- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
கரிசல் காடு என்பது கருகிப் போன கந்தக நிலம். மழை பெய்தால் அந்த நிலத்தின் மணற்துகள்கள் ஒன்றோடு ஒன்று பிரிந்து, தனக்கு மேலே நடக்கும் மனிதர்களின் பாதங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும். அந்த மண்ணிற்கு மட்டுமல்ல அந்த மண்ணின் கதைகளுக்கும் மனிதர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் இருப்பதை உலகுக்குச் சொன்னவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள். 1984ல் கரிசல் பகுதி எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து அவர் வெளியிட்ட ‘கரிசல் கதைகள்’ தொகுப்பின் வழியேதான் எனக்கு அறிமுகமானார் கி.ரா., அந்தத் தொகுப்பு எனக்கு ஒரு புதிய உலகத்தையே அறிமுகப்படுத்தியது. அப்போது நான் பள்ளி மாணவன் என்பதால் அரிசிச் சோற்றுக்கு ஏங்கிக் கொண்டே சிவகாசி ஆலைகளில் பணியாற்றும் சிறுமிகளும், கூந்தலில் பூ சூட முடியாமல் தாலியில் பூச்சூடும் தாழ்த்தப்பட்ட பெண்களும், பறவைக் குஞ்சுகள் விளைநிலத்தின் வளத்துக்காக கொல்லப்படும் கிரௌஞ்ச வதமும் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் நீங்காதவை. இந்தத் தொகுப்பில் இளம் எழுத்தாளர்களாகப் பரிந்துரைக்கப்பட்ட சோ.தர்மனும்…
ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு. கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த கடந்த 5ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஆந்திராவில் முழு ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாளையுடன் அந்த ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மே 31மஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது அறிவித்துள்ளார். ஆந்திராவில் ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசியக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணிக்கு மேல் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரியா வேலு
தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார். அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விக்ரம். முன்னதாக இன்று நடிகர் ரஜினிகாந்த் முதல்வரின் நிதிக்கு 50 லட்சம் வழங்கி இருந்தது குறிப்பிடத் தக்கது. கெளசல்யா அருண்
கேரள முதல்வராக 2ஆவது முறையாக பினராயி விஜயன் , வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.திருவனந்தபுரம். கடந்த மே மாதம் 2ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் கேரளாவில் வெளியான நிலையில் முதல்வராக அறிவிக்கப்பட்ட பினராயி விஜயன் இன்றுவரை பதவியேற்கவில்லை. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று கூடிய இதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் வரும் 20 ஆம் தேதி பினராயி வியஜன் முதலமைச்சராக பதவியேற்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் 18 நாட்களுக்கு பிறகு பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கெளசல்யா அருண்
கொரோனாவுக்குப் பலியான இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். திரைப்பட நடிகரும் இயக்குநருமான அருண்ராஜா கனா படத்தின் மூலம் பெரும் பாராட்டைப் பெற்றவர். இவர் தற்போது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வரும் ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். இதையடுத்து கொரோனாவால் இறந்த சிந்துஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி, ”நேர்த்தியான இயக்குநர் – நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.-…
பொது இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்து உள்ளார். சென்னை. கோரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க, ஆவி பிடிப்பது மிக சிறந்த தீர்வு என சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. இதனை பலர் பின்பற்றவும் செய்கின்றனர். ஆனால், பொது இடங்களில் இதனை செய்தால் நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பலர் பொது இடங்களில் ஆவி பிடிக்கின்றனர். பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு தொற்று உங்களுக்கு வர வாய்ப்புள்ளது. இதனை நாம் ஊக்குவிக்கக் கூடாது’ – என்றும், ஆவி பிடித்தல் போன்ற சுய வைத்தியங்களை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மக்கள் செய்ய வேண்டாம் என்றும் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.- கெளசல்யா அருண்
டவ்-தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மும்பையில் அதீத கனமழை பெய்யும் எனவும் குஜராத்தை புயல் தாக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் டவ்-தே, இன்று உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இதனால் மும்பையில் அடுத்த சில மணிநேரத்திற்கு அதீத கனமழை பெய்யும் எனவும், மணிக்கு 120 கி.மீ.க்கு காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் பாதிப்பிற்கு உள்ளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவால் மோசமான பாதிப்புகளை சந்தித்துவரும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில மக்களுக்கு டவ்-தேவின்…
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சைத் தோற்கடித்து 10-வது முறையாகப் பட்டம் வென்றுள்ளார் பிரபல வீரரான நடால். இத்தாலியன் ஓபன் இறுதிச்சுற்று ரோமில் நடைபெற்றது. இதில் பிரபல டென்னிஸ் வீரர்களான நடால் மற்றும் ஜோகோவிச் மோதினர். உலகின் நம்பர் 3 வீரரான நடால், 7-5, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இத்தாலியன் ஓபன் போட்டியை 10-வது முறையாக வென்றார். 2005-ல் 18 வயதில் இப்பட்டத்தை முதல் முறையாக நடால் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.- கெளசல்யா அருண்
தென் ஆப்பிரிக்காவில் உள்ள காவ்டெங் மாகாணத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவி வருவதாக அந்த மாகாண பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காவ்டெங், தென்னாப்பிரிக்கா. தென் ஆப்ரிக்காவின் காவ்டெங் மாகாண பிரதமர் டேவிட் மக்குரா, நாடு முழுவதும் கொரோனா மூன்றம் அலை பரவவில்லை என்றாலும் காவ்டெங் மாகாணத்தில் அது தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அந்த மாகாணத்தில் 600 ஆக இருந்த தொற்று இரண்டு நாட்களில் 1200 ஆக அதிகரித்துள்ளது எனவும் இரண்டு நாட்களிலேயே இருமடங்காக தொற்று பரவுவது அபாயகரமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். காவ்டெங் மாகாணத்தில் கடந்த பல வாரங்களில் முதல்முறையாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16.05 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 15.20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். காவ்டெங் மாகாணம் தென்னாப்பிரிக்காவின் முக்கிய பொருளாதார மண்டலம் எனவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிலும்…
கொரோனாவில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு ரூபாய் 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திரா. கொரோனாவின் கொடூரத்தால் பல்வேறுதரப்பினரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைவைச் சந்தித்து உள்ளனர். இதன் காரணமாக கோரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய கூட முடியாமல் பல குடும்பங்கள் தவித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆந்திர மாநில அரசின் தலைமைச் செயலர் அனில் குமார் சிங்கால், ”ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 2.07 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 9,271 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் அரசு சார்பில் வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. கொரோனா…