Author: இரா.மன்னர் மன்னன்

நேற்று நடந்த முதல் குவாலிபையர் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி அடைந்து பைனல்ஸ்க்கு முன்னேறியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை ஆரம்பித்தது டெல்லி அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்தனர் ஷிகர் தவன் மற்றும் ப்ரித்வி ஷா. சென்னைக்கு ஆரம்பமே அசத்தலாக இருந்தது, ஷிகர் தவன் 4ஆவது ஓவரிலேயே 36 ரன்களுடன் வெளியேற, ப்ரித்வி ஷா மட்டும் நிதானமாக ஆடி ரன் எடுத்தார். விக்கெட்கள் விழாததால் வேகம் கூட்டி அற்புதமாக விளையாடிய ப்ரித்வி ஷா 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஜடேஜா ஓவரில் அவுட்டானார். பின்வந்த ஸ்ரேயஸ் அயர், அக்ஷர் பட்டேல் அடுத்தடுத்து அவுட்டாகிட, ரிஷப் பந்த் மற்றும் ஹெட்மயரின் கூட்டணி டெல்லி அணிக்கு ரன்களை சேர்த்தது. ரிஷப்…

Read More

என்னடா பிக் பாஸ்ல இன்னும் யாரும் சண்டை போடலையேன்னு பிக் பாஸ்க்கே தோனிடும் போல… அந்தளவுக்கு பிக் பாஸ் கொஞ்சம் போரா போகுது. ஒரு சண்டையும் வரமாட்டேங்குது, சுவாரஸ்யமும் இல்லாம போகுது. நான்காம் நாள் இரவு நடந்த சம்பவத்துடன்தான் பிக் பாஸ் தொடங்கியது. தாமரை செல்விக்கு ராம்ப் வாக் சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் ஐக்கி. அது எப்படி இருக்க வேண்டும் என்று நமீதா நடந்தும் காட்டினார் அதற்கு தாமரையின் வார்த்தையும், பார்வையும் நமீதாவிற்கு கோபம் வரவழைத்தது. அத்தோடவே தாமரை செல்வி நிறுத்தி இருந்தால் பரவாயில்லை, தாமரையின் வெள்ளந்தி சிரிப்பால் நமீதாவுக்கு கோபம் இன்னும் அதிகமானது. இதை பிரியங்கா எச்சரித்தும், தாமரை நிறுத்தவில்லை. அப்புறம் படுக்கையில் ’நமீதா என்கிட்ட வெச்சுக்காதீங்க அசிங்கமா பேசிடுவேன்’ – அப்டின்னு கடுமையாகவே பேசிவிட்டார் தாமரையிடம். தாமரைக்கு சற்றென்று முகமே மாறியது. அப்புறம்தான் சூழ்நிலை புரிந்து, நமீதாவிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால் நமீதா அதிக கோபத்தில் இருந்ததால் மன்னிக்கவில்லை.…

Read More

ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் முடிந்த நிலையில், முதல் குவாலிபையர் போட்டி இன்று துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்குக்கிடையே நடைபெறவுள்ளது.  லீக் போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. துபாய் ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச் தான். அதே மாதிரி ஃபெளலிங்ல ஸ்லோயர் மற்றும் ஸ்பின் பால்களுக்கு சாதகமாவும் இருந்திருக்கு. துபாய் ஸ்டேடியம்ல இது வரைக்கும் சேஸிங் பண்ணவங்கதான் அதிக முறை வெற்றி பெற்றிருக்காங்க. அதனால் தோனி டாஸ் ஜெயிச்சா, சேஸிங்தான் எடுப்பார்ன்னு நம்பலாம். இந்த ஸ்டேடியம் சேஸிங்கு சாதகமா இருக்குன்னு சொன்னாலும், இதோட அதிகபட்ச ரன்னே 130, 140 தான். இதுவரைக்கும் நடந்த லீக் போட்டிகள்ல சென்னை மற்றும் டெல்லி அணி மோதின மொத்த ஆட்டங்கள்ல, அதிக முறை ஜெயிச்சிருக்குறது என்னவோ சென்னை…

Read More

ஐபிஎல்லில் நேற்று இரண்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடந்தன. மும்பை இண்டியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனும் மோதின. இதில் மும்பை அணி வென்றால் ஃபிளே ஆஃப்பிற்கு செல்ல வாய்ப்பு இருந்தது. அதுவும் அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும், அதாவது மும்பை அணி அதிக ரன்கள் எடுத்து எதிரணியை சொற்ப ரன்களில் வீழ்த்த வேண்டும் என்பதே மும்பையின் முன்னிருந்த ஒரே வாய்ப்பு. அது கடினமும் கூட. நேற்று நடந்த போட்டில் மும்பை அணி பிளே ஆஃப்பிற்கு செல்லவில்லை என்றாலும், மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் இஷான் கிஷனின் சாதனைதான். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, ஆரம்பத்தில் இருந்தே பந்துகளை அடித்து நொறுக்கினார்கள். அதிலும் தொடக்க ஆட்டக்காரராக வந்த இஷான் கிஷன் ஃபெளலர்களின் பந்துகளை தூக்கி அடித்து தெறிக்க விட்டார். வெறும் 16 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை எட்டினார் இஷான் கிஷன். இதுவரை…

Read More

மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மலேரியா தடுப்பூசி என்ற பெருமையும் இதற்குக் கிடைத்து உள்ளது. மலேரியா கொசு மூலம் பரவும் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. இது கொரோனா வைரஸை விடவும் ஆபத்தானது. இந்த மலேரியா ஒட்டுண்ணி சீக்கிரமே நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தளர்த்திவிடும். ஆயிரக்கனக்கான ஆண்டுகளாக மனிதகுலத்தின் மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக மலேரியா இருந்துள்ளது. முதலில் இது கெட்ட காற்றால் பரவும் நோய் என கருதப்பட்டது. மலேரியா – என்ற சொல்லுக்கே கெட்ட காற்று என்றுதான் அர்த்தம். பின்னரே மலேரியா கொசுவால் பரவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் உலக அளவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மலேரியாவால் இறந்துள்ளனர். இதில் அதிர்ச்சியூட்டக் கூடிய பகுதி, இப்படி இறப்பவர்களில் பெரும்பாலானோர் 5 வயதிற்குட்டப்பட்ட குழந்தைகள். அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை மலேரியாவால் இறக்கின்றது. மலேரியாவால்…

Read More

நேற்று துபாயில் நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 13ஆவது ஓவரிலேயே இலக்கை அடைந்து ஆட்டத்தை முடித்து அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த சென்னை அணி, 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஓப்பனர்களாக வந்த ருதுராஜ் மற்றும் டூப்ளஸி பவர்பிளே ஓவரிலேயே தடுமாறினார்கள். ருதுராஜ் பந்துகளை கீளியர் செய்வதற்கே கஷ்டப்பட்டார். 12 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் பந்தில் கேட்ச் கொடுத்து சென்றார். டூப்ளஸிக்கு பஞ்சாப் அணியிடம் நல்ல ஸ்ட்ரைக் ரேட் உள்ளதால், நிதானமாக ஆடினார். அதனாலேயே என்னவோ டூப்ளஸி தவிர மற்ற அனைவரும் வந்த வேகத்தில் ஃபெவிலியனுக்கு திரும்பினர். மொயின் அலி ரன் எதுவும் எடுக்காமல் சுஞ்சுவிடம் கேட்ச் கொடுத்து சென்றார். உத்தப்பா 2 ரன்களோடு வெளியேறினார். ராயுடு 4 ரன்களில் அவுட்டானார்.…

Read More

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. பட்டாக் கத்தியால் கேக் வெட்டுவது, பொது இடங்களில் மோதிக் கொள்வது, படுகொலைகள், சமூக விரோத செயல்கள் எல்லாம் தினமும் செய்திகளில் இடம்பெறுகின்றன. இந்நிலையில் உயர்நீதிமன்றமே ரவுடிகள் தொடர்பான வழக்குகளின் போது, ‘கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ரவுடிகளை அடக்க என்றே தனிச் சட்டங்கள் உள்ளன. அப்படி ஒரு சட்டத்தை தமிழக அரசு ஏன் இயற்றக் கூடாது?’ – என்று கேட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில், தமிழக சட்டப் பேரவைக் கூடியபோது மாதவரம் திமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் இது குறித்து பேரவையில் பேசினார். ‘மகாராஷ்டிர மாநிலத்தில் ரவுடிகளுக்கு எதிராக தனி சட்டங்கள் உள்ளது போல தமிழகத்திலும் இயற்றப்பட வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது அதைத்தான்’ என்றார். அவரது பேச்சு பேரவையை ஈர்த்தது. பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கியதாகத் தெரிகின்றது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில், ரவுடி…

Read More

’காத்து வாக்குல ரெண்டு காதல்…’ படத்துல இருந்து ‘டூட்டூ டூட்டூ…’ பாடல் ஒலிக்க… தூக்கம் கலையாமல் அரை போதையில் ஆடினாங்க ஹவுஸ்மேட்ஸ் எல்லாம்…  குழந்தைகளுக்கு எல்லாம் போடுவாங்கள்ல உச்சிக் குடுமி, அப்டி ஒரு குடுமி போட்டு, சின்னபொண்ணுக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கி விபூதியும் வச்சுக்கிட்டு போனாரு அபிஷேக். இவன் நல்லவனா, கெட்டவனா மொமண்ட்! டைனிங் டேபிள்ல பாவ்னிய பார்த்து, ’நம்ம ஃபீலிங்ஸ… அது கஷ்டமா இருந்தாலும் சரி சோகமா இருந்தாலும் சரி… ஒரு ஆள்கிட்ட சொல்லலாம்னா அது பாவ்னி தான்’ அப்டின்ன அபிஷேக், உடனே கேமராவ பாத்து ’டேய் பசங்களா இந்த பொண்னுக்கு 31 வயசாகுது டா…. ஓடிடுங்கடா’ன்னு சொல்ல, ஏன்னு பாவ்னி கேக்க, ’பின்ன… உன்ன சின்ன பொண்ணுன்னு நினைச்சு ஸ்கூல் பசங்கல்லாம் வந்து லவ் லெட்டர் நீட்டப்போறாங்க…’ன்னு சொல்ல, ஆல் ஏஜ் குரூப்ஸ் ஆர் அக்சப்டட்னு சிரிச்சிக்கிட்டே போயிட்டாங்க பாவ்னி… அடுத்து ’கத சொல்லட்டுமா…’ டாஸ்க்குக்கு வந்தவர் நமீதா. ’திருநங்கைகள்லாம்…

Read More

நேத்து நடந்த பஞ்சாப் மற்றும் சென்னை அணியின் போட்டியில் 42 பந்துக்கு 98 ரன் எடுத்த ராகுல் வைரல் ஆனாரோ இல்லையோ, நம்ம தீபக் சஹர் வைரல் ஆயிட்டாரு. மேட்ச் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறமா, ஆடியன்ஸ்ல இருக்குற ஒரு பொண்ணுகிட்ட பேசிட்டு இருந்த தீபக் சஹார், திடீர்னு தன்னோட பாக்கெட்டுல இருக்குற மோதிரத்தை எடுத்து நீட்டி, மண்டியிட்டு ஃப்ரோபோஸ் பண்ணாரு. ஸ்டேடியமே ஒரு நிமிஷம் ஆ..ன்னு பாக்குது. ஆனா நம்ம தீபக் அதையெல்லாம் கண்டுக்காம நிறைஞ்ச புன்னகையோட மோதிரத்தை நீட்ட, அந்த பொண்ணு ஷாக்குலயே ஓகே சொல்லி கைய நீட்ட, தீபக் மோதிரத்தை போட்டு கட்டி அணைத்து கொண்டார். அது சரி இப்படி ஒருத்தன் ஃப்ரோபோஸ் பண்ணா எந்த பொண்ணுதாங்க வேண்டான்னு சொல்லும்?. பாக்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்த ஸ்டேடியமே சில நிமிஷத்துக்கு வேற மாதிரி ஆயிடுச்சு. என்னடா சிஎஸ்கே தோத்துடுச்சே, ராகுல் கலக்கிட்டாருல அப்டின்னு பேசிக்கிட்டு இருக்கும் போது …

Read More

காலையில் பாட்டு போடுறதுக்குள்ளயே இமான், மதுமிதா, நிரூப் எல்லாரும் எந்துவிட்டார்கள். மத்தவங்களுக்கு தான் வைத்த செல்லப் பெயரை சொல்லிக்கொண்டிருந்தார் அண்ணாச்சி. பிறகு 8 மணிக்கு ஒலித்தது ’வாத்தி கம்மிங்’ பாடல். 3ஆம் நாள் என்பதால் ஓரளவு எல்லோரும் ஆடினர்கள்.  வெளியே பெய்து கொண்டிருந்த மழையை ரசித்து அதில் நனைந்து கொண்டிருந்தார் ராஜீ. அப்டியே ஒரு ஹீரோ ஃபீலிங்கு போயிட்டார். ஐக்கியும், அபிஷேக்கும் மழை தண்ணிய மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டு விளையாடினாங்க. அப்புறம் டைனிங் டேபிள்ல நம்ம சின்னபொண்ணு கானங்கருங்குயிலே பாட அனைவரும் தாளம் தட்டினார்கள். அப்புறம் ’ஒரு கத சொல்லட்டுமா சார்…’ டாஸ்க்குக்கு பேச வந்தார் நம்ம இமான் அண்ணாச்சி. மற்றவர்களால் ஏற்பட்ட சினிமா ஆசையையும், சினிமாவுக்காக ஊரைவிட்டு வந்த கதை, 18 வருடத்தில் எந்த சினிமாவும் அழைக்கவில்லை என்பதையும், தனக்கு வாய்ப்பு கொடுத்த சின்ன தொலைக்காட்சியில் தன்னை 100 சதவீதம் நிரூபித்ததால் என் நிலை இன்று மாறியுள்ளது என்றும் அழாமல்…

Read More