இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

SHARE

பி.எம்.கேர் நிதியில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் இயங்காதது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 கொரோனா 2ஆவது அலை நாட்டையே உலுக்கி வரும் நிலையில், மத்திய அரசின் பி.எம்.கேர் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு பல மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் பழுது காரணமாக இயங்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. 

பி.எம்.கேர் நிதியில் இருந்து முதற்கட்டமாக 262 வெண்டிலேட்டர்கள், இரண்டாவது கட்டமாக 590 வெண்டிலேட்டர்கள் என 1352 வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்ட நிலையில், 862 வெண்டிலேட்டர்கள் மட்டுமே செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுபோல முன்னதாக பஞ்சாப் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 320 வெண்டிலேட்டர்களில் குறைந்தது 237 வெண்டிலேட்டர்கள் பழுதானவை என்று அங்குள்ள 3 மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த வெண்டிலேட்டர்கள் சரி செய்யப்பட்டாலும் அவற்றை நம்பிப் பயன்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை என்றும் பல மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களின் உயிரோடு விளையாடுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த மே 15 அன்று பிரதமர் மோடி, மத்திய அரசு அனுப்பிய வெண்டிலேட்டர்களை மாநில அரசுகள் முறையாகப் பயன்படுத்துகின்றனவா?-என்று ஆய்வு செய்யக் குழுவை அனுப்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

Admin

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் … என் தம்பிய திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

டெல்டா கொரோனா வேகமாக பரவ வாய்ப்பில்லை: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

Leave a Comment