Author: இரா.மன்னர் மன்னன்

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டு உள்ளதை சென்னை மக்களோடு கடலூர் மக்களும் கொண்டாடி வருகின்றனர். கடலூர் மக்களால் ‘வாழும் பென்னிகுவிக்’ என்று அழைக்கப்படும் ககன் தீப் சிங் பேடி அந்த பெயருக்கு ஏற்றபடி செய்த சாதனை என்ன? – விரிவாகப் பார்ப்போம்… ஊரக வளர்ச்சி, வேளாண்மை, பேரிடர் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் நீண்ட அனுபவம் உள்ளவர் இ.ஆ.ப. அதிகாரி ககன் தீப் சிங் பேடி. ஏற்கனவே மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர். கடலூரைப் புயல் பாதித்த போது இவர் களத்தில் காட்டிய வேகம் தமிழகமே இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் இது அத்தனையையும் விட மிகப் பெரிய சாதனை இவரால் நடந்த கடலூர் வாலாஜா ஏரி மீட்புதான். இந்தியா முழுக்க நீர் நிலைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. அதை மக்களும் அரசும் வேடிக்கை பார்த்தும் வருகிறார்கள். இந்நிலையில் மக்களும்…

Read More

ருலெட் ஆட்டமென்கிற சூதாட்டத்தில் கண்ணுக்கு தெரிந்து தோற்கும் ஒருவன் ,வாழ்க்கை சூதாட்டத்தில் கண்ணுக்கு தெரியாமல் தினம் தினம் தோற்கிறான், தோற்றுக் கொண்டே இருக்கிறான். ருலெட் ஆட்டம் ரஷ்யர்களின் பெருவிருப்ப ஆட்டமாய் இருந்திருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் தலைச்சிறந்த உலக  எழுத்தாளர்களில் ஒருவரான ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி (1821-1881) ரஷ்ய புதின இலக்கியத்தின் முன்னோடி. மனிதனின் அகத்துரையாடல்களையும், ஆன்மிக கருத்தாக்க பிரதிபலிப்பையும் இலக்கியமாக்கியவர். ரஷ்ய எழுத்து மேதைகளில் இவரது எழுத்து தனித்த பாதை கொண்டது. ரஷ்ய பேரரசை விமர்சித்ததால் இவரது புத்தகங்கள் தடை செய்யப்பட்டு 1849 – ல் கைது செய்யப்பட்டார், மரண தண்டனையின் கடைசி தறுவாயில் தப்பி பிழைத்தார். தண்டனை குறைக்கப்பட்ட நிலையில் சைப்பீரியாவிற்கு நான்கு ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். இரண்டு வருட கட்டாய இராணுவ சேவையிலும் அமர்த்தப்பட்டார். இதற்கு பின்பு ஒரு ஊர்சுற்றியாக நாடு முழுவதும்  திரிந்தார். அக்காலக்கட்டத்தில் சூதாட்டத்தில் நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்தார். இந்நிலையில் கி.பி.1866ல் எழுதப்பட்ட இவரது “சூதாடி…

Read More

இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் அமுதன் தினத்தந்தியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். பத்திரிகை துறையில் 50 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். இந்த புத்தகம் மட்டும் இல்லாமல் வேறு சில புத்தகங்களும் எழுதியிருக்கிறார். தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றிய ‘1000 ஆண்டு கால அதிசயம்’ என்ற இவரது நூல் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 38 தலைப்புகள் கொண்ட இந்த புத்தகத்தில் தமிழர்களின் பயணம் மற்றும் பிற இடங்களுக்கு சென்ற தமிழர்கள் தங்கள் வணிகம் மற்றும் சமயத்தை எப்படி நிலை நிறுத்திக் கொண்டார்கள் என்பவை பற்றிய செய்திகள் இருக்கின்றன. முதல் கட்டுரையான எகிப்து மன்னர்களில் இருந்து தொடங்கி கடைசி கட்டுரையான மெக்சிகோ தென் அமெரிக்க பயணம் வரை ஏராளமான செய்திகளை இதில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார். இந்த செய்திகளுக்கு ஆதாரமாக குறிப்பு எடுத்த நூல்கள் பற்றியும் சொல்லி இருக்கிறார். இதில் எனக்குப் பிடித்த தலைப்புகள் கொரியாவுக்கு தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு மற்றும் யவனத்திற்கும் தமிழகத்திற்கும்…

Read More

என்மகஜே என்னும் இந்நூல் ஒரு மலையாள நாவல். 1980 – 90களில் மலையாள தேசத்தின் மலைப்பகுதிகளில் உள்ள முந்திரி காடுகளில் எண்டோசல்ஃபான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தால் ஏற்படுத்தப்பட்ட பேரிழப்புகளைப் பின்னணியாகக் கொண்ட நாவல் இது. ஆசிரியர் அம்பிகாசுதன் மாங்காடு அந்நிகழ்வை ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுடன் ஒப்பிட்டு உள்ளார். அது சரியான உவமையும்கூட. எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லியின் விளைவாக சொர்க்கம் என்ற ஒரு ஊரும் அதை சுற்றியுள்ள மற்ற பகுதிகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டன, அங்குள்ள மக்களுக்கு எவ்வகையான குறைபாடுகள் ஏற்பட்டன? – என்பவை குறித்து படிக்கும்போதே வயிற்றின் உள்ளே இருந்த ஏதோ ஒரு உணர்வு வாய் வரை வந்துவிடுகிறது. இந்த பேரழிவு ஹிரோஷிமா நாகசாகியை விடக் கொடுமையானது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைக்கூலி ஆக மாறிய அரசின் அலட்சியத்தால் நேர்ந்த ஒரு கொடூர கொலை என்றே இந்நிகழ்வு இன்று வரை பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நாவலில் நகரத்திலிருந்து சென்று, பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்ட சொர்க்கம் என்ற ஊரின் மலைப்பகுதியில்…

Read More

இந்தப் புத்தகம் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் வாழ்க்கை குறித்த முக்கிய அம்சங்களை 100 சிறிய குறிப்புகளாகச் சொல்கிறது. எழுத்தாளர், பத்திரிகையாளர் கோவி.லெனின் இதனை எழுதிருக்கிறார். வி.பி.சிங்கை மண்டல் கமிஷனின் நாயகராக சமூக நீதித்தளத்தில் அறிந்தோம். இப்புத்தகத்தைப் படிக்கும்போது அவர் ஒரு பேரன்புள்ள மனிதராகவும் புரிந்து கொள்ளப்படுவார். வி.பி.சிங்கை இந்த நூல் வாயிலாக கவிதை எழுதுபவராக, ஓவியம் வரைபவராக அறிந்தது எனக்கு புது அனுபவம். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களுடன் வி.பி.சிங் அவர்களுக்கு இருந்த நட்பின் ஆழம் இந்நூலில் பேசப்பட்டுள்ளது. பதவியில் இருந்த 11 மாதமும் சமூகநீதி காத்த தலைவராக வி.பி.சிங் இருந்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் ஒரு பெரியாரியவாதியாக வாழ்ந்த வட இந்தியர் என்று நாம் வி.பி.சிங்கைத் தாராளமாகக் கூறலாம். பதவி தன்னைத் தேடி வந்த போதும் “பதவி வேண்டாம்” எடுத்த முடிவில் உறுதியாய் இருந்திருந்தார் வி.பி.சிங், அதனால் ஹரியானா ரிசார்ட்டில் பதுங்கி இருந்தார் என்பதை…

Read More

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கும்? நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அக்கால கட்டத்தில் மக்கள் எப்படிபட்டவர்களாக இருந்திருப்பார்கள்? என ஏராளமான கேள்விகளுக்கு விடைகளை அள்ளித் தருகிறது எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய ’ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவல். 3000 ஆண்டுகள் காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்றி நம்மை கற்பனைக் குதிரைகளின் வண்டிகளில் பூட்டி நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்திற்கு அழைத்து செல்கிறான் ஆதன். யார் இந்த ஆதன்? எதற்காக அவன் இவற்றையெல்லாம் நம்மிடம் சொல்கிறான்? விடைகளை எளிய நடையில் அழகியலோடு விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நாவலாக்கி தந்துள்ளார் எழுத்தாளர் உதயசங்கர். சிறார் இலக்கியத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்து வரும் இவருடைய எழுத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு வரலாற்றையும் அவற்றின் தொன்மையையும் இந்நாவலின் வழியாக கடத்தியுள்ளார். கீழடி அகழாய்வின் மூலமாக 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்வியல்களை நாம் அறிந்து கொண்டு வருகிறோம். நாம் அறிந்தவற்றை நம் குழந்தைகளுக்கு சரியாக…

Read More

மொத்தம் 14 தலைப்பு கொண்ட இந்தக் கட்டுரை தொகுப்பில் உலக சினிமா , இந்திய சினிமா, தமிழ் சினிமா ஆகியவற்றை தனித்தனிக் கட்டுரைகளாக எழுதி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். முதல் கட்டுரை உலகப் புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கோ-வைப் பற்றிய படமான ’லவ்விங் வின்சென்ட்’ இதில் ஆரம்பித்து கடைசி கட்டுரையான ’மோடிக்லியானி’ வரை நிறைய தகவல் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம் . லவ்விங் வின்செண்ட் (loving Vincent) : இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இதை ‘உலகின் முதல் எண்ணெய் ஓவிய திரைப்படம்’ என்று சொல்கிறார்கள் சுமார் 110 ஓவியர்களைக் கொண்டு 60,000 படங்கள் வரையப்பட்டு, அவற்றைக் கொண்டே இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள் . அந்த உழைப்பு படத்தின் டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது. நெரூதா : அடுத்த கட்டுரை பாப்லோ நெரூதா வின் வாழ்க்கை நடந்த சுவாரசிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் குறித்தது. அந்த சம்பவம்…

Read More

ஒரு சிறந்த புத்தகத்தின் அடையாளம், அதை வாசித்து முடித்த பின்பு நமக்குள் இருக்கும் சில கேள்விகளுக்கு அது பதில் சொல்லி இருக்க வேண்டும் என்பதைவிட பல்வேறு கேள்விகளை நமக்குள் அது கிளறிவிட்டிருக்க இருக்க வேண்டும் என்பதே. அதனை இந்தப் புத்தகம் சிறப்பாகச் செய்திருக்கிறது. கொசுக்கள் தன்னை விட ஐந்து மடங்கு எடையுள்ள மழைத்துளியை உதிர்த்து விட்டுத் தப்பிச் செல்வது, கடும் வறட்சியில் பூர்வகுடிகளுக்கு தேக்கி வைத்த தண்ணீரைத் தந்த உலகின் மிகப் பழமையான ஆனைப் புளியமரம் என்கிற பாவோபாப் மரம், ‘O’ ரத்தவகையினரை கொசுக்கள் விரும்பிக் கடிப்பது, மொரீஸியஸில் அழிந்து போன டோடோவும் கல்வரியாவும், நம் முகம் கைகால்களின் தோல்களில் வாழும் டிமோடெக்ஸ் ஃபாலிகுளோரம், 180° தலையை சுழற்றும் ஐந்து கண்கள் கொண்ட கும்பிடு பூச்சி, ஆண்டனி கிளியோபாட்ராவுக்கு அளித்த முத்துபானம், சயாமிஸ் இரட்டையர்கள், ரஃபேஸியா அர்னால்டி எனும் உலகின் பெரிய பூ – போன்ற ஏராளமான புதுப்புதுத் தகவல்களை…

Read More

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத், தெலங்கானா. கொரோனா பெரும்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் அவ்வப்போது விலங்களிடமும் கொரோனா தொற்று பரவி வந்தது. பூனை, நாய் போன்ற மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் வீட்டு விலங்குகளுக்குப் பரவிய கொரோனா இப்போது சிங்கங்களையும் விட்டுவைக்கவில்லை. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேரு உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு காய்ச்சல் வந்ததைத் தொடர்ந்து, பூங்கா நிர்வாகம் அவற்றின் உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியது. ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 8 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் மூலம் சிங்கங்களுக்கு கொரோனா பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையமான சிஎஸ்ஐஆர் அமைப்பின் ராகேஷ் மிஸ்ரா…

Read More

ஐபிஎல் தொடரின் நேற்றைய 2ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. இதுவரை நடந்த 8 போட்டிகளில், டெல்லி அணி 2 தோல்விகள், 6 வெற்றி என்று பெற்று 12 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளது. நான், நீ என்று சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகள் மோதிக் கொண்டிருக்கையில் சத்தம் இல்லாமல் முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது டெல்லி கேபிடல்ஸ். அகமதாபாத் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மயங்க் அகர்வால் புது கேப்டனாக இந்த போட்டியில் களம் இறங்கினார். டாஸ் வென்ற டெல்லி, அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் பீல்டிங்கைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறியது. பஞ்சாப் அணி, பூரணுக்கு மாற்றாக மலானுடன் களம் இறங்குவதாக கூறியது. இருந்தாலும் பஞ்சாப் அணியில் கேஎல்ராகுல் இல்லாமல் ஆட்டத்தை பார்க்க…

Read More