Close Menu
Mei EzhuththuMei Ezhuththu
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Mei EzhuththuMei Ezhuththu
Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
Mei EzhuththuMei Ezhuththu
Facebook X (Twitter) Instagram
Home » ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.
தொடர்கள்

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

AdminBy AdminMarch 28, 2021Updated:March 29, 202103 Mins Read0 Views
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Reddit Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
SHARE

பாகம் 2: நிறைவு தராத கட்டடம்!.

பாகம் 1 Link :

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

ஜேம்ஸ் பூங்காவில் 1674ல் ஏற்பட்ட மிகப் பெரிய தீவிபத்திற்குப் பின்னர் அடுத்த கால் நூற்றாண்டுக்கு அந்த இடம் வெறும் தரிசாகத்தான் கிடந்தது. அன்றைய உலகின் வல்லரசு நாடான இங்கிலாந்தில், அதன் தலைநகரமான லண்டனின், 4 ஏக்கருக்கு ஒரு நீண்ட நிலம்… செல்வந்தர்களின் கண்களைப் பறிக்கத்தான் செய்தது.

கி.பி.1702 ஆம் ஆண்டில் ஜான் ஷெபீல்டு என்ற பெயர் கொண்ட ஒரு பிரபு அந்த நிலத்தை வாங்கினார். அந்தப் பெரும் இடத்தில் ஒரு கனவு மாளிகையைக் கட்ட வில்லியம் விண்டே, ஜான் பெட்ச் என்ற இரண்டு சிறந்த கட்டிடக்கலை நிபுணர்களை அவர் பணியமர்த்தினார். 1705ஆம் ஆண்டில் அங்கு பக்கிங்ஹாம் அரண்மனை கட்டி முடிக்கப்பட்டது. சரி, அதென்ன பக்கிங்ஹாம் அரண்மனை? 

இங்கிலாந்து அரசின் ஆனி-யின் தயவால் ஜான் ஷெபீல்டுக்கு ‘டியூக் ஆஃப் பக்கிங்ஹாம்’ அதாவது பக்கிங்ஹாம் பகுதியின் பிரபு – என்ற பட்டம் 1703ல் கிடைத்தது. அந்தப் புதிய பதவியில் அமர்ந்த முதல் நபர் அவர்தான் என்பதால் அவரை எல்லோரும் ‘பக்கிங்ஹாம் பிரபு’ என்றே அழைத்தனர். அவரது புதிய பெயரை அடிப்படையாகக் கொண்டே பக்கிங்ஹாம் அரண்மனை பெயரிடப்பட்டது.

ஆறு ஓய்வு விடுதிகள், 40 குதிரை கட்டும் லாயங்களோடு கூடிய மிகப் பெரிய அரண்மனையை கட்டிய ஜான் ஷெபீல்டு அந்த இடத்தின் இராஜாவாக தன்னை உணர ஆரம்பித்தார். விதி யாரை விட்டது?, 1714ல் இங்கிலாந்து ராணி ஆனி இறந்துவிட பக்கிங்ஹாம் பிரபு தனது பதவியை இழந்தார். அரச குடும்பம் தனது பதவியை மீண்டும் தரும் என்ற நிறைவேறாத நம்பிக்கையோடும் கண்ணீரோடும் 1721ல் ஜான் ஷெபீல்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் இறந்து போனார். அவருக்குப் பின்பு அந்தப் பதவி அவரது வாரிசுகளுக்குக் கூட கிடைக்கவில்லை!.

ராசி எப்படி இருந்தாலும், பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரமாண்டத்திற்கும் சொகுசு வசதிகளுக்கும் குறைவே இல்லை. அதனால் அந்த அரண்மனையை வாங்கப் பலரும் பேரம் பேசினர். ஆனால் அந்த அரண்மனையை வைத்திருந்த ஜான் ஷெபீல்டின் விதவை மனைவி வரலாறு காணாத தொகையை எதிர்பார்த்ததால் அந்தக் கட்டிடத்தைப் பிறரால் வாங்க முடியவில்லை. மொத்த இங்கிலாந்தும், ‘யாருக்குத்தான் போகப் போகிறது இந்த அரண்மனை?’ – என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோதுதான், 1761ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசர் மூன்றாம் ஜார்ஜ் அந்த அரண்மனையை வாங்கினார். அரசரே வாங்க விரும்பியதால் ஜான் ஷெபீல்டு குடும்பத்தினரும் விலையைக் குறைத்துக் கொடுத்தனர். 

மூன்றாம் ஜார்ஜ் இந்தக் கட்டிடத்தை வாங்கும்போதே ‘இது ஆண்களுக்கு… மிக முக்கியமாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆகாத கட்டடம்’ என்ற வதந்தி இருந்தது. அதனால்தானோ என்னவே பக்கிங்ஹாம் அரண்மனையை அரசி சார்லட்-டிற்கு அவர் கொடுத்தார். அவர் அங்கு வசிக்கவேயில்லை.

மூன்றாம் ஜார்ஜ் இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அரசர் நான்காம் ஜார்ஜ்தான் தான் வளர்ந்த பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே முடி சூட்டிக் கொண்டு, அதையே அரசரின் அரண்மனையாக அறிவித்தார். மீண்டும் ஒரு ஆணின் தலைமையின்கீழ் அந்த இடம் வந்தது.

பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏதோ ஒன்று குறைவதாக நான்காம் ஜார்ஜ் அரசருக்குத் தோன்றியது. அதனால் அன்றைக்குக் கட்டுமானக் கலையில் பிரபல வல்லுநராக இருந்த ஜான் நாஷ் என்பவரைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டார். அந்த மொத்தக் கட்டிடமுமே சரியில்லை என்பதே ஜான் நாஷ்சின் நிலைப்பாடாக இருந்தது, பக்கிங்ஹாம் அரண்மனையை மொத்தமாக இடித்துவிட்டு புதிய அரண்மனை கட்டலாம் என அவர் கூறினார். ஆனால் நான்காம் ஜார்ஜ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 

பதவிக்கு வரும்போதே 60 வயதில் இருந்த நான்காம் ஜார்ஜ், புதிய மாளிகையைக் கட்டத் தொடங்கினால், அதைத் தனது காலத்திற்குள் முடிக்க முடியும் என்று நினைக்கவில்லை. இருக்கும் மாளிகையையில் ஏதாவது மாற்றங்களைச் செய்தால் போதும் என்று நாஷ்க்கு கூறப்பட்டது. ஆனால் அந்தப் புனரமைப்புப் பணிகள் முடியும் முன்பே நான்காம் ஜார்ஜ் 1830ல் காலமானார். 

அடுத்த வந்த அரசர் நான்காம் வில்லியம்ஸ்சுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையைப் பிடிக்கவேயில்லை. வேறு இடத்தில்தான் தங்கினார். அரண்மனையின் சில பகுதிகளை இடித்துக் கட்டியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. மொத்தமாக அரண்மனையை இடித்துக் கட்டுவதற்கு பதில் அந்த அரண்மனையை விற்றுவிடலாம் என்று அவர் நினைத்தார். அது தொடர்பாக ஆலோசனைகளும் நடத்தத் தொடங்கினார். 

ஆனால் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றம் அரண்மனையை விற்க ஒப்புக் கொள்ளவில்லை. வேறு வழியே இல்லை… இந்த அரண்மனையை சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என நான்காம் வில்லியம்ஸ் ஏற்றுக் கொண்டு அங்கு நிரந்தரமாகக் குடியேற நாள் குறித்தார், அந்த நாளுக்கு முன்பாகவே மரணம் அவருக்கு நாள் குறித்தது. பக்கிங்ஹாம் அரண்மனையில் குடியேறும் முன்பே 1837ஆம் ஆண்டில் அரசர் நான்காம் வில்லியம்ஸ் இறந்துபோனார்.

அரண்மனைதான்… ஆனாலும் அரசர்கள் அங்கு வாழ்ந்தது இல்லை. இந்த சாபக் கதைக்கு இன்னும் சில அத்தியாயங்கள் உள்ளன…

தொடரும்…


SHARE
Buckingham Palace history mannar mannan பக்கிங்ஹாம் அரண்மனை விநோத வரலாறு
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Admin
  • Website

Related Posts

கல்கி ஒரு சகாப்தம் – கல்கி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

September 9, 2022

இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘பணத்தின் பயணம்’ – நூல் அறிமுகம்:

August 17, 2022

சோழர்கள் கட்டிய கோவில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போனது! – அமைச்சர் சேகர் பாபுவுக்கு பொன்.மாணிக்கவேல் அதிர்ச்சிக் கடிதம்!.

July 14, 2022
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202117 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 20217 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

July 16, 20214 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

June 14, 20214 Views
Don't Miss

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023
SHARE

உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டி நாளை(நவம்பர் 15-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும்.இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து…


SHARE

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023

”மயில்சாமி ஒருநாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் ஏழையா இருப்பான்”: விவேக்கின் பேச்சு வைரல்

February 20, 2023
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo
About Us
About Us

Tamil News Website

Our Picks

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

May 31, 2022

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

September 24, 2021

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

September 16, 2021
Most Popular

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202117 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 20217 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

July 16, 20214 Views
Mei Ezhuththu
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Threads
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
© 2025 Mei Ezhuththu Designed by ASK Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.