Author: இரா.மன்னர் மன்னன்

சந்தேகமேயில்லாமல் உலகின் தலைசிறந்த வரலாற்று நூல்களில் ஒன்று சேப்பியன்ஸ். வரலாறு குறித்த புதிய செய்திகளைத் தருவது மட்டுமே வரலாற்று நூல்களின் பணி அல்ல. மாறாக, வரலாறு மீதான புதிய கோணத்தை வாசகர்களுக்குக் காண்பிக்கும் பணியும் வரலாற்று நூல்களுக்கு உள்ளது. அப்படிப்பட்ட வெகுசில ஆழமான வரலாற்று நூல்களில் ஒன்றுதான் சேப்பியன்ஸ். மனிதனின் உயிரியல் பெயர் ’ஹோமோ சேப்பியன்ஸ்’. ஒருகாலத்தில் வால் இல்லாத குரங்காக இருந்த மனிதன் எப்படி இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் உயிரினமாக மாறி இருக்கிறான் என்பதை மிக நேர்த்தியாக விளக்குகின்றது இந்த சேப்பியன்ஸ் நூல். சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அறிவுப் புரட்சி, சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வேளாண் புரட்சி, சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அறிவியல் புரட்சி – என்ற மூன்று மிக முக்கிய தருணங்களை மனித இனம் எப்படிக் கடந்து வந்தது என்ற பயணம் பல அதிர்ச்சிக்கு உரிய…

Read More

ஒரு கருத்தை எப்படி மிகத் தெளிவாகவும், அதே சமயம் மிகச் சுருக்கமாகவும் சொல்ல முடியும்? – என்பதற்கான உதாரணம்தான் திருக்குறள். ஒவ்வொரு குறளிலும் 7 சொற்கள் மட்டுமே இருந்தாலும், அந்தக் குறள்கள் சொல்லிச் சென்ற செய்திகள் மிகவும் பெரியவை. திருக்குறளின் அமைப்பை ஆராய்ந்த பல தமிழறிஞர்கள் திருக்குறள் நேரடியாகச் சொல்லாத, ஆனால் தனது அமைப்பு வாயிலாகச் சொல்கின்ற மறைமுக செய்திகளும் திருக்குறளில் நிறைய உள்ளன என்று எடுத்துக் காட்டி உள்ளனர். அவற்றில் ஒன்றுதான் ‘உதடு ஒட்டும் குறள், உதடு ஒட்டாத குறள்’ என்பது. சில ஆண்டுகள் முன்பு பேருந்துகளில் பயணித்தவர்கள், ‘நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொனால்தான் உதடுகள் கூட ஒட்டும்’ என்ற வரிகளைப் படித்திருக்கலாம். தமிழில் உள்ள வார்த்தைகளை ‘உதடுகள் ஒட்டும் வார்த்தைகள், ஒட்டாத வார்த்தைகள்’ என்று இரண்டு விதமாகப் பிரிக்கவும் முடியும். ஆனால் கவிதை எழுதுபவர்கள் கூட இதையெல்லாம் கவனிப்பது இல்லை. ஆனால்…

Read More

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் ஒரே பாட்டி நடித்து இருந்தார். பின்னர் அது குறித்து ஊடகங்கள் விசாரித்த போதுதான் அவர் பெயர் கஸ்தூரி பாட்டி என்பதும் தொழில் முறையில் விளம்பரங்களில் நடித்தவர் என்பதும் தெரிய வந்தது.  இந்த சம்பவமானது பலம் பொருந்திய அரசியல் கட்சிகள் எவ்வளவு நாடகத் தனமாக விளம்பரங்களை உருவாக்குகின்றன என்பதை ஒரு விவாதப் பொருளாக்கியது. ஆனால் அந்த சம்பவத்தில் இருந்து தமிழக அரசியல் கட்சிகள் எந்தப் பாடத்தையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கான போஸ்டர் விளம்பரங்கள் காட்டுகின்றன. இந்த போஸ்டர் விளம்பரங்களிலும் திமுக-அதிமுக ஆகிய இரண்டு தரப்புகளும் ஒரே பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உள்ளனர். கடந்த முறை கஸ்தூரிப் பாட்டி ‘அது என்ன கட்சி விளம்பரம்-ன்னு கேட்காம நடிச்சுட்டேன்’ என்று விளக்கம் கொடுத்து இருந்தார். இம்முறை இந்தப் பெண் ஏன்…

Read More

உலக வரலாற்றின்படி முதன் முதலாக செல்ஃபோன் பயன்படுத்தப்பட்டது 1973ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டின் ஏப்ரல் 3ஆம் நாளில் மோடரோலா நிறுவனத்தின் ஊழியர் மார்ட்டின் கூப்பர் என்பவர் மன்ஹாட்டன் தீவில் இருந்து முதன் முதலாக செல்ஃபோனைப் பயன்படுத்தி அழைத்தார், அந்த அழைப்பை நியூ ஜெர்சியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தின் தலைமை நிலையத்தினர் எடுத்தார்கள். இந்தியாவில் முதல் செல்போன் அழைப்பு 1995ஆம் ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அன்றைய மேற்கு வங்க மாநில முதல்வர் ஜோதி பாசு அவர்களால் மேற்கொள்ளப்பட்டது, மறுமுனையில் அன்றைய தகவல் தொழில்நுட்பத்துறை மத்திய அமைச்சர் சுக்ராம் பேசினார். இதையெல்லாம் இங்கு சொல்லக் காரணம் தற்போது இணையவாசிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ள ஒரு திரைப்படக் காட்சிதான். உலகின் ஈடு இணையற்ற நடிகர்களில் ஒருவரான சார்ளி சாப்ளின் நடிப்பில் வந்த ‘தி சர்க்கஸ்’ என்ற படத்தில் போகிற போக்கில் வரும் அந்தக் காட்சியில், ஒரு பெண் தன் கையில் எதையோ வைத்திருக்கிறார், அதைத்…

Read More

ஈரமான ரோஜாவே…, காதல் ரோஜாவே…, ரோஜா ரோஜா… – என்று தமிழில் ரோஜாவைப் பற்றி நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன. இதனால் தமிழ் மக்கள் ரோஜா என்பது பொதுவாக காதலுக்கே உரிய சின்னம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உலக அளவில் ரோஜா என்பது காதல் தவிர அன்பு, மரியாதை, கவன ஈர்ப்பு, தூய்மையை வெளிப்படுத்துதல் – எனப் பலவற்றுக்கும் பயன்படுகிறது. வண்ண வண்ண ரோஜாவின் பின்னே உள்ள பலவித அர்த்தங்கள் என்னென்ன? ரோஜா மூலமாக செய்தியைச் சொல்வது எப்படி ? விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்… ரோஜா – என்று சொன்னாலேயே அது பொதுவாகச் சிகப்பு நிற ரோஜாவையே குறிக்கும். பெரும்பாலும் காதலை வெளிப்படுத்தக் கொடுக்கப்படுவது இந்த சிகப்பு நிற ரோஜாதான். அதே சமயம் வெளிநாடுகளில் மூத்தவர்கள் மீதான மரியாதையை வெளிப்படுத்தவும், ஒரு விவகாரத்தில் தனக்கு அதீத ஆர்வம் உள்ளது என்பதைக் கூறவும் கூட சிகப்பு நிற ரோஜாவைப் பயன்படுத்துகிறார்கள். அடர் சிவப்பு…

Read More

ரியாலிட்டி ஷோ – என்று அழைக்கப்படும் ஒரு வகைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வரலாற்றையும், இந்த ரியாலிட்டி ஷோ-க்கள் எப்படி பொய்யை உண்மை போல உருவாக்குகின்றன என்ற ரகசியத்தையும், தொலைக்காட்சிகள் எப்படி இயங்குகின்றன?, டி.ஆர்.பி. என்றால் என்ன? – என்பவை போன்ற பல முன்னறிமுகம் இல்லாத, கட்டாயம் தெரிந்து கொள்ளவும் வேண்டிய தகவல்களையும் விரிவாகப் போட்டு உடைக்கும் ஒரு நாவல்தான் இந்த மெய் நிகரி. மெய் அல்லாத மெய்க்கு நிகரான ஒன்று என்பது ’மெய் நிகரி’ என்ற சொல்லுக்கான பொருள். இந்த நாவலைப் படிக்கும் போது அந்தப் பொருளின் ஆழத்தை நீங்கள் உணரக் கூடும். விக்கிபீடியாவில் படித்தால் கூட சற்று தலை சுற்றலாம் – அந்த அளவுக்கு கடினமான உள்ளடக்கங்கள் இந்த நூலில் உள்ளன. ஆனால் அவற்றைக் கபிலன் வைரமுத்து போகிற போக்கில் மிக எளிமையாக விளக்கி உள்ளார். தமிழில் காட்சி ஊடகங்கள் தொடர்பாக வந்துள்ள ஒரே விரிவான படைப்பு என்று இதனைச்…

Read More

பல திருடர்கள் திருடிய பொருளை விற்கும் போதுதான் சிக்குவார்கள். ஆனால் நாம் பார்க்கப் போவது பொருளை திருடாமலேயே விற்கும் திறமையைப் பெற்ற ஒரு அசகாய திருடனைப் பற்றி. நடிகர் வடிவேலு ஒரு படத்தில் அரசுப் பேருந்துக்கு விலை பேசிக் கொண்டிருப்பார். அதைப் பார்க்கும் கண்டெக்டர், ‘இது உங்கள் சொத்து’ என்று வடிவேலுவை சொல்லவைத்து அடி வெளுப்பார். இதைப் பார்த்து சிரிக்கும் எவருக்கும், ‘இப்படியெல்லாம் ஏமாத்த முடியுமா? எல்லாம் நகைச்சுவைக்கு மட்டும்தான்’ என்று தோன்றி இருக்கும். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு திருடன் உண்மையாகவே அரசாங்கச் சொத்துகளை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்று கொள்ளை கொள்ளையாக பணம் அள்ளி இருக்கிறார். இத்தனைக்கும் இவர் விற்றது ஏதோ சிறிய சிறிய பொருட்களையோ, அதிகாரிகளின் வண்டிகளையோ, அரசாங்க வாகனத்தையோ அல்ல நினைவுச் சின்னங்களை. அதுவும் அமெரிக்க சுதந்திர தேவி சிலை, அதிபரின் வெள்ளை மாளிகை, பிக் பென் கடிகாரம் போன்ற உலகப் புகழ்பெற்ற நினைவுச் சிலைகளை!. படிக்கும்…

Read More

கொரோனா பரவல் காரணமாக 9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசால் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு ஜனவரியில் 10,12ஆம் வகுப்புகளும், பிப்ரவரியில் 9-12 வரையிலான அனைத்து வகுப்புகளும் இயங்கத் தொடங்கின. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் 12ஆம் வகுப்பு தவிர்த்த பிற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? – என்று ஆசிரியர் சங்கங்களும் பெற்றோர் ஆசிரியர் அமைப்புகளும் கேட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்று…

Read More

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் ஆர்க்காடு இளவரசரிடம் ஆதரவு கேட்டார். நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரங்கள் தொடங்கியதில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினின் மகன், திமுகவின் இளைஞரணிச் செயலாளர் என்பதால் உதயநிதி திமுகவின் பேச்சாளராக தமிழ்நாடு முழுக்க பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில் தற்போது சென்னை திரும்பி உள்ள உதயநிதி, தனது தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கினார். இதன் முதல் கட்டமாக ஆர்க்காடு நவாப் குடும்பத்தின் அதிகாரபூர்வ இல்லமான அமீர் மகாலில் ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியை உதய நிதி ஸ்டாலின் சந்தித்து ஆதரவு கேட்டார். இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்க்காடு இளவரசர் ‘இசுலாமியர்கள் அதிகம் உள்ள பழைமை வாய்ந்த…

Read More