மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

SHARE

மியான்மர் இராணுவத்தினர் பொதுமக்களைக் கொல்ல உத்தரவிட்டதால் ஒரு இராணுவ அதிகாரி இந்தியாவில் அகதியாகத் தஞ்சம் புகுந்துள்ளார்.

தமிழர்களுக்கு பர்மா என்ற பெயரில் பரிச்சயமான நாடுதான் மியான்மர். இங்கு அடிக்கடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்ப்பது உண்டு. தற்போதும் அங்கு இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது.

அடக்குமுறைகள் நிறைந்த இராணுவ ஆட்சியை பர்மிய மக்கள் வெறுக்கிறார்கள். இதனால் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அங்கு வலுவடைந்து உள்ளன. அதே சமயம் மியான்மரின் இராணுவமும் போராட்டக்காரர்கள் ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்து வருகின்றது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களைக் கொல்ல தனது உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதனைச் செய்ய மனம் வராமல் குடும்பத்தோடு மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு வந்து அகதியாக தங்கி உள்ள ஒரு அதிகாரியின் கதை ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

மியான்மரின் காம்பாட்நகரில் பிப்ரவரி 27ஆம் தேதியன்று போராட்டக் காரர்களை சுட்டுக் கொல்லும்படியான உத்தரவு தா பெங் என்ற இந்த அதிகாரிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவரும் அவரது 6 நண்பர்களும் அதை செய்யாமல் இருக்க மேல் இடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

உடனே வேலையை ராஜினாமா செய்த தா பெங், மார்ச் 1ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் மியான்மரில் இருந்து ரகசியமாகக் கிளம்பி, மூன்று நாட்கள் பயணத்தில் மிசோரம் வழியாக இந்தியாவை அடைந்து இருக்கிறார். இவர் கூறிய தகவல்கள் உண்மையானவை என்று சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் உறுதி செய்து உள்ளது.

இனி மீண்டும் மியான்மரில் மக்களாட்சி மலர்ந்தால்தான் இவரால் நாடு திரும்ப இயலும். ஆனாலும் இவரது கருணை கண்டிப்பாக எதிர்காலத்தில் போற்றப்படும்.

நமது நிருபர்

Photo courtesy: GettyImages


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்… 22 கோடி யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு

Admin

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

Admin

கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

Pamban Mu Prasanth

சீனாவை ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம்: ஜின் பிங் ஆவேச பேச்சு

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு..

Admin

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்: புதுடெல்லியில் கண்டுபிடிப்பு!

Admin

தாலிபான்கள் ஆட்டம் ஆரம்பம்: விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை

Admin

Leave a Comment