Author: இரா.மன்னர் மன்னன்

மா. இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் (மார்ச் 12, 1907 – 26 மே, 1967) என்னும் மாபெருந் தமிழ் ஆளுமையைத் தமிழுலகு தெளிவுறப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. “பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று” என்று பட்டியலிடுகின்ற வகையில் அவரைக் குறிப்பிடுவோர் அறிவிருந்தும் அவர் பெருமை அறியாதாரே. பத்து வயதிலேயே தந்தையாரை இழந்து துன்புற்றாலும், “தந்தையொடு கல்வி போம்” என்னும் முதுமொழியைப் பொய்ப்பிக்கும் வண்ணம் தமது அண்ணன் இராமகிருட்டிணரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். கர்நூல், சித்தூர், திண்டுக்கல், நன்னிலம், தஞ்சாவூர் என ஊர்கள் பலவற்றிற்கு அவர் அலைக்கழிக்கப்பட்டாலும் கல்வி பயில்வதில் தணியா வேட்கையுடன் அறிவின் விரிவும் உள்ளத்தின் கனிவுமே குறிக்கோளாய்க் கொண்டு கற்றார். அவர் கற்ற கல்வி இனத்திற்கு எழுச்சியூட்டி மொழிக்கு மறுமலர்ச்சி நல்கும் திறத்தை அவர்க்கு அளித்தது. மௌனசாமி மடத்தின் இளந்துறவி கற்பித்த சித்தர் பாடல்கள் அவருள்ளத்தில் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் இளம்வயதிலேயே பதியச் செய்தன. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் வழிகாட்டுதல் சங்கச்…

Read More

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளை தமிழ் உட்பட 7 மொழிகளில் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம் என மத்திய தொழில் கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதனால் பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்லூரியில் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் பாடத்தை படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் உலகின் பலநாடுகளிலும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் பொறியியல் படித்து வருகின்றனர். இலங்கையில் பல ஆண்டுகள் முன்பே பொறியியல் பாடங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும், சிவில், மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 900 இடங்களில், தமிழ் பயிற்று மொழி வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியாக தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் பாடங்களை கல்லூரிகள் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப…

Read More

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் இச்சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் ஒரு சிலருக்கு பூஞ்சை நோய்களின் தாக்கம் ஏற்பட்டது. கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் புஞ்சை என மூன்று வகைப் பூஞ்சைகளின் தாக்கங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள், நெடுங்காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் ஆகியோர் பூஞ்சைத் தாக்குதலுக்கு எளிதில் இலக்காவதாகக் கூறப்படுகிறது. இவற்ரில் கருப்புப் பூஞ்சையின் தாக்கமே அதிகம் கண்டறியப்பட்டு உள்ளன. பல மாநிலங்கள் கருப்புப் பூஞ்சையை கொள்ளை நோயாக அறிவித்து உள்ளன. கருப்புப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆம்போடெர்சின் – பி என்ற மருந்து பயன்படுத்தப்ப்ட்டு வருகின்றது. கருப்புப் பூஞ்சை மருந்துக்கான தேவை தினசரி அதிகரிப்பதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வர்தா ஜெனிடிக் லைஃப் சைன்ஸ் – என்ர நிறுவனம் கருப்பு பூஞ்சைக்கான மருந்தைத் தயாரித்து உள்ளது. இந்த மருந்து வரும் மே 31 முதல் மருத்துவமனைகளுக்கு விநியோகம்…

Read More

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சித்தார்த்நகர், உத்தரப்பிரதேசம். உத்தரப்பிரதேசம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள உள்ள பர்ஹானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மே 14-ஆம் தேதி கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் தவணை செலுத்தப்பட்டது. அதில் முதல் தவணையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட 20 பேருக்கு, இரண்டாம் தவணையில் கோவாக்சின் தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசி மாற்றிப் போடப்பட்ட அனைவரும் நலமாக இருப்பதாகவும், யாருக்கும் இதுவரை எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படவில்லை இ என்றும், அவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தித்துள்ளதாகவும் உ.பி. அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர். பிரியா வேலு

Read More

நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பாபா ராம்தேவ் 1000 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாபா ராம்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த ரெம்டெசிவிர், பேவிபுளு உள்ளிட்ட மற்ற மருந்துகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டது என கூறியிருந்தார். இப்படியாக பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்த நிலையில், நவீன மருத்துவத்தை அவதூறாக பேசிய அவர் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் ரூபாய் 1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரியா வேலு

Read More

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மக்களை திணற வைத்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள்பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிக அளவில் தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 15.5 சதவீத கொரோனா தடுப்பூசிகளை வீணடித்து, கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து ஜார்க்கண்ட் முதலிடத்தில் உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் 30.2 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. ஒரு கொரோனா தடுப்பு மருந்து குப்பியை திறக்கும்பட்சத்தில் 10 பேருக்கு அதனை செலுத்த முடியும். ஒரு குப்பியை திறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கு செலுத்தவில்லை எனில், மீதமுள்ள மருந்து வீணாகி பயன்படுத்த முடியாமல் போகிறது. அந்த வகையில்தான் அதிகளவு தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 3வது…

Read More

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடங்கி இன்றோடு ஆறு மாதங்கள் ஆகின்றன. அதனால் இதை விவசாயிகள் கறுப்புதினமான அனுசரிக்கின்றனர். டெல்லி. மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்து வெளியிட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவை கடந்த நவம்பர் 26ம் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கின. மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திய போதும், சுமுக முடிவு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் தொடங்கி இன்றோடு 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்றைய தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்களை உள்ளடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகளின் இந்த போராட்ட அழைப்புக்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்பட…

Read More

மத்திய அரசு உருவாக்கிய புதிய சமூக வலைத்தள விதிகளை ஏற்றுக் கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றுக்கு எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) ஒழுங்குமுறை விதிகளை வெளியிட்டது. பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விதிகளை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க 6 மாதம் அவகாசம் கேட்டிருந்தன. காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனம் அரசின் விதிகளுக்கு உட்பட்டு பின்பற்றுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒருசில செயலிகள் மத்திய அரசின் புதிய சமூக ஊடக வழிகாட்டுதலுக்கு இணங்குவதாக தெரிவித்தன. இறுதி நாளான இன்று இந்திய அரசின் விதிகளை ஏற்க தயாராக உள்ளதாகவும், கூடுதலாக தேவைப்படும்…

Read More

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து மக்கள் தவித்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை குறித்து வெளியாகும் செய்திகள் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 8000 மேற்பட்டோருக்கு பூஞ்சைத் தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது கருப்பு , வெள்ளை பூஞ்சையை காட்டிலும் ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் 45 வயதான ஒரு நோயாளிக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை பாதிப்புகளைவிட மிகுந்த ஆபத்தானது. மஞ்சள் பூஞ்சை பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிரினங்களிடம் மட்டுமே காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதீத சோர்வு, பசியின்மை ஏற்படும், மேலும் இந்தத் தொற்று உடலின் உள் உறுப்புகளை பாதிக்கும். மற்ற இரண்டு பூஞ்சை நோய்த்தொற்றுகளை போலல்லாமல் இது உட்புறமாக தொடங்குகிறது – என்பதால் இது…

Read More

சென்னை கேகே நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனமான பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை, கே.கே.நகர் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. பிரபல தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் 20 ஆண்டுகளாக கணக்குபதிவியல் மற்றும் வணிகவியல் ஆசிரியராக ராஜகோபாலன் பணியாற்றி வந்தார். இந்த ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணத்துடன் வகுப்புகள் நடத்துவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு படிக்கும் இப்போதைய மாணவிகள், மற்றும்முன்னாள் மாணவிகள் பலர், பள்ளியில் தாங்கள் எதிர்நோக்கிய பாலியல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை இணையத்தில் வெளியிட்டனர். அவை வைரலாக பரவின. அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து, ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதுது, பதிலளிக்க…

Read More