9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

SHARE

கொரோனா பரவல் காரணமாக 9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசால் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு ஜனவரியில் 10,12ஆம் வகுப்புகளும், பிப்ரவரியில் 9-12 வரையிலான அனைத்து வகுப்புகளும் இயங்கத் தொடங்கின.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் 12ஆம் வகுப்பு தவிர்த்த பிற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? – என்று ஆசிரியர் சங்கங்களும் பெற்றோர் ஆசிரியர் அமைப்புகளும் கேட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்று வெளியிடப்பட்ட அரசாணையில், மார்ச் 22 முதல் 9-11ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே இந்த மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து என பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்து உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு நடக்கும்.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

Admin

Leave a Comment