- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
மழையில் சாக்ஸ் நனைந்து ஈரமாகிவிட்டதால் சிரமப்பட்டதாகவும் . இல்லாவிட்டால் இல்லக்கை எட்டியிருப்பேன் என்று தனது கள அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு. டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த நிலையில், யூரோ ஸ்போர்ட் நிறுவனத்துக்கு மாரியப்பன் அளித்த பேட்டியில் : இன்று விளையாட்டை ஆரம்பித்தபோதே லேசாக மழை தூரல் இருந்தது. ஆரம்பத்தில் சிரமம் தெரியவில்லை. ஆனால், 1.80 மீட்டர் உயரத்தைக் கடந்து தாண்டும் போது மழை அதிகமானது. மழைநீரில் நனைந்து எனது சாக்ஸ் ஈரமானது. அப்போது நான் உண்மையான சவாலை சந்தித்தேன். எனக்கு டேக் ஆஃபில் பிரச்சினை உண்டானது, இல்லையென்றால் நிச்சயமாக 1.90 மீட்டரைக் கடந்திருப்பேன்என கூறியுள்ளார். இந்தியாவின் தங்கவேலுவும், அமெரிக்காவின் சாம் கிரீவும் . 3-வதுமுயற்சியில் இருவரும் தோல்வி அடைந்தால், தங்கப்பதக்கம் பிரித்து வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க வீரர்…
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதே போட்டியில் பீகாரைச் சேர்ந்த சரத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றார். இந்த ஆண்டுக்கான பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன. வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்!” என…
பொதுத்துறை நிறுவனங்கள் விவகாரத்தில் பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார். சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜவஹர் மற்றும் அவரதுஆதரவாளர்கள் உட்பட 500 பேர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி நாட்டிற்கு லாபம் தரக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பனை செய்வதை கடுமையாக கண்டிப்பதாக கூறினார். மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு செல்வதால் , இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகும். என கூறிய அழகிரி , பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை மோடி அறுப்பதாக கூறினார். அதே போல் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினால், கேள்விக்கான பதிலை வழங்காமல்,…
அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: திமுக அரசு ஜெயலலிதாவின் பெயரை அழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் திமுக தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வு ரத்து என கூறி நீட்டுக்கு வேட்டு வைத்தனர். மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதாகவும் வாய்க்கு வந்த படி பல திட்டங்களை கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அதில் ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை என கூறினார். மேலும், திமுக தலைவராக கலைஞர் இருந்தபோதே அதுமுகவை அழிக்க தோப்புக்கரணம் போட்டு, பல வித்தைகளை காட்டினார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. அவரது தந்தையாலேயே முடியவில்லை. அவரது மகன் மு.க.ஸ்டாலினால் முடியுமா? இதற்கெல்லாம் அதிமுகவினர் பயந்தவர்கள் அல்ல. கடத்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதா?, திமுக ஆட்சிக்கு வந்ததும், கல்வெட்டுக்கள் அடித்து நொறுக்கப்படுகிறது, ஜெயலலிதா…
கர்நாடகாவில் கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கோரமங்களா பகுதியில் உள்ள சகோதரர் மற்றும் உறவினர் வீட்டிற்கு ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் தனது நண்பர்களுடன் காரில் சென்றார். அந்த கார் கோரமங்களாவில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் உள்ள தடுப்பு கம்பிகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் உயிரிழந்ததற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு, தெலங்கானா மாநிலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தெலங்கானாவின் பள்ளி,கல்லூரி திறப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில அரசின் அறிவிப்பிற்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் திறப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பல்துறை நிபுணர்களோடு ஆலோசித்த பிறகும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்ததாகவும், மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக நண்பர்களுக்கு சிறப்பு பார்ட்டி கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சமூகவலைத்தளங்கள் மூலமாகவும், நேரிலும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ட்விட்டரிலும் HBDYuvanShankarRaja என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகியுள்ளது. இந்நிலையில் பிறந்தநாளையொட்டி யுவன் சங்கர் ராஜா தனது திரையுலக நண்பர்களுக்காக சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷும், சிம்புவும் பாடல் பாடி அசத்தினர். தனுஷ் ‘மாரி 2’ படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடலையும், சிம்பு ‘வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற லூசுப் பெண்ணே பாடலையும் பாடி ரசிகர்களுக்கு…
ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பு மசோதாவிற்கு எதிராக சாலையில் தர்ணா செய்த ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு இந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. சட்டப்பேரவையில் ஜெயலலிதாபல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது என்று குறிப்பிட்டார். இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர் பின்னர் சட்டப்பேரவை நடக்கும் கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது…
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதால் அங்கு தாலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதால் 20 ஆண்டுகளாக அடங்கி இருந்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு உயிர்வாழ அச்சப்பட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைய தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்த நிலையில் அங்கு ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அமெரிக்க இராணுவத்தினர், தாலிபான்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவும் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை தாக்க விமான நிலையம் அருகே உள்ள கட்டடம் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றநிலை நிலவி வருகிறது. இதனிடையே ஆப்கானில் இருந்து அமெரிக்கப்படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேற்றப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த…
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பேரவைக்கு வந்த சபாநாயகருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, கடந்த 26 ஆம் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. புதிய அரசின் முதல் கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். அதன்பின் அன்று மாலை 2021-22-ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.