என…

Read More

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உள்ள நடிகர் சூர்யா 2டி எண்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்ட நிலையில் தற்போது ‘உடன் பிறப்பே’, ‘ஓ மை டாக்’, ‘ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும்’, ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் 2டி நிறுவனத்தின் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி, லோகோவைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களை குறிவைத்து போலி மின்னஞ்சல் முகவரி, 2டி நிறுவனத்தின் லோகோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிலர் அழைப்பு விடுப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க…

Read More