கர்ணன் – என்ற பெயர் எப்படி வந்தது?

SHARE

மகாபாரதத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர் கர்ணன். கர்ணனின் பெயர் ஒரு காரணப் பெயர் ஆகும். பிறக்கும் போதே காதில் குண்டலங்கள், மார்பில் கவசம் ஆகியவற்ரோடு பிறந்த குழந்தை என்று மகாபரதத்தில் கர்ணன் வர்ணிக்கப்படுகின்றான். அவனது காதில் இருந்த குண்டலங்களே அவனது பெயருக்குக் காரணமாக அமைந்தன. வட மொழியில் ‘கர்ண’ என்றால் காது. எனவே கர்ணத்தில் அணிகலனோடு பிறந்தவன் கர்ணன் ஆனான்.

கர்ண – என்ற சொல் தமிழிலும் புழங்கிவருகிறது. மிக மோசமான செய்தியை ’கர்ண கொடூரம்’ என்று சொல்கிறோம். காதில் கேட்கவே முடியாத அளவுக்கு மோசமானது என்பதே இதன் பின்னுள்ள பொருள்.

ஒரு செய்தியை வாழ்மொழியாக மட்டுமே கேள்விப்படும்போது அதைக் ‘கர்ண பரம்பரைச் செய்தி’ என்கிறோம். செவிவழிச் செய்தி என்பது இதற்கு நிகரான வேறு தொடர்.

அதேசமயம் வடமொழியில் கரண – என்று இருந்த சொல்லும் தமிழில் கர்ண என்று புழங்கியது உண்டு. கரண என்ற சொல்லுக்கு உதவியாளன் அல்லது நண்பன் என்று பொருள். அதனால் கிராம அலுவலர்களை ‘கிராம கர்ணன்’ என்று அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. பின்னர் கிராம கணக்கர்கள் ‘கர்ணம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு கர்ணனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை உச்சரிப்புப் போலிகள்.

இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

இரா.மன்னர் மன்னன்

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

சிற்ப இலக்கணம். பகுதி 3: தொழிற் கை முத்திரையின் வகைகள் (1-4)

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment