- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
‘நாங்கல்லாம் வேற மாதிரி…’ அப்டிங்குறத பாட்டாவே போட்டு நாள ஸ்டார்ட் பண்ணாங்க. நாலு பேர் வெளில ஆடினாங்க. நாலு பேர் படுக்கையிலேயே ஆடினாங்க. ஆனா பிரியங்கா புல்வெளில படுத்துக்கிட்டே டான்ஸ் ஆடினாங்க. பாவ்னியோட தமிழ் பேச்சு ரஜினி பேச்சு மாதிரி இருக்குன்னு, அவருக்கு ரஜினி டயலாக்லாம் சொல்லிக் குடுக்குறாரு சிபி. பிரியங்கா நாமளும் எதாவது பண்ணனுமேன்னு டெய்லி ஒரு டாஸ்க்னு குடுக்குறாங்க. இன்னைக்கு நாம எல்லாரும் சீரியல்ல வர மாதிரி எமோஷன்ஸோட பேசலாம்ன்னு, ஆனா பாவம் அவங்கள யாரும் கண்டுக்கவே இல்லை. ஃபல்பு குடுத்துட்டாங்க ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும்….. ஐக்கி தன்னோட வட்டாரத்துல இருக்குற மதுமிதாக்கு, சுருதிக்கு எல்லாம், shaken style லாம் சொல்லிக் குடுக்குறாங்க. நம்ம இமான் அண்ணாச்சிக்கும், பிக் பாஸ பாத்து ’whats up man’ ன்னு கேட்க சொல்லிக்குடுக்குறாங்க. மத்தவங்களோட எப்படி மிங்கிள் ஆகுறதுன்னு பாக்குறாங்க போல. அதுக்கு ஸ்டெப் எடுக்குறது நல்ல விஷயம் தான். மத்தவங்க எல்லாம்…
தொடக்க நாளில் பிக் பாஸ் போட்டியாளர்களை கமல் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். வீட்டின் முதல் நாளில் 18 போட்டியாளர்களும், அவர்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அது தான் பிக் பாஸின் நேற்றைய நாளாக இருந்தது. எல்லாரையும் பாக்குற நமக்கே அவங்கள அவ்ளோ சீக்கிரம் பேரோடு நினைவுல வச்சிக்க முடியல, அப்புறம் அவங்களுக்கும் அப்டித்தானே இருக்கும். அவரவர் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். ஆரம்பமே பிக் பாஸுக்கு நஷ்டம் ஆயிடுச்சு, நிரூப் தோட்டத்தில் இருந்த குடைய உடைச்சிட்டாரு. அவர் இருக்குற உயரத்துக்கு நெட்டி முறிச்சாக்கூட பக்கத்துல இருக்குற பொருள்லாம் விழத்தான் செய்யும். பாவம் அவர் என்னப் பண்ணுவாரு. அப்புறம் நம்ம இமான் அண்ணாச்சி எல்லாருக்கும் ஆபத்பாண்டவனாய் வந்து போனார். பாத்ரூம்ல சுடுதண்ணிக்கு வலதா இடதான்னு எப்படி குழாய திருப்பணும் யோசிச்சிட்டு இருந்தவருக்கு உதவி செஞ்சார். அப்புறம் நாடியா தாமரை கிட்ட உங்க கூட பேசினா பாசிட்டிவ்வா இருக்குன்னு சொன்னாங்க. ஆனா தாமரைக்கு பாசிட்டிவ்னா என்னன்னு…
வழக்கம்போல கிசுகிசு பேசாதவர்களையும் பேச வைக்க வந்துவிட்டது பிக் பாஸ். அதனால நாமும் பிக் பாஸின் சுவாரஸமான விஷயங்கள் தினமும் பாக்கலாம்.. புதிய பிக்பாஸ் வீடு: பிக் பாஸ் சீசன் 5 வீடு சும்மா கலர்ஃபுல்லா வேற லெவல்ல இருந்தது. சங்கர் பட பாட்டுக்கு செட் போடுவாங்களே அந்த மாதிரி இருந்தது. எப்பவும் போல வரவேற்பறை, கிச்சன், பெட் ரூம் ஆண்களுக்கு தனியா, பெண்களுக்கு தனியா, டாய்லெட், இத்தோட வெளில உங்காந்து பேச நிறைய இருக்கைகள்லாம் போட்டிருக்காங்க, இந்த சீசனோட வீட்ல அதிகம் மாறி இருக்குறது ஜெயில் தான். நிச்சல் குளத்த பாதாள சிறையா மாத்தி இருக்காங்க. ’வீட்ல எது மாறினாலும் மாறலைனாலும் நான் எப்போதும் மக்களின் பிரதிநிதி தான், உங்கள் நான்’ என்று சொல்லி முதல் நாளில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார் கமலஹாசன். யார் அந்த போட்டியாளர்கள்?: 1.இசைவாணி முதல் போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் இசைவாணி. பெண் கானா பாடகர். இவரது தந்தையும்…
நேற்று ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் 2021 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக இடம்பிடித்துள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா மற்றும் ஜேசன் ராய் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினர். 4ஆவது ஓவருக்கு வந்த ஹசில்வுட்டின் பந்து, ஜேசன் ராயின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி தோனியிடம் கேட்ச் சென்றதால் முக்கிய விக்கெட் அவுட்டானது. அடுத்து வந்த கேன் வில்லியம்சன், ஃப்ராவோவின் யார்க்கர் பந்தில் வெளியேறினார். இதற்கு பிறகு சன்ரைசர்ஸ் அணியில் நல்ல ஆட்டத்தை எவராலும் கொடுக்க முடியவில்லை. ரன் ரேட்டும் குறைவாகவே இருந்தது. அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகினர். இறுதியில் சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களுக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.…
சூப்பர் சண்டேனா அது நேத்து தான். ஐபிஎல் மேட்ச் எப்பவும் தெறிக்க விடும், ஆனா நேத்து நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மேட்ச்ல மூச்சையே நிக்கவைக்குற அளவுக்கு கொண்டு போயிட்டாங்க. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்க தேர்வு செஞ்சாங்க. கொல்கத்தா அணில எந்த மாற்றமும் இல்லை, சென்னை அணில ப்ராவோக்கு பதிலா சாம் கரன கொண்டு வந்திருந்தாங்க. கொல்கத்தா அணி ஆரம்பத்துலயே அதிரடி காட்டுனாங்க… ஆனா விதி யார விட்டது? முதல் ஓவர்லையே சஹரோட பந்துல தடுமாறின கில் அடுத்த ஓவருக்கு எல்பிடபிள்யூனு வெளியேறினாரு. அடுத்த சென்னை அணியோட டார்கெட்டா இருந்தது வெங்கடேஷ் தான், பவர்பிளேவோட கடைசி ஓவருக்கு வந்த தாக்கூர் அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப்ல போட, அது பேட்டில் பட்டு எட்ஜாகி தோனிக்கு போக அவுட்டானாரு வெங்கடேஷ். அப்பாடா என்றிருந்தது சென்னைக்கு. அடுத்து மோர்கனுக்கு குறி வைக்க ஹசில்வுட் சிறப்பாக செய்து முடித்தார்.…
நேற்று ஷார்ஜாவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றது. மணல் புயலால டாஸ் போட கொஞ்சம் நேரம் எடுத்தாலும், டாஸ்ல வென்ற தோனி நல்ல முடிவு தான் எடுத்தாரு. தோனி ஃசேஸிங் பண்றோம்னு சொன்னாரு. அவருக்கு தெரியாதா மைதானத்தை பத்தி. வழக்கம் போல எந்த மாற்றமும் இல்ல சென்னை அணியில. ராயல் சேலஞ்சர்ஸ், டிம் டேவிட்டையும், நவ்தீப் சைனியையும் கொண்டு வந்தாங்க. கோலி டீம்ல கொண்டு வந்தத மாற்றதை விட அவர்கிட்ட இருந்த மாற்றம் தான் ஹைலைட்டே. முதல் பந்தே பவுண்டரில ஆரம்பிச்சு தொடர்ந்து சிக்ஸர், ஃபோர்ன்னு அதிரடியா ஆடினாரு. அதனால இந்த போட்டில கோலி புதுசாவே தெரிஞ்சாரு. இதுல எல்லாத்தையும் விட கெத்தே, தாக்கோரோட பந்துல நோ-லுக் ஷாட் அடிச்சது…
ஆம்புலன்ஸ் வந்தது.. ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தவளை அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சரில் ஏற்றினார்கள். “யாருங்க ஆம்புலன்ஸ்க்குக் கால் பண்ணுனது..?” எனக் கேட்டார் ஆம்புலன்ஸில் வந்தவர். சுற்றிலும் அமைதி.. யாரும் வாய் திறக்கவில்லை… யார்..? யார்..? என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களேயொழிய நான்தான் அழைத்தேன் என யாரும் ஒப்புக்கொள்ளவோ.. முன் வரவோ இல்லை.. “ஏங்க இப்படி அமைதியா இருந்திங்கன்னா எப்படிங்க… யாராவது ஒருத்தர் வாங்க… ஹாஸ்பிடல் வரைக்கும்…” என்று அந்த ஆம்புலன்ஸில் வந்தவர் கூற அதுவரை அங்கு கூடியிருந்த கூட்டம் மெதுவாகக் கலைய ஆரம்பித்தது.. உயிருக்கு போராடியபடி, துடித்துக் கொண்டிருக்கிற அவளை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இப்படி அலட்சியமாக இருக்கிறார்களே என ஆம்புலன்ஸ் ஊழியர்களின் மீது புகழேந்திக்குக் கோபம் வந்தது.. “சார் முதல்ல அவங்களை ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போங்க… யாரும் இல்ல போல அவங்களுக்கு…” என்று அந்த நபரிடம் புகழேந்தி சொன்னான். “இல்ல சார்… இவங்களை கொண்டு போற…
இன்னைக்கு ஐபிஎல் மேட்ச் அனல் தெறிக்க விடப்போற ஆட்டமா இருக்கப் போகுது-ன்றதுல சந்தேகமே இல்ல. ஏன்னா, ஆடப்போறது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ். ஐபிஎலோட இந்த இரண்டாம் பாகத்துல சென்னை சூப்பர் கிங்ஸ் புது வேகத்துடன் விளையாட்ட ஆரம்பிச்சிருக்குறாங்கன்னு மும்பை இண்டியன்ஸ் அணிய மண்ண கவ்வ வெச்சதுலயே தெரிஞ்சது. ஆனா ராயல் சேலஞ்சர்ஸ் கொஞ்சம் தடுமாற்றமாவே இருக்காங்க. கடைசியா நடந்த கொல்கத்தா அணியுடனான ஆட்டத்துல அவங்க 9 விக்கெட் வித்தியாசத்துல மாபெரும் தோல்வி அடைஞ்சதுல இருந்து இன்னும் மீளல. இன்னைக்கு நடக்கப்போற ஆட்டத்துல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதே வேகத்தோட விளையாடுவாங்களா? இல்லனா அடிபட்ட பாம்பா இருக்குற ராயல் சேலஞ்சர்ஸ் அணி அதிரடி காட்டப் போறாங்களான்றத நாம பொறுத்திருந்து தான் பார்க்கணும். இன்னைக்கு மேட்ச்ல இருக்குற சில சுவாரஸ்யமான விஷயங்கள பாக்கலாம். முதல்ல நம்ம கவனத்த ஈர்க்குறது இன்னைக்கு மேட்ச் நடக்கப்போற இடம்தான், ஷார்ஜா. ரொம்பவே சின்ன…
பேருந்துக்குப் பணம் வேண்டும் எனக் கேட்டு நின்று கொண்டிருந்த பெண்ணை பார்த்ததும் புகழேந்திக்கு கோபம் வந்தது… ” ஏம்மா… மனுசங்க என்ன மனநிலையில இருக்காங்கன்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டிங்களா..? ” என்றான் கோபமாக… ” சார்… கொஞ்சம் உதவி பண்ணுங்க சார்… நான் என் குழந்தையை தேடிப் போய்கிட்டு இருக்கேன்… சா..ர்… ” என்று அந்த பெண் சொல்லி கூட முடிக்கவில்லை… அதற்குள்ளாக அவளை இடைமறித்து… ” கடுப்ப கிளப்பாம போம்மா அங்கிட்டு… ஏற்கனவே வேதனையில இருக்கேன். நீ வேற வந்து டென்ஷன் ஏத்தாத… அசிங்கமா திட்டிருவேன்… ” ” சார் நான் பொய் சொல்லல சார்… கொஞ்சம் உதவி செய்ங்க சார்… ” ” தோ… பாரு… உன்ன மாதிரி ஆயிரம் பேரப் பாத்தாச்சு… இப்படி ஏமாத்தி காசு புடுங்கறதெல்லாம், வேற யாருகிட்டயாச்சும் வச்சுக்க… உடம்பு நல்லாத்தான இருக்கு… இப்படி எச்சத்தனமா பேசி பிச்ச எடுக்கறதுக்கு பதிலா, வேற…
இரண்டாவது சிகரெட்டை பற்றவைத்து இழுத்துக் கொண்டிருந்த புகழேந்தியை கடைக்கார இளைஞன் வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்… அதைப்பற்றியெல்லாம் புகழேந்தி கவலைப் படவில்லை… கவலைப்பட்டு என்னவாகிவிடப் போகிறது… சிகரெட்டின் புகை நுரையீரலைத் தொட்டு வெளியேறியது… புகைத்தபடியே, தான் அமர்ந்துவிட்டு எழுந்து வந்த அந்த கடற்கரையை நோக்கினான். அவன் அமர்ந்த இடத்தில் இப்போது ஒரு காதல் ஜோடி அமர்ந்து கடலைப் பார்த்தபடி கடலை போட்டுக் கொண்டிருந்தது. மறுபடியும் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. இன்று இவர்கள் அமர்ந்து இருக்கின்ற அதே இடத்தில்தான் நேற்று புகழேந்தி தன் காதலியுடன் அமர்ந்திருந்தான். இன்று அவள் அவனோடு இல்லை.. மறுபடியும் அவன் பழைய ஞாபகங்களுக்குள் மூழ்கினான். ” வாட்… என்ன சொல்ற புகழ்..?” ஆவேசமாக பேசிய ராதிகாவை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழித்த புகழேந்தி… ” ஆமா ராதிகா… டாக்டர் சொன்னதை முழுசா உன்கிட்ட சொல்லிட்டேன்… இதுக்கப்பறம் நீ தான் முடிவெடுக்கனும்…” என்றான். ” இதுல முடிவெடுக்கறதுக்கு என்ன…