- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகப்பெரும் சவாலாக இருக்கும் என மருத்துவ நிபுணர் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மாறுபட்ட டெல்டா வகை கொரோனா மிக வேகமாக பரவி வந்தது. இந்த வகை வைரஸால் இந்தியாவில் மூன்றாம் அலை உருவாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உருமாற்றம் அடைந்த இந்த வைரஸ், இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் பரவி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்டா வகை வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க புற்றுநோய் மருத்துவர் அந்தோணி ஃபாசி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா காரணமாக கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என கூறியுள்ளார். இதுவரை 45 சதவீதம் பேருக்கு மட்டுமே அமெரிக்காவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள சைபர் கிரைம் போலீசார், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூ-டியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வந்தார் மதன். இந்த நிலையில் மதன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மதனின் வங்கிக் கணக்குகளை முடக்கி, அவரின் சொகுசு கார்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் சைபர் கிரைம் போலீசார் தனது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பப்ஜி-யை விடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கியுள்ளனர். மேலும் தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையையும் காவல்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடையவர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையின் வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், சின்மயா நகர், வடபழனி, கீழ்ப்பாக்கம், பெரியமேடு ஆகிய 8 இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மொத்தம் 48 லட்சம் ரூபாய் அளவிற்கு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொள்ளையடித்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்த நிலையில், அவர்களை பிடிக்க தனிப்படையினர் அங்கு விரைந்தனர். இந்நிலையில், எடிஎம் கொள்ளை தொடர்பாக ஹரியானாவில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொள்ளையில் ஈடுப்பட்ட மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் புதிதாய் அமைந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த நிலையில், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கே.என்.நேரு, ஊராட்சிகள் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தலையீட்டால் சிமெண்ட் விலை கடந்த 2 நாட்களில் 55 ரூபாய் சரிந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுமான பொருட்களின் விலையும் 40% வரை உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில்ரூ490 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலையானது 460 ரூபாயாகவும், ஒரு டன் கம்பியின் விலையானது 1100 ரூபாய் வரையிலும் குறைக்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவை தெரிவித்தார். இந்நிலையில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவித்த விலையிலிருந்து மேலும் ரூ.25 குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்கடந்த 2 நாட்களில் சிமெண்ட் விலை 55 ரூபாய் சரிந்து ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.435 க்கு விற்பனை ஆக உள்ளது. இது கட்டுமான துறையினருக்கும் பொதுமக்களுக்கும் திருப்தியை அளித்துள்ளது.
விரைவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தை துக்ளக் நாளிதழ் கிண்டல் செய்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை பொது இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும், ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் அறிவிக்கப்பட்டன. அடுத்து பெண்களும் அர்ச்சகராவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக அரசின் திட்டத்தை விமர்சித்துள்ள துக்ளக் இதழ், இது குறித்து தனது அட்டை படத்தில் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. அதில் விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி மற்றும் திக தொண்டர் ஆகியவர்கள் இடையே நடக்கும் உரையாடலை கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பலரது கோபத்திற்கு ஆளாகி உள்ளது. மூவேந்தன்
நீட் தேர்வின் தாக்கம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க நாளையுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கத்தினை ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட தமிழக அரசு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் 8 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை தமிழக அரசு நியமித்திருந்தது. மேலும், நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ மருத்துவ கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள தனி பெட்டியில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று வரை 25 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வந்த கருத்தில் பெரும்பாலும் நீட் வேண்டாம் என பலர் தெரிவித்துள்ளதாக நேற்று நீதியரசர் ராஜன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு நாளை மாலையுடன் அவகாசம் முடிவடைய இருக்கிறது.
தமிழகத்தில் மின்தடைக்கு காரணம் மின்கம்பிகளில் அணில்கள் ஓடுவதால் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் சில மணி நேரங்கல் மின்தடை ஏற்பட்டது இது குறித்து சமீபத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி : ‘கடந்த சில மாதமாக மின்வாரிய பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்துஅணில்கள் ஓடுவதாலும் மின்தடை ஏற்படுகிறது’ என கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு இணையத்தில் பேசு பொருளானது இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கத்தை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில்: மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். சென்னையில் அடிக்கடி மின் தடை ஏற்படும் மர்மம் என்ன? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?’ என கிண்டலாய் கேள்வி எழுப்பியுள்ளார்…
சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் தேர்வு நடத்தப்படாமல் எப்படி கணக்கிடப்படும் என்ற புதிய மதிப்பீட்டு முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதுதொடா்பான மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் 10, 11, 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கிட்டு வழங்க அங்கீகாரம் வழங்கியது. மேலும், மதிப்பெண் மதிப்பிடுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி
கொரோனா இரண்டாவது அலையில் மத்திய அரசுதோல்வி அடைந்தது போல் அல்லாமல் மூன்றாம் அலையினை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்: கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகும் 3-அலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு முதல் மற்றும் இரண்டாவது அலையில் தோல்வி அடைந்ததுபோல் அல்லாமல், மூன்றாவது அலையை எதிர்க்கொள்ள வேண்டும். தவறுகளை அரசு திருத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மூன்றாவது அலை நிச்சயம் எனில்அதை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை தயார் செய்ய வேண்டும். முதல் மற்றும் இரண்டாவது அலையில் செய்த தவறுகளை அரசு மீண்டும் செய்துவிடக்கூடாது. நேற்று, அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இது,…