Close Menu
Mei EzhuththuMei Ezhuththu
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Mei EzhuththuMei Ezhuththu
Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
Mei EzhuththuMei Ezhuththu
Facebook X (Twitter) Instagram
Home » வெள்ளை மாளிகையையே விற்ற திருடன்!.
வினோதங்கள்

வெள்ளை மாளிகையையே விற்ற திருடன்!.

இரா.மன்னர் மன்னன்By இரா.மன்னர் மன்னன்March 20, 2021Updated:March 22, 202102 Mins Read0 Views
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Reddit Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
SHARE

பல திருடர்கள் திருடிய பொருளை விற்கும் போதுதான் சிக்குவார்கள். ஆனால் நாம் பார்க்கப் போவது பொருளை திருடாமலேயே விற்கும் திறமையைப் பெற்ற ஒரு அசகாய திருடனைப் பற்றி.

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் அரசுப் பேருந்துக்கு விலை பேசிக் கொண்டிருப்பார். அதைப் பார்க்கும் கண்டெக்டர், ‘இது உங்கள் சொத்து’ என்று வடிவேலுவை சொல்லவைத்து அடி வெளுப்பார். இதைப் பார்த்து சிரிக்கும் எவருக்கும், ‘இப்படியெல்லாம் ஏமாத்த முடியுமா? எல்லாம் நகைச்சுவைக்கு மட்டும்தான்’ என்று தோன்றி இருக்கும்.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு திருடன் உண்மையாகவே அரசாங்கச் சொத்துகளை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்று கொள்ளை கொள்ளையாக பணம் அள்ளி இருக்கிறார். இத்தனைக்கும் இவர் விற்றது ஏதோ சிறிய சிறிய பொருட்களையோ, அதிகாரிகளின் வண்டிகளையோ, அரசாங்க வாகனத்தையோ அல்ல நினைவுச் சின்னங்களை. அதுவும் அமெரிக்க சுதந்திர தேவி சிலை, அதிபரின் வெள்ளை மாளிகை, பிக் பென் கடிகாரம் போன்ற உலகப் புகழ்பெற்ற நினைவுச் சிலைகளை!. படிக்கும் போதே தலைசுற்ற வைக்கும் இந்த சாகசங்களைச் செய்த அந்தத் திருடனின் பெயர் – ஆர்தர் பெர்குர்சன்.

1920களில் முதலாம் உலகப் போரின் பாதிப்புகளில் இருந்து வெளியே வர முடியாமல் இங்கிலாந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது அமெரிக்கர்களிடம் பணம் விளையாடியது.

இந்தச் சூழலில் ஒருநாள் இங்கிலாந்தில் உள்ள ‘நெல்சன் தூண்’ என்ற நினைவுச் சின்னத்தை ஒரு அமெரிக்கப் பயணி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் தன்னை ஒரு சுற்றுலா வழிகாட்டி என்றும், உலகப் போரில் ஏற்பட்ட கடன்களைத் தீர்ப்பதற்காக புராதன நினைவுச் சின்னங்களை விற்றுத் தருமாறு இங்கிலாந்து அரசாங்கம் தன்னிடம் கேட்டு உள்ளதாகவும் ஆர்தர் சொல்ல. அதை அப்படியே அந்தப் பயணியும் நம்பினார்.

6000 பிரிட்டிஷ் பவுண்டுகள் என்ற மிகப் பெரிய தொகைக்கு அவர் ஆர்தரிடம் இருந்து நெல்சன் தூணையும் வாங்கினார். பின்னர் நெல்சன் தூணை வீட்டுக்குக் கொண்டுபோக அவர் சித்தாள்களோடு வந்தபோதுதான் உண்மை தெரிய வந்தது.

இது போலவே உலகப் புகழ்பெற்ற பிக்பென் கடிகாரத்தை விலைபேசி 1000 பவுண்ட்களையும், இங்கிலாந்து அரசி வாழும் பக்கிங்ஹாம் அரண்மனையை விலைபேசி 2 ஆயிரம் பவுண்ட்களையும் இவர் முன் பணமாகப் பெற்றுக் கம்பி நீட்டினார்.

இதனால் இங்கிலாந்து போலீஸ் இவரைத் தேடத் தொடங்க, தனக்கு ஏற்ற அடிமைகள் அமெரிக்காவில் இருப்பதை அறிந்த ஆர்த்தர் அமெரிக்காவுக்கே போனார். அங்கும் வெள்ளை மாளிகையை ஒரு சுற்றுலாப் பயணிக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு விட்டு, முதல் ஆண்டுக்கான குத்தகைக் கட்டணமாக 1 லட்சம் அமெரிக்க டாலர்களைப் பெற்றார்.

இப்படி வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த ஆர்தரின் வாழ்வில் ஒருநாள், அமெரிக்கா வந்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் சுதந்திர தேவி சிலையை விற்கும் போது, அந்த ஆஸ்திரேலியரிடம் அட்வான்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டு ஓடி விடாமல், முழுப் பணமும் வரும் வரை ஆர்தர் காத்திருந்தார். இதனால் முதன் முறையாக காவல்துறையிடம் அவர் மாட்டினார்.

ஆனாலும் அவரிடம் ஏமார்ந்த பலரும் அதை வெளியே சொல்லாத காரணத்தால் காவல்துறை கைப்பற்றியது போக நிறைய பணம் ஆர்த்தரிடம் இருந்தது. மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர். விடுதலைக்குப் பின்னர் 1930களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற சூதாட்ட நகரமான லாஸ் ஏன்சல்ஸ்-சில் சகல சொத்துகளோடு நிம்மதியாக வாழ்ந்து 1938ல் மறைந்தார். அவர் இறந்த 1938ஆவது ஆண்டு வரை அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஆர்தர் எப்போதும் சாத்தியமே இல்லாத மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அவர் தன்னை ஒரு மோசடியாளன் என்று நினைக்காமல், மோசடிக் கலை வல்லுநராகவே கருதிக் கொண்டதாகவும் குற்றவியல் ஆய்வாளர்கள் அவனைக் குறிப்பிடுகின்றனர். ஆர்தர் அரசியலுக்கு வரவில்லை என்ற வகையில் அது அமெரிக்காவுக்கு நல்ல காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
Arthur Furguson cheater
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
இரா.மன்னர் மன்னன்
  • Website

Related Posts

உடைந்த பாறை… உறைந்த மக்கள்… ஜப்பானை அச்சுறுத்தும் ஒன்பதுவால் நரி!.

March 24, 2022

லிட்டில் எஞ்சினியர் – இணையத்தைக் கலக்கும் சின்சியர் சிலந்தி

September 3, 2021

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

August 23, 2021
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202124 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 202111 Views

சர்க்கரை ஏன் அஸ்கா என்று அழைக்கப்படுகிறது?

March 28, 20216 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

June 14, 20215 Views
Don't Miss

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023
SHARE

உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டி நாளை(நவம்பர் 15-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும்.இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து…


SHARE

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023

”மயில்சாமி ஒருநாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் ஏழையா இருப்பான்”: விவேக்கின் பேச்சு வைரல்

February 20, 2023
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo
About Us
About Us

Tamil News Website

Our Picks

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

May 31, 2022

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

September 24, 2021

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

September 16, 2021
Most Popular

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202124 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 202111 Views

சர்க்கரை ஏன் அஸ்கா என்று அழைக்கப்படுகிறது?

March 28, 20216 Views
Mei Ezhuththu
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Threads
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
© 2025 Mei Ezhuththu Designed by ASK Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.