தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

SHARE

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 6,606 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 5,134 கி.மீ. சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது.

மீதமுள்ள 1,472 கி.மீ. சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் ஆண்டுதோறும் 8 முதல் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதில் 24 சுங்கச்சாவடிகளில் இந்தாண்டுக்கான கட்டணம் நேற்று (செப்டம்பர் 1) முதல் உயர்த்தப்பட்டது. இது வாகன ஓட்டிகள், சரக்கு லாரி உரிமையாளர்கள் என பலரையும் அதிருப்திகுள்ளாக்கியது.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.

இதற்கு பதலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறினார்.

மேலும் சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெமிலி ,சென்னசமுத்திரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற விரைவில் மத்திய அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், இதனை நீக்க மத்திய அமைச்சரை சந்திக்கும் போது வலியுறுத்தப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டுவிட்டரில் புகழ்ந்த பவன் கல்யாண்.!!

Admin

தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது ? – நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை

Admin

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

திருநங்கைகளுக்கு நிவாரணம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

Admin

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

Leave a Comment