வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

SHARE

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் சென்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகரும்,தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், தேமுதிக பொதுக் கூட்டங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அவர் தவிர்த்து வந்தார்.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட தன்னை யாரும் நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டு சிகிச்சையை தவிர்த்து வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளை செய்து வந்தார்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இன்று காலை விஜயகாந்த் விமானம் மூலம் துபாய் சென்றார். விமான நிலையத்தில் அவரை உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து வேகமாக தள்ளிக் கொண்டே சென்ற புகைப்படங்கள் தேமுதிக தொண்டர்கள் உட்பட தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

டிரெண்டாகும் சுஹாஞ்சனா! தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார்- குவியும் பாராட்டுகள்!

Admin

அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Admin

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

வேலைக்கு சிபாரிசு கேட்டு வராதீங்க. . அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…

Admin

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்… சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல்

Admin

எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்… சபாநாயகர் அப்பாவு

Admin

9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

Leave a Comment