Author: Admin

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் போலியானவை என தடுப்பூசி நிர்வாகத்திற்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு வசதியாக மத்திய அரசு ”கோவின்” செயலியை அறிமுகம் செய்தது. இதில் முன்பதிவு செய்து கொள்வதன் மூலமே மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும். இந்த நிலையில் கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் காட்டு தீயாய் பரவியது. இதற்கு விளக்கமளித்துள்ள தடுப்பூசி நிர்வாகத்திற்கான குழுவின் தலைவர், கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானவை என மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் இது குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் கோவின் தரவு கணினிக்கு வெளியே உள்ள எந்தவொரு நிறுவனத்துடனும் பகிரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Read More

தர்மபுரி மாவட்டத்தில் தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பரவாமல் இருந்ததற்காக அம்மனுக்கு கூழ் ஊற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பரவாமல் காப்பாற்றியதாக ஊர் மக்கள் ஒன்று கூடி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை கொண்டாடியுள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள நெருப்பாண்ட குப்பம் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுவரை அந்த கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் 101 குடங்களில் மேளதாளம் முழங்க மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அங்குள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. மேலும் கூழ் ஊற்றி அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தப்பட்டது. இந்நிலையில் ஊர் அடங்கை மீறி கூடியதாக இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.- மூவேந்தன்

Read More

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட கொரோனா இரண்டாவது தவணை நிவாரணத் தொகை மற்றும் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக மே மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்தத் தொகையை சுமாா் 2.07 கோடி பேர் பெற்றனர். இதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்ட கொரோனா நிவாரணத் தொகையான ரூ.2000 மற்றும் 14 வகையான இலவச மளிகைப் பொருள்கள் ஜூன் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன் ஜூன் 11 ஆம் தேதி முதல் வரும் 14 ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று வழங்கப்பட உள்ளது. மேலும் இதனை கூட்ட நெரிசல் இல்லாமல் பெற்றுக்கொள்ள வசதியாக காலை 8 முதல் 12.30 மணி வரையிலும்,…

Read More

தங்கள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை காப்பாற்ற ஒரு கிராமமே இணைந்து உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சேடு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பாஸ்கர் ராவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியான மருத்துவர் பாக்யலட்சுமி குண்டூர் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார். கொரோனா காலகட்டத்தில் தம்பதியினர் இருவரும் கரஞ்சேடு கிராமத்தில் தங்கியிருந்து மக்களுக்கு கொரோனா சிகிச்சையும், நோய் தொற்று குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே தம்பதியினர் இருவருக்கும் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் மருத்துவர் பாஸ்கர் ராவ் நிலைமை கவலைக்குள்ளானது. அவர் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் ஆக்சிஜன் உதவி மூலம் சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் கடந்த மே 3 ஆம் தேதி பாஸ்கர் ராவின் நிலை மோசமடைந்ததால், விஜயவாடாவில்…

Read More

இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,148 பேர் கொரோனா தொற்றிற்கு பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின இதற்கான கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில் இன்றும் மட்டும் திடீரென்று உயர காரணம் என்ன? காண்போம் இந்த தொகுப்பில்.இந்தியாவில் இன்று அதிகபட்சமாக கொரோனா தொற்றால் பலியானவர்கள் 6,148 என்ற எண்ணிக்கை வெளியானது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய மாற்றமா என்ற கேள்வி அனைவருக்கு எழலாம் காரணம் இது தான், பீகார் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை மறுதணிக்கை செய்யப்பட்டதே. பீகார் அரசு கொரோனா பாதிப்பு நிலவரங்களை குறைத்துக் காட்டுவதாக புகார் எழுந்த நிலையில், பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாத உயிரிழப்புகளை தணிக்கை செய்ய உத்தரவிட்டது. ஆகவே மறு தணிக்கை செய்ததில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா தொற்றிற்கு 1,600 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. முன்னதாக பீகார் அரசு…

Read More

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடும் படி தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தொடக்க பள்ளி இயக்குநரகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் சில பள்ளிகள் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களின் சேர்க்கையுடன் இயங்கிவரும் தனியார் பள்ளிகளை மூடும் படி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டு வந்தால், சார்ந்த வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரே பொறுப்பு என தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலுகின்ற மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும்படி அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களின் சேர்க்கையுடன் இயங்கிவரும் தனியார் பள்ளிகளை மூடும் படி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மூவேந்தன்

Read More

5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிய அவசியமில்லை என என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் வைரசின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசும் எய்ம்ஸ் மருத்துவமனையும் மறுத்து விளக்கம் கொடுத்தன. இந்த நிலையில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளது. சுகாதாரத்துறையின் புதிய கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள்: 5 வயது மற்றும் அதற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை. 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள், பெற்றோரின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணியலாம். 12 முதல் 18 வயதுடைய குழந்தைகள் சரியான முறையில், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முகக்கவசம்…

Read More

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வழிமுறைகள் குறித்தும் ஆராய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவின் உறுப்பினர்களாக மருத்துவர்கள் ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் சட்டத்துறை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்கக கூடுதல் இயக்குனரும் குழுவில்…

Read More

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்க உள்ளதாகவும் தகவல்…

Read More

ஒரே சமயத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் வெவ்வேறு இயக்குனர்களுடன் நடிகர் ஜெய் இணைகிறார் . 2002 ஆம் ஆண்டு பகவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெய், சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஜருகண்டி என்ற திரைப்படத்தில் பாடகராக அறிமுகமான ஜெய், சுசீந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் திரைப்படத்தில் ஹீரோவாகவும், இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி யின் திரைப் படத்தில் வில்லனாகவும் ஜெய் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் அட்லீயின் திரைப்பட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் சுந்தர் சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Read More