இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

SHARE

பி.எம்.கேர் நிதியில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் இயங்காதது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 கொரோனா 2ஆவது அலை நாட்டையே உலுக்கி வரும் நிலையில், மத்திய அரசின் பி.எம்.கேர் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு பல மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் பழுது காரணமாக இயங்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. 

பி.எம்.கேர் நிதியில் இருந்து முதற்கட்டமாக 262 வெண்டிலேட்டர்கள், இரண்டாவது கட்டமாக 590 வெண்டிலேட்டர்கள் என 1352 வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்ட நிலையில், 862 வெண்டிலேட்டர்கள் மட்டுமே செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுபோல முன்னதாக பஞ்சாப் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 320 வெண்டிலேட்டர்களில் குறைந்தது 237 வெண்டிலேட்டர்கள் பழுதானவை என்று அங்குள்ள 3 மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த வெண்டிலேட்டர்கள் சரி செய்யப்பட்டாலும் அவற்றை நம்பிப் பயன்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை என்றும் பல மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களின் உயிரோடு விளையாடுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த மே 15 அன்று பிரதமர் மோடி, மத்திய அரசு அனுப்பிய வெண்டிலேட்டர்களை மாநில அரசுகள் முறையாகப் பயன்படுத்துகின்றனவா?-என்று ஆய்வு செய்யக் குழுவை அனுப்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா சான்றிதழில் பிழையா..? திருத்தம் செய்து கொள்ள புதிய வழிமுறை இதோ

Admin

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு.. 25 நிமிடங்கள் பேசியது என்ன?

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

நிதி நிலைசரியானதும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Admin

Leave a Comment