கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

SHARE

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் இச்சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் ஒரு சிலருக்கு பூஞ்சை நோய்களின் தாக்கம் ஏற்பட்டது. 

கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் புஞ்சை என மூன்று வகைப் பூஞ்சைகளின் தாக்கங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள், நெடுங்காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் ஆகியோர் பூஞ்சைத் தாக்குதலுக்கு எளிதில் இலக்காவதாகக் கூறப்படுகிறது. 

இவற்ரில் கருப்புப் பூஞ்சையின் தாக்கமே அதிகம் கண்டறியப்பட்டு உள்ளன. பல மாநிலங்கள் கருப்புப் பூஞ்சையை கொள்ளை நோயாக அறிவித்து உள்ளன. கருப்புப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆம்போடெர்சின் – பி என்ற மருந்து பயன்படுத்தப்ப்ட்டு வருகின்றது. 

கருப்புப் பூஞ்சை மருந்துக்கான தேவை தினசரி அதிகரிப்பதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வர்தா ஜெனிடிக் லைஃப் சைன்ஸ் – என்ர நிறுவனம் கருப்பு பூஞ்சைக்கான மருந்தைத் தயாரித்து உள்ளது. 

இந்த மருந்து வரும் மே 31 முதல் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும் அதன் விலை 1200 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மருந்து முதல்கட்டமாக மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் எனவும், பின்னர் கருப்பு பூஞ்சை நோய் அதிகம் உள்ள குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் எனவும்அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா இரண்டாம் அலை – தற்காத்துக் கொள்வது எப்படி?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

Admin

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

மூக்கு வழியாக கொரோனா தடுப்பு ஊசி? – மோடி பேச்சின் சுருக்கம் இதோ…

Admin

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

குழந்தைகள் முகக்கவசம் அணியலாமா? ரெம்டெசிவர் பாதுகாப்பானதா? விளக்கம் கொடுத்த மத்திய அரசு

Admin

Leave a Comment