கூட்டத்தில் இருந்த தொண்டரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்

SHARE

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ஆய்வு செய்வதற்காக சென்றார்.

அப்போது அங்கு இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் அவர் மீது கை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த நபரை கன்னத்தில் அறைந்ததாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக பாஜக அமைச்சர் சிடி ரவி, “கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவக்குமார் தன்னுடைய கட்சி நபர் ஒருவரை பொதுவெளியில் அறைந்துள்ளார்?

வன்முறை செயல்களில் ஈடுபட சிவக்குமாருக்கு ராகுல் காந்தி முழு சுதந்திரம் அளித்துவிட்டாரா என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பலரும் டி.கே.சிவக்குமாரின் செயல்பாட்டை கண்டித்து வரும் சூழலில் அடி வாங்கிய நபர் சரியாக கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாததால் தான் அவரை அறைந்ததாக டிகே சிவக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வீடியோ எடுத்த நபரை அதை அழிக்குமாறு டிகே சிவக்குமார் கேட்டு கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் – டுவிட்டர் மீது வழக்குப்பதிவு

Admin

டவ்-தே புயல் பாதிப்பு: குஜராத்தில் உயிரிழப்பு 53ஆக அதிரிப்பு

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

Admin

மும்பையினை புரட்டி போட்ட கனமழை .. 17 பேர் உயிரிழப்பு!

Admin

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

Admin

Leave a Comment