- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜ சோழன்’ நூல் வெளியானது. தமிழகத்தில் உள்ளவர்கள் இந்த நூலைப் பெற கீழே உள்ள படத்தில் உள்ளபடி புத்தகத்தைப் பதிவு செய்யவும். கூகுள் பே மூலம் நூலை பதிவு செய்வது எப்படி? அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் payitru2012@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் வந்தேகங்களைக் கேட்கவும். அயல்நாட்டில் உள்ளவர்கள் பர்பிள் புக் ஹவுஸ் மூலமாக நூலைப் பெறலாம். அதற்கு +91 73970 19916 என்ற புலன (வாட்ஸப்) எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உலகில் அதிக மக்களால் சிறந்த தலைவராகப் போற்றப்படுபவர் முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா. 1918 ஜூலை 18ல் அவர் பிறந்ததால், அந்த தினம் மண்டேலா தினமாகக் கொண்டாடப்படுகின்றது. தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி, மக்களாட்சி முறையை கொண்டு வர அமைதியான வழியில் போரிட்டு, அந்த மக்களாட்சி முறையிலேயே தேர்ந்ததெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் இவர். அதற்கு முன்னதாக, நிறவெறிக்கு எதிராக போராடியதிற்கு 27 ஆண்டுகள் சிறை வாசத்தையும் இவர் பெற்றார். 1990 இல் இவருக்கு கிடைத்த வெற்றி, தென்னாப்பிரிக்காவிற்கும் நிறவெறி ஆட்சியில் இருந்து கிடைத்த மக்களாட்சியாக மலர்ந்தது. இதுவரையிலான தகவல்கள் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவை. நெல்சன் மண்டேலா பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக: 1. மண்டேலா முதன் முதலாக தேர்தலில் வாக்களித்த ஆண்டு 1994, அதே தேர்தலில்தான் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 76. 2. இவரே கருப்பின மக்கள் நிறைந்த தென்னாப்பிரிக்காவின் முதல்…
நமது சிற்ப இலக்கணம் தொடரில், இதுவரை 24 வகை தொழிற்கை முத்திரைகளைப் பார்த்தோம்.. அடிக்கடி பார்க்கின்ற, குழப்பம் ஏற்படுத்தக் கூடிய சில தொழிற்கை முத்திரைகளைக் கொண்ட கடவுள் உருவங்களை உங்களால் அடையாளம் காணமுடிகின்றதா? – என ஒரு பயிற்சியாகப் பார்ப்போம்… உன்னை காக்க நான் இருக்கிறேன் என்று வலது கரம் அபய முத்திரையுடன்.. உனக்கு வேண்டியதை வழங்குறேன் என்று இடது கரம் வரத முத்திரையுடன் மகாலெட்சுமி படிமம். பின்னிரு கரங்கள் கர்த்தரி முத்திரையில் மான், மழு ஏந்த.. வலது முன் கையில் காக்கும் அபய முத்திரை. இடது முன் கையில் ’இன்னல் நீங்கி அமைதியடைவீர்’ என்பதைக் குறிக்கும் சிம்மகர்ண ஹஸ்தம். சுகாசன மூர்த்தி. வலது கையில், கடக முத்திரையில் மழு ஏந்தி… இடது கை சிம்ம கர்ண முத்திரையுடன் அமைதியை வழங்கும்… சண்டிகேசுவரர்.. மேல் இரு கை கர்த்தரி முத்திரையில் கமண்டலம் மற்றும் அக்கமாலை ஏந்த, கீழ் வலது கை அபய…
இந்தியா – இலங்கை உடனான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளின் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பில், ஜீலை 13 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போட்டிகள், இலங்கை அணியின் பயிற்சியாளரான கிராண்ட் பிளவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் வரும் 18 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது. இதனால், 18ந் தேதி முதல் போட்டி, 20ஆம் தேதி இரண்டாவது போட்டி, 23 ஆம் தேதி மூன்றாவது போட்டி என்று ஒரு நாள் போட்டிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இரு அணிகளின் டி20 போட்டிகளும், 25 ஆம் தேதி, 27ஆம் தேதி, 29ஆம் தேதிகளில் நடைபெற போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதைவிட முக்கிய மாற்றமாக போட்டிகளின் நேரமும் மாற்றபட்டுள்ளது. மதியம் 1.30க்கு ஆரம்பிக்கப்படும் ஒரு நாள் போட்டிகள் 3 மணிக்கும். இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கபடும் டி20 போட்டிகள் 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாக்லேட்… சிறியவர், பெரியவர் என்ற வரையறை இல்லாமல் அனைவருக்கும் பிடித்தது. சாக்லேட் என்று சொன்னாலே நமக்குள் தனி உற்சாகமும், மகிழ்ச்சியும் பிறக்கும். சாக்லேட் பற்றிய சில இனிப்பான தகவல்கள்…. 1.சாக்லேட் என்ற வார்த்தை மெக்ஸிக்கோ மாகாணத்தில் பேசப்படும் Nahuatl என்ற மொழியில் உள்ள Xocolātl என்ற சொல்லில் இருந்து உருவானது. 2.உலக சாக்லேட் தினம் என்ற ஒன்று, 2009 ஆண்டில் இருந்துதான் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. 1550 ஆம் ஆண்டு ஜீலை 7 ஆம் நாள் தான் ஐரோப்பாவிற்கு சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 3.சாக்லேட்டுகள் கொக்கொ பீன்ஸ் என்ற மரத்திலிருந்து கிடைக்கும் பழத்தின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு கொக்கொ பழத்தில் 20 முதல் 60 விதைகள் வரை இருக்கும். 4.முதன் முதலில் சாக்லேட்டை பானமாகவே தயாரிக்கபட்டது. அதன் சுவையும் சற்று கசப்பாகவே இருந்தது. இருப்பினும் இதை குடிப்பவருக்கு உற்சாகமும், வலிமையும் தரும் என நம்பினார்கள். 5. நாளடைவில் சாக்லேட்டுடன்…
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார் . திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி. 84 வயதான இவர், மகாராஷ்டிரா எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு , கடந்த 2020ஆம் ஆண்டில் உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். உபா சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டதால், இவருக்கான ஜாமீனும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயினால் அவதிப்பட்டு வந்த இவருக்கு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமானதால், நேற்று முன்தினம் முதல் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.இந்த தகவலை அவரது வழக்கறிஞர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்தனர். பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்…
இயற்கை ஆகச்சிறந்த கணக்கு வாத்தியார். எங்கெல்லாம் பள்ளம் உருவாகிறதோ, அதற்கு பக்கத்திலேயே மலையை நிறுத்தி வைக்கும் மாயம் கொண்டது இயற்கை. ஆம், ஈழத்தமிழர் வரலாற்றைப் பற்றியும், வீரஞ்செறிந்த இறுதிகட்ட போர் பற்றியும் உண்மைக்கு மாறான திரைப்படங்கள் வரிசைகட்டி வரும் நிலையில், சத்தமே இல்லாமல் சத்தியத்தை ஏந்தியபடி வந்து நிற்கிறது மேதகு திரைப்படம். காற்றுக்கென்ன வேலி, கன்னத்தில் முத்தமிட்டால், பேமிலி மேன், ஜெகமே தந்திரம் போன்ற திரைப்படங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈழத் தமிழர் குறித்து பேசியுள்ளன. ஆனால் அவற்றில் எதிலும் உண்மைத் தன்மை இல்லை. இன்னும் சொல்லப்போனால் உண்மைக்கு மாறான, அரசியல் திரிபுவாதத்தை அந்த படங்கள் பேசின. அந்த நரகலை நறுமணமாக காட்டத் தான் பெரும் நடிகர் பட்டாளம், உலகத்தரமிக்க கிராபிக்ஸ் காட்சிகள், பெரும் பொருட்செலவு தேவைப்படுகிறது. ஆனால் கற்பூரத்தை மணமாக காட்ட எவ்வித முயற்சியும் தேவையில்லை. வெறும் காற்றில் வைத்தாலே போதும், அதன் மணம் காற்றோடு கலந்து விடும். அருகில் நிற்பவரையும்…
நமது சிற்ப இலக்கணம் தொடரில், இதுவரை 24 வகை கை முத்திரைகளைப் பார்த்தோம்.. இவற்றில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றால்தான் இனிவரும் பகுதிகளை உங்களால் சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலும் என்பதால், இங்கே தொகுப்பாய் ஒரு நினைவூட்டல். படிமங்களில் ஒற்றைக் கை அமைக்கும் முத்திரைகளை ’தொழிற் கை முத்திரைகள்’ என்று கூறுவர். இம்முத்திரைகளை நன்கு கவனித்து பயிற்சி எடுங்கள். அபய மற்றும் வரத முத்திரைகளை காக்கும் மற்றும் வழங்கும் முத்திரை என்பார்கள். பொதுவாய் சிற்ப படிமங்களின் வலது கை அபய முத்திரையாகவும் இடது கை வரதமுத்திரையாகவும் அமையும். வியாக்யான முத்திரை என்று சொல்லப்படும் சின்முத்திரை யோகத்தையும் ஞானத்தையும் கற்பித்தலைக் குறிக்கும். சூசி முத்திரையும், தர்ஜனீ முத்திரை இரண்டும் ஒன்று போலவே இருந்தாலும்… சுட்டு விரல் செங்குத்தாக இருந்தால் சூசி முத்திரை. சுட்டு விரல் சற்று சாய்ந்திருந்தால் தர்ஜனீ முத்திரை. கடி ஹஸ்தமும், ஊரு ஹஸ்தமும் ஒரே மாதிரி இருந்தாலும் சற்று வேறுபாடு உண்டு. …
நமது ‘சிற்ப இலக்கணம்’ தொடரில் இதுவரை, 24 வகையான தொழிற் கை முத்திரைகள் எவை என்று சுருக்கமாகவும், அவற்றில் முதல் 20 முத்திரைகளை விளக்கமாகவும் கண்டோம். மீதமுள்ள முத்திரைகள் குறித்து தொடர்ந்து காண்போம் 21. ஆலிங்கன ஹஸ்தம். சுட்டு விரல் முதல் சிறு விரல் வரை உள்ள விரல்களை ஒன்றோடு ஒன்று நெருங்கியதாக அமைத்து சுட்டு விரலையும் சிறு விரலையும் சிறிது மேல்நோக்கி கிளப்பி, கட்டை விரலை கைத்தளத்திலிருந்து உயர்த்தி தேவியின் உடலை அணைத்தவாறு இருக்கும் முத்திரை இதுவாகும். இம்முத்திரை பொதுவாக இடுப்பை தொட்ட நிலையிலோ, புஜத்தை அணைத்த நிலையிலோ அமையும். உமாசகிதர் மூர்த்தத்திலும், லஷ்மி நாரயணர் மூர்த்தத்திலும் இம்முத்திரை இருக்கும். 22. தனுர் ஹஸ்தம்: கைத்தலத்தை உள்முகமாகத் திருப்பி, நடுவிரலையும் அணிவிரலையும் சேர்த்து அவற்றை வில்லின் மீது படியச் செய்து, சுட்டுவிரலையும் சிறுவிரலையும் மேல் நோக்கி உயர்த்தி, சிறிது வளைத்து பெருவிரல் கைத்தலத்தை உள்முகமாகப் பார்த்த வண்ணம் மடக்கி, விரல்…
நமது ‘சிற்ப இலக்கணம்’ தொடரில் இதுவரை, 24 வகையான தொழிற் கை முத்திரைகள் எவை என்று சுருக்கமாகவும், அவற்றில் முதல் 16 முத்திரைகளை விளக்கமாகவும் கண்டோம். மீதமுள்ள முத்திரைகள் குறித்து தொடர்ந்து காண்போம்17. சிகர ஹஸ்தம்: பெருவிரல் தவிர மற்ற விரல்களை ஒரு சேர மடக்கி பிடித்து பெருவிரலை செங்குத்தாகப் பிடித்த நிலை. வில்லை பிடிப்பதால் இது விற்பிடி எனலாம். வில் போன்ற ஆயுதங்கள் இம்முத்திரையில் பிடிக்கப்படும். 18.,பூ ஸ்பரிச ஹஸ்தம்: பல்லவ முத்திரையுடைய கையினை பூமியை தொடுமாறு பிடித்தல். புத்தர் படிமத்தில் காணலாம். புத்தர் பூமியைத் தொட்டு உணர்த்திய நிலை. 19. கடி ஹஸ்தம்: கடி என்றால் இடுப்பு. படிமங்கள் தங்களது இடக்கரத்தை இடுப்பில் வைத்தவாறு அமையும் முத்திரை இதுவாகும். இம்முத்திரை படிமங்களுக்கு கம்பீரத்தை தருகிறது. கைத்தலத்தையும் விரலையும் விரித்து கட்டை விரலை இடுப்பில் ஊன்றி மற்ற விரல்களை ஒன்றோடொன்று சேர்த்து இணைத்து இடுப்பில் படியுமாறு வைத்து சிறுவிரலயும் சுட்டுவிரலையும்…