Author: இரா.மன்னர் மன்னன்

மகாபாரதத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர் கர்ணன். கர்ணனின் பெயர் ஒரு காரணப் பெயர் ஆகும். பிறக்கும் போதே காதில் குண்டலங்கள், மார்பில் கவசம் ஆகியவற்ரோடு பிறந்த குழந்தை என்று மகாபரதத்தில் கர்ணன் வர்ணிக்கப்படுகின்றான். அவனது காதில் இருந்த குண்டலங்களே அவனது பெயருக்குக் காரணமாக அமைந்தன. வட மொழியில் ‘கர்ண’ என்றால் காது. எனவே கர்ணத்தில் அணிகலனோடு பிறந்தவன் கர்ணன் ஆனான். கர்ண – என்ற சொல் தமிழிலும் புழங்கிவருகிறது. மிக மோசமான செய்தியை ’கர்ண கொடூரம்’ என்று சொல்கிறோம். காதில் கேட்கவே முடியாத அளவுக்கு மோசமானது என்பதே இதன் பின்னுள்ள பொருள். ஒரு செய்தியை வாழ்மொழியாக மட்டுமே கேள்விப்படும்போது அதைக் ‘கர்ண பரம்பரைச் செய்தி’ என்கிறோம். செவிவழிச் செய்தி என்பது இதற்கு நிகரான வேறு தொடர். அதேசமயம் வடமொழியில் கரண – என்று இருந்த சொல்லும் தமிழில் கர்ண என்று புழங்கியது உண்டு. கரண என்ற சொல்லுக்கு உதவியாளன் அல்லது…

Read More

அபிநயா அருள்குமார் பள்ளிக்கூடத்துக்கு ஒருத்தர் கிளம்பிட்டா, மத்த எல்லாரையும் அவங்க வீட்டுக்கே போய் அழைச்சுக்கிட்டு, எல்லாரும் சேர்ந்துதாள் பள்ளோடம் போகணும்-ன்னு முதல்நாள் பள்ளிக்கூடத்தில் எங்களுக்குள் ஒரு தீர்மானம் போட்டோம்!. அப்படித்தான் ஒன்னுவிட்ட மாமா பையன கூப்பிட்டு போக நாங்க 4 பேரு போனோம்.. பார்த்தா அவங்க வீடு ஒரே அமர்க்களமா இருந்துச்சு… மாமன் மகனும் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பள, நான், “டேய் என்னடா… ஸ்கூலுக்கு வல்லயா?” அவன், “ம்ம்ம்ம்க்கும் எங்க வீட்டுல, போரு போடுறாங்க…சாமிக்கும்பிட போறோம்”நான் முறைச்சுக்கிட்டே, பதில் ஏதும் சொல்லாம அவனை பார்த்துக்கிட்டே நின்னேன்… அப்பறம் திடீர்னு, “இரு டீச்சர் கிட்ட மாட்டி விட்றேன்… டிக்டேஷனுக்கு பயந்துதானே வரல!” அவன் “ இல்லையே நான் படிச்சுட்டேன், நான் அதுக்கெல்லாம் லீவு போடலையே “ உண்மையாகவே அவன் நல்லா படிப்பான், சொல்லப்போனால் எனக்கு பொறாமை அவன் மட்டும் ஜாலியா வீட்டுல இருக்கானேன்னு. சரி நாமளும் பள்ளிக்கூடம் போயிட்டு வயிறு வலினு லீவுப்போட்டு ,…

Read More

மனிதர்கள் சந்திக்க வாய்ப்புள்ள மிக அரிய விபத்துகளில் ஒன்றுதான் மின்னல் தாக்குவது. சராசரியாக 5 லட்சத்தில் ஒருவரைத்தான் மின்னல் தாக்குகின்றது. ஆனால் மின்னல் தாக்கியவர்கள் பிழைப்பது அரிது, பிழைத்தாலும் இயங்கும் நிலையில் வாழ்வதும் அரிது. இரண்டுமுறை மின்னல் தாக்கியும் பிழைத்தவர்களை உலக வரலாற்றில் விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு மனிதரை 3 முறைகளுக்கும் மேல் மின்னல் தாக்க கணித சாத்தியங்களே இல்லை. ஆனால் உண்மையாகவே ஒரு நபர் 7 முறை மின்னலால் தாக்கப்பட்டு அத்தனைமுறையும் உயிர்பிழைத்து உள்ளார் – என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?. மிக அதிகமுறை மின்னலால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரான அவரது பெயர் ராய் சல்லிவன்!. அமெரிக்காவில் ஒரு உயிரியல் பூங்காவில் பாதுகாவலராகப் பணியாற்றும் ராய் கிளீவ்லாண்ட் சல்லிவன் 1942ஆம் ஆண்டில் தனது 30ஆவது வயதில் முதன்முறையாக மின்னலால் தாக்கப்பட்டார். அதற்குப் பின்னர் 1977ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 7முறை அவர் மின்னலால் தாக்கப்பட்டார்!. ஒவ்வொருமுறை மின்னல்தாக்கும்போதும்…

Read More

உலகின் மிகப் பழமையான பழ மரங்களில் மாமரங்களும் ஒன்று. 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கூட மா மரங்கள் இருந்துள்ளன. தமிழர்கள் முக்கனிகளில் ஒன்று என்று மாம்பழத்தைக் கூறுகின்றனர். சங்ககாலத் தமிழ் அரசர்கள் பலர் தங்கள் அரச மரமாக மாமரத்தை அறிவித்த குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உண்டு. மேலும் தாய் தந்தையை சுற்றி வந்து விநாயகர் பெற்ற ஞானப் பழமும் மாம்பழம் என்றே பக்தர்கள் நம்புகின்றனர்!. மாம்பழத்திற்கு இவ்வளவு நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் இந்தியாவைச் சுற்றிய பகுதிகளில் மட்டுமே மாம்பழங்கள் நெடுங்காலமாக அறியப்பட்டிருந்தன. பர்மா, வங்கதேசம் ஆகிய நாடுகளில்தான் மா மரங்கள் முதன்முதலாக தோன்றியதற்கான தடயங்களும் கிடைத்து உள்ளன. இந்தியாவில் இருந்து மதம் பரப்பச் சென்ற புத்த துறவிகள்தான் பிற ஆசிய நாடுகளுக்கு மாம்பழங்களை அறிமுகப்படுத்தினர், பின்னர் அரேபிய வணிகர்கள் பல நாடுகளுக்குக் கொண்டு சேர்த்தனர். இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களால் மாம்பழம் ஐரோப்பாவுக்கும் அறிமுகமானது. இன்று உலகின்…

Read More

மனிதர்கள் வேட்டையாடிகள் என்பதில் இருந்து விவசாயிகளாக மாறியது வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று!. அப்படியாக மனிதன் விவசாயம் செய்து உருவாக்கிய முதல் பயிர் எது?. பழைய ஏற்பாட்டை வரலாறு என்று நம்பிய ஐரோப்பியர்கள் ஆப்பிள்தான் உலகின் மிக மூத்த விவசாயப் பயிர் எனக் கருதினர். ஆனால் ஆய்வுகளின்படி கி.மு.8000ஆவது ஆண்டுக்கு முன்பு ஆப்பிள் உருவாகியே இருக்கவில்லை!. கஜகஸ்தானில் உள்ள தீன் ஷான் மலைப்பகுதியில் கி.மு.8000ஆவது ஆண்டு வாக்கில்தான் ஆப்பிள் உருவாகியே இருக்கிறது!. ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே விவசாயம் தொடங்கிவிட்டது. சுமார் 1லட்சத்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதன் காட்டில் விளைந்த தானியங்களை சேகரித்து உண்ணத் தொடங்கினான். இது வேட்டையாடுதலைவிட எளிமையானதாக இருந்தது. ஆனால் அந்த தானியங்களை அவனே விதைத்து, அறுக்க ஆரம்பித்தது சுமார் கி.மு.11500ஆம் ஆண்டுவாக்கில்தான். உலகின் எந்தப் பகுதியில் விவசாயம் முதன்முறையாகத் தொடங்கியது என்பது தெரியவில்லை. உலகின் 11 வெவ்வேறு இடங்களில் ஆதிகால விவசாயத்திற்கான சான்றுகள்…

Read More

இந்தியத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையின் புதிய அத்தியாயம்தான் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு முந்தைய வாக்குப் பதிவின் வரலாற்றை நாம் பார்க்கப் போனால்… 1950 ஜனவரி 26-ம் தேதி இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முதல்நாள், அதாவது ஜனவரி 25 அன்று அரசமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரே ஒரு ஆணையரைக் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு மார்ச் 21-ம் தேதி முதல் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் நியமிக்கப்பட்டார். முதல் முறையாக, சாதி, மத, பாலின, சமூக அந்தஸ்து உள்ளிட்ட எந்த பேதமும் இல்லாமல் 21 வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் அரசைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை கிடைத்தது. இதையடுத்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான முதல் பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவு 1952 ஜனவரி 2ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. …

Read More

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. நடிகர்கள், பிரபலங்கள் பலரும் காலையிலேயே வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யத் தொடங்கி உள்ளனர். நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு திரைப்பட நடிகர் விஜய், அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளிலேயே வந்து வாக்கு செலுத்தி ஜனநாயகக் கடமையாற்றினார். அவர் சைக்கிளில் பயணித்து வாக்களிக்க வந்த காணொலியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.- நமது நிருபர்

Read More

சோழர்களின் வரலாற்றில் முதன்முறையாக தங்க நாணயம் வெளியிட்டவர் யார்? என்ற கேள்விக்கு இருவேறு பதில்கள் கிடைக்கின்றன. நாணய ஆய்வாளர்கள் இராஜராஜ சோழன் என்றும், கல்வெட்டு ஆய்வாளர்கள் இராஜராஜனின் சிற்றப்பன் மதுராந்தக உத்தம சோழன் – என்றும் இருவேறு பெயர்களைச் சொல்கின்றனர். இந்த இருவரில் யார் முதலில் தங்க நாணயத்தை வெளியிட்டவர்? – வாருங்கள் பார்ப்போம்… சங்ககாலம் முதல் பல்லவர் காலம் வரையில் தமிழகத்தை ஆண்ட அரசர்கள் எவரும் தங்க நாணயங்களை வெளியிட்டது இல்லை. சங்க காலத்தில் தமிழர்களோடு வணிகம் செய்த ரோமானியர்களின் தங்க நாணயங்களே தமிழகத்தில் நெடுங்காலம் புழங்கின. கிடைத்த ஆதாரங்களின்படி கி.பி.863 முதல் கி.பி.911 வரை ஆட்சி செய்த பிற்காலப் பாண்டிய அரசரான இரண்டாம் வரகுணன் என்பவர்தான், தங்க நாணயங்களை வெளியிட்ட முதல் தமிழக அரசர் ஆவார். திருச்செந்தூர் கோவிலுக்கு இவர் 1400 தங்கக் காசுகளை வழங்கியதாகவும், அம்பாசமுத்திரம் கோவிலுக்கு இவர் 290 தங்கக் காசுகளை வழங்கியதாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன.…

Read More

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் பிற 11 ஆவணங்களைக் காட்டியும் வாக்கு செலுத்தலாம் ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம். அப்போது வேறு எந்த ஆவணங்கள் பயன்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாகவே பட்டியலிட்டு உள்ளது. அந்த ஆவணங்கள் 1. ஆதார் அட்டை 2. பான் அட்டை 3. ஓட்டுநர் உரிமம் 4. கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) 5. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் 6. வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம் 7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் அடையாள அட்டை 8. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் 9. தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டிற்கான ஸ்மார்ட் கார்டு 10. மக்கள் தொகை பதிவேட்டால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்ட் …

Read More

வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது!. நேற்று ஒருநாளில் மட்டும் இந்தியாவில் 1,03,558 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஒருலட்சத்தைக் கடப்பது இதுவே முதன்முறை ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் சில நாட்களில் 97,000 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதே முந்தைய உச்சபட்ச அளவாக இருந்தது. மேலும் நேற்றைய ஒருநாளில் அதிகம் கொரோனா பரவலை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக அதிக கொரோனா பாதிப்பு காணப்படும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 478 பேர் பலியாகி உள்ளனர். நாட்டிலேயே கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 57,074 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பை…

Read More