மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

SHARE

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து மக்கள் தவித்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை குறித்து வெளியாகும் செய்திகள் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 8000 மேற்பட்டோருக்கு பூஞ்சைத் தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது கருப்பு , வெள்ளை பூஞ்சையை காட்டிலும் ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் 45 வயதான ஒரு நோயாளிக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை பாதிப்புகளைவிட மிகுந்த ஆபத்தானது. மஞ்சள் பூஞ்சை பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிரினங்களிடம் மட்டுமே காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதீத சோர்வு, பசியின்மை ஏற்படும், மேலும் இந்தத் தொற்று உடலின் உள் உறுப்புகளை பாதிக்கும். 

மற்ற இரண்டு பூஞ்சை நோய்த்தொற்றுகளை போலல்லாமல் இது உட்புறமாக தொடங்குகிறது – என்பதால் இது கூடுதல் அபாயம் உள்ளது. Amphotericin-B எனப்படும் பூஞ்சை தடுப்பு மருந்து முதன்மையான மருத்துவம் ஆகும். தற்போது இந்த மருந்து தான் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 

அதிக அளவிலான ஸ்டெராய்டுகளை எடுத்துக்கொள்வது, சுற்றுப்புறத் தூய்மையின்மை, பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள், சீரற்ற ஆக்ஸிஜன் பயன்பாடு போன்றவையே பூஞ்சை தாக்குதலுக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் நெரடி விளைவுகளோடு இது போன்ற மறைமுக விளைவுகளுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டிய காலமாக இது உள்ளது.

– பிரியா வேலு


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

இந்தியாவில் டுவிட்டர் தளம் முடக்கம்..? டுவிட்டர் இந்தியா விளக்கம்

Admin

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

‘‘மத்திய அரசு அனுப்பிய பயோவெப்பன்’’ நடிகைமீது தேச துரோக வழக்கு.. நடந்தது என்ன?

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது மோடி அரசு – ப.சிதம்பரம்

Admin

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

Admin

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

Leave a Comment