- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் டவ்தே புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, 1000 கோடி ரூபாய் நிவாரண உதவியை அறிவித்து உள்ளார். குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த டவ்தே புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு பலர் பலியாகி உள்ளதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ராணுவத்தினர் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் பணியிலும், அரசு அதிகாரிகள் புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பாவ்நகர் சென்ற பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்தார். பிரதமருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வு முடிந்தபோது குஜராத்துக்கு இடைக்கால நிவாரணமாக 1000…
தமிழகத்தில் நீலகிரி, தேனி, விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.- கெளசல்யா அருண்
கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முக கவசம் அணிந்து கொள்கின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் அந்த காணொலியில், தற்போது உயிர் கவசமாக மாறியுள்ள இந்த முக கவசத்தை மக்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் இரட்டை முக கவசம் அணிவது நல்லது. மேலும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்துவது நம்மை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். பிரியா வேலு
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் இயங்காதால் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக வாட்ஸ்அப் ஆப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள வழிமுறை நெறிமுறைகளில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனி வாட்ஸாப் குழுவில் வினாத்தாள்கள் அனுப்பி தேர்வுகள் நடத்த வேண்டும்- என்பது உள்ளிட்ட வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. கெளசல்யா அருண்
சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்றும் திரைப்படம் ஐ.எம்.டி.பி. ரேட்டிங்கில் உலக அளவில் அதிக ரேட்டிங் பெற்ற மூன்றாவது திரைப்படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஐ.எம்.டி.பி. என்பது உலக அளவிலான திரைப்படங்களின் தகவல் மற்றும் மதிப்பீட்டு இணையதளம் ஆகும். இதில் உலக திரைப்பட வரலாற்றில் இதுவரை வெளியான படங்களில் ரசிகர்களிடம் அதிக மதிப்பீடு பெற்ற, உலகின் தலைசிறந்த 1000 படங்களின் பட்டியலில் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. முதல் இடத்தை 10க்கு 9.3 புள்ளிகளோடு ஷஷாங் ரிடம்ஷன் படமும், இரண்டாம் இடத்தை 9.2 புள்ளிகளோடு காட்பாதர் படமும் பிடித்துள்ளன. சூரரைப் போற்று திரைப்படம் பெற்ற புள்ளிகள் 9.1 ஆகும்!. ஒரு தமிழ்த் திரைப்படம் உலக அளவில் அதிக ரேட்டிங் (rated) பெற்ற மூன்றாவது திரைப்படமாக இடம் பெற்றுள்ளது இந்திய சினிமாவிற்கே பெரும் சேர்க்கும் விதமாக உள்ளது…
அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். அறலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் , இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தற்போதைய நிலை மற்றும் கோயிலுக்கு சொந்த நிலங்கள் குறித்து இணைத்தில் பதிவேற்றப்படும் எனவும், கோயிலுக்கு சொந்த இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெளசல்யா அருண்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு செல்கிறார். இந்த ஆய்வில் ஆக்சிஜன், படுக்கை வசதி உள்ளிட்டவைகளை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கெளசல்யா அருண்
பி.எம்.கேர் நிதியில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் இயங்காதது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா 2ஆவது அலை நாட்டையே உலுக்கி வரும் நிலையில், மத்திய அரசின் பி.எம்.கேர் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு பல மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் பழுது காரணமாக இயங்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. பி.எம்.கேர் நிதியில் இருந்து முதற்கட்டமாக 262 வெண்டிலேட்டர்கள், இரண்டாவது கட்டமாக 590 வெண்டிலேட்டர்கள் என 1352 வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்ட நிலையில், 862 வெண்டிலேட்டர்கள் மட்டுமே செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதுபோல முன்னதாக பஞ்சாப் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 320 வெண்டிலேட்டர்களில் குறைந்தது 237 வெண்டிலேட்டர்கள் பழுதானவை என்று அங்குள்ள 3 மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த வெண்டிலேட்டர்கள் சரி செய்யப்பட்டாலும் அவற்றை நம்பிப் பயன்படுத்த…
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. மேலும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக கூறியுள்ளது.- கெளசல்யா அருண்
டெல்லியில் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. டெல்லி கொரோனானாவின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசிகளை இந்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யதது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடிப்படையாக அமைந்தது இந்தியாவில் இருந்து 95 நாடுகளுக்கு 6.63 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தளத்தில் அரசே வெளியிட்ட ஒரு பதிவுதான். அதன் படி வங்கதேசத்துக்கு103 லட்சம் தடுப்பூசிகள், மொராக்கோ வுக்கு 70லட்சம் தடுப்பூசிகள், பிரிட்டனுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள், சவுதி அரேபியாவுக்கு 45 லட்சம் தடுப்பூசிகள், மியான்மருக்கு 37 லட்சம் தடுப்பூசிகள், நேபாளத்துக்கு 24.48 லட்சம் தடுப்பூசிகள் என இந்தியா வாரி வழங்கி உள்ளது. அந்தத் தடுப்பூசிகளை இந்தியர்களுக்கு அளித்திருந்தால்…