- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
தமிழகத்தில் 2வது கட்ட கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளன. கொரோனா காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்தது. இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் 2ஆவது கட்ட நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் ஏற்கனவே தேதி குறிப்பிட்டு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் இறுதிவரை இதனை பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் நிவாரணமாக அளிக்கப்படும் மளிகைப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
கிஷோர் கே சாமி கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி இன்று காலை கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார். சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி” என பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், ‘ தைரியம் இருந்தா கை வைச்சு பாரு… நீங்க எல்லாம் யாரு நீங்க சொல்லிட்டா மக்களால்…
அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக்கூட்டத்தில் சசிகலாவுடன் ஆடியோவில் யாராவது பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கபட்டதாக ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர். அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவை விமர்சித்து புகழேந்தி நேற்று பேட்டியளித்த நிலையில், இன்று கட்சியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. மேலும்,சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர்கள் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் பட்ஜெட் 65 கோடி எனவும் இத்திரைப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில், ஜூன் 21-ஆம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரிலீசுக்கு தயாராகி உள்ள மாநாடு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வண்ணம் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் அலுவலக கட்டிடம் காட்டுவதற்காக நடப்பட்ட அடிக்கல் கல்லை சில மணி விவசாயிகள் பிடிங்கி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுபாஜக இயற்றிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர் என்பதும் நாம் அறிந்ததே. இந்த போராட்டத்திற்கு இன்னும் முடிவுக்கு வராது நிலையில் கிடைக்காமல் உள்ளதுஇந்த நிலையில் இன்று ஹரியானா மாநிலத்தில் புதிதாக அலுவலகம் கட்டுவதற்காக பாஜகவினர் நட்டகல்லை வைத்துள்ளனர் பாஜகவினர். அதனை விவசாயிகள் போராட்டம் நடத்தும் விவசாயிகள்பிடுங்கி எறிந்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய அரசு அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் இன்று ஒரே நாளில் 39ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் இறையன்பு வெளியிட்டுள்ளார். அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் ஆட்சியர் சாந்தா நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் ஆட்சியராக இருந்த மேகராஜ் நகராட்சி நிர்வாக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தனது பெயரில் போலியான டுவிட்டர் கணக்கை தொடங்கி கருத்துக்களை பதிவிட்டு வரும் நபர் மீது நடவடிக்கை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கோரி புகார் மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் செந்தில் : தனக்கு ட்விட்டர், முகநூல் கணக்கு பற்றியெல்லாம் எதுவும் தெரியாது எனவும், தான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை எனவும் தெரிவித்தார். தனது நண்பர்கள் மூலம் தனது பெயரில் விஷக் கிருமிகள் யாரோ போலியான கணக்கை ட்விட்டரில் தொடங்கியுள்ளதை அறிந்ததாக அவர் தெரிவித்தார். அந்த டாஸ்மாக் திறப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் டாஸ்மாக்குகளை மூடக் கோரிக்கு வைத்ததுபோல் அந்த ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். போலி கணக்கு தொடர்பாக சென்னை காவல்…
ஓடிடி தளத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகவுள்ளதால் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் படக்குழுவினர் உரையாடவுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்தாண்டு மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் இந்த வாரம் வெளியாகவுள்ளதால் ஜூன் 17 மாலை 4 மணிக்குச் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடவுள்ளார்கள் படக்குழுவினர். நெட்பிளிக்ஸ் இந்தியா ஓடிடி நிறுவனத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் ஆகிய சமூகவலைத்தளங்களில் இந்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாவை பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும் என்று முழங்கிய சேகுவேரா பிறந்த தினம் இன்று. அவரை பற்றி விளக்குகின்றது இந்த தொகுப்பு.. ‘சே குவேரா’ என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவேரா 1928 ஜூன் 14-ம் நாள், அர்ஜென்டினா நாட்டின் ரோசாரியோவில் பிறந்தவர். வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1952-ல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவர். பிற்காலத்தில், ‘லட்சிய வீரர்’ என்று உலகளவில் பெயரெடுத்தார். மாணவப் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபடவும் ஆரம்பித்தார். சே குவேராவின் வீட்டில் 3,000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் தான் இவருக்கு புரட்சி தீ வளரகாரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ் (Karl Heinrich Marx), போல்க்னர், வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் சே வுக்கு சிறப்பான ஆர்வம் இருந்தது.…
21 வயதேயான இந்திய வம்சாவளி பெண் பிரிட்டனின் உயரிய விருதினை பெற்றுள்ளார். கேரளாவை பிறப்பிடமாக கொண்டவர் அமிகா ஜார்ஜ். இவர் 17 வயதில் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, மாதவிடாய் காரணமாக ஏழை எளிய மாணவிகள் பலர் வகுப்புக்கு வராமல் இருந்துள்ளனர். இதனை குறிப்பிட்டு, பள்ளி, கல்லூரிகளில் இலவச நேப்கின்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமிகா அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதன்பயனாக கடந்த 2020ம் ஆண்டு கல்வி நிறுவனங்களுக்கு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில், இவரது செயலை பாராட்டி, ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு பிரிட்டனின் மிக உயரிய, பிரிட்டிஷ் பேரரசின் உறுப்பினர் வரிசைக்கான (Member of the Order) விருது வழங்கப்பட உள்ளது.