மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

SHARE

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து மக்கள் தவித்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை குறித்து வெளியாகும் செய்திகள் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 8000 மேற்பட்டோருக்கு பூஞ்சைத் தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது கருப்பு , வெள்ளை பூஞ்சையை காட்டிலும் ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் 45 வயதான ஒரு நோயாளிக்கு மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை பாதிப்புகளைவிட மிகுந்த ஆபத்தானது. மஞ்சள் பூஞ்சை பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிரினங்களிடம் மட்டுமே காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதீத சோர்வு, பசியின்மை ஏற்படும், மேலும் இந்தத் தொற்று உடலின் உள் உறுப்புகளை பாதிக்கும். 

மற்ற இரண்டு பூஞ்சை நோய்த்தொற்றுகளை போலல்லாமல் இது உட்புறமாக தொடங்குகிறது – என்பதால் இது கூடுதல் அபாயம் உள்ளது. Amphotericin-B எனப்படும் பூஞ்சை தடுப்பு மருந்து முதன்மையான மருத்துவம் ஆகும். தற்போது இந்த மருந்து தான் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 

அதிக அளவிலான ஸ்டெராய்டுகளை எடுத்துக்கொள்வது, சுற்றுப்புறத் தூய்மையின்மை, பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள், சீரற்ற ஆக்ஸிஜன் பயன்பாடு போன்றவையே பூஞ்சை தாக்குதலுக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் நெரடி விளைவுகளோடு இது போன்ற மறைமுக விளைவுகளுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டிய காலமாக இது உள்ளது.

– பிரியா வேலு


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய டிஜிட்டல் கொள்கை… மத்திய அரசிடம் காலஅவகாசம் கேட்ட டுவிட்டர்!.

Admin

போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

Admin

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.. ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் ட்வீட்

Admin

மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

Admin

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

Leave a Comment