Author: Admin

டெல்லியில் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற நபரை பேஸ்புக் நிறுவனம் போலீஸ் உதவியுடன் காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகத்திலிருந்து டெல்லி சைபர் பிரிவு போலீசாருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும், அவரை காப்பாற்றும்படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு சைபர் பிரிவு போலீசார் தகவல் கொடுத்தனர். போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற போது அந்த நபர் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டெல்லி காவல்துறை துணை கமிஷனர் ராய் கூறுகையில், பேஸ்புக் நேரலை வீடியோவில் அந்த நபர் வீட்டின் உள்பக்கம் தாளிட்டுக் கொண்டார்.அவரது குழந்தை கதவை திறக்குமாறு வலியுறுத்தும் குரலும் கேட்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேஸ்புக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் அணைத்து…

Read More

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து மூதாட்டி ஒருவர் கடிதம் எழுதியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த ராதம்மாள் என்ற 85 வயது மூதாட்டி கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரிய வந்தது. இதை அடுத்து மூன்று நாட்கள் கழித்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் 3 நாட்களாக தன்னை அன்போடும் கவனமாகவும் பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அந்த மூதாட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தைக் கண்டு மருத்துவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.- மூவேந்தன்

Read More

கர்நாடக கொடி மற்றும் அரசு முத்திரையினை பதித்த நீச்சல் உடையை விற்பனை செய்த அமேசான் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு கண்டனத்தை தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கொடி மற்றும் அரசு முத்திரை பதித்த நீச்சல் உடையை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான்,கனடா நாட்டில் விற்பனை செய்துள்ளது.இந்த சம்பவம் கர்நாடக மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக,கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடுதல் தளத்தில் காண்பித்ததால் கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டு அந்த பதிவினை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Read More

மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருவதாலும் தடுப்பூசி போட்டு மாணவர்களை வர சொல்லவது தொற்றை அதிகரிக்கலாம் என்பதாலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளி கல்வித்துறை பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை வகுக்கும் குழுவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமையாசிரியர்கள் இருப்பார்கள், மதிப்பெண் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.- மூவேந்தன்

Read More

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ22 5ஜி மற்றும் ஏ22 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட் போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கேலக்ஸி ஏ22 மாடலில் 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமன்சிட்டி 700 பிராஸசர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி ரோம், 48 எம்பி பிரைமரி கேமரா ஆகியவை உள்ளன. கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் அமொல்ட் டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி80 பிராஸசர், 6 ஜிபி ரேம் 48 எம்பி பிரைமரி கேமரா ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி ஆகிய வசதிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் ஆரம்பவிலை இந்திய மதிப்பில் ரூ. 20,295 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.- மூவேந்தன்

Read More

தமிழகத்திலிருந்து சொந்த ஊருக்கு சென்ற கர்நாடக பழங்குடியினரை லாரி ஓட்டுநர் நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வேலை வாய்ப்பை இழந்துள்ள பொள்ளாச்சி மலைப்பகுதியில் வேலைப்பார்த்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 72 பழங்குடியினரை லாரி மூலம் சொந்த ஊருக்கு பொள்ளாச்சி வட்டாட்சியர் அனுப்பி வைத்தார். ஆனால் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை அருகே லாரி வந்த போது மலையில் வாகனம் ஏறாது எனக் கூறி ஓட்டுநர் பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகத்தில் செய்வதறியாது நின்றுள்ளனர். அவர்களைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மனிதாபிமானத்துடன் 75 பேருக்கு உணவு வழங்கி தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.- மூவேந்தன்

Read More

நைஜீரிய அதிபரின் ட்வீட்டை நீக்கியதற்கு பதிலடியாக ட்விட்டருக்கு தடை விதித்துள்ளது நைஜீரியா. ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டின் அதிபராக முகம்மது புஹாரி பதவி வகித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அங்கு அரசுக்கு எதிராக அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் அதிபர் முகம்மது புஹாரி தனது ட்விட்டர் பக்கத்தில் 1967-1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அரசுக்கெதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்களுடன் களத்தில் இருந்தவர்கள், போரை சந்தித்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலேயே நடத்துவார்கள் என குறிப்பிட்டிருந்தார். அதிபரின் இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்த தூண்டுவது போல அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதனால் ட்விட்டர் நிறுவனம் அதிபர் முகம்மது புஹாரியின் பதிவை நீக்கியது. இதனால்…

Read More

இந்தியாவின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்கும்படி டுவிட்டருக்கு கடைசி வாய்ப்பினை மத்திய அரசு வழங்கியுள்ளது. டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வௌியிட கூடாது என்றும், இந்த கொள்கைக்கு ஒத்துப்போக வலைதளங்களுக்கு 3 மாதம் அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு மே 25ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசின் கொள்கைக்கு இணக்கம் தெரிவித்தன. ஆனால் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக டுவிட்டர் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில், டிஜிட்டல் விதிகளை கடைபிடிக்கும்படி டிவிட்டருக்கு இறுதி வாய்ப்பு அளித்து மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Read More

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால்மீண்டும் டுவிட்டரில் ப்ளூ டிக் சேர்க்கப்பட்டது. பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரில் உலக மெங்கும் உள்ள முக்கியமான அரசியல் தலைவர்கள், திரையுலகம் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்களது கணக்கு இது தான் என்பதை உறுதிப்படுத்த ப்ளூ டிக் வசதியை டுவிட்டர் வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு டுவிட்டர் நிறுவனம் வழங்கிய ப்ளூ டிக்கினை நீக்கியது. கடந்த ஆறு மாதமாக வெங்கைய நாயுடு தனது தனிப்பட்ட கணக்கை உபயோகப்படுத்தாமல் இருந்ததே ப்ளூ டிக் நீக்க காரணம் என டுவிட்டர் நிறுவனம் கூறியது. இந்நிலையில் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் கணக்கில் மீண்டும் ப்ளூ டிக் வசதியை டுவிட்டர் வழங்கியுள்ளது.-…

Read More

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அவருடைய மனைவி திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன். 2018 ஆண்டு ஜூன் மாதத்தில் நடராஜன் தனது பள்ளித் தோழியான பவித்ராவைத் திருமணம் செய்தார். நடராஜன் – பவித்ரா தம்பதியருக்கு அன்பிற்கு அடையாளமாய் கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் திருமண நாளை இருவரும் நேற்று கொண்டாடினார்கள். இதையடுத்து நடராஜனை புகழ்ந்து இன்ஸ்டகிராமில் பவித்ரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது. என் வாழ்க்கையின் காதலுக்கு திருமண நாள் வாழ்த்துகள் – என்று பவித்ரா கூறியுள்ளார்.- மூவேந்தன்

Read More