- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகத்திற்கு தாவர் சந்த் கெலாட், அரியானாவிற்கு பண்டாரு தத்தாத்ரேயா, கோவா மாநிலத்திற்கு ஸ்ரீதர் பிள்ளை, மத்திய பிரசதேத்திற்கு மங்குபாய்படேல், மிசோரமிற்கு ஹரிபாபு, ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ராஜேந்திரன் விஸ்வநாத், திரிபுராவிற்கு சத்யதேவ் நாராயணன், ஜார்கண்ட் ரமேஷ்பயல் ஆகியேரை மாநில ஆளுநர்களாக நியமித்திருக்கிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். இதில் கர்நாடகமாநிலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தாவர் சந்த் கெலாட், அரியானா மாநிலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டனர். முதல் வீடியோவுக்கே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து சமையல் தொடர்பாக பல வீடியோக்கள் பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று அந்த யூடியூப் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் கிடைத்துள்ளது. ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கொண்ட முதல் தமிழ் யூடியூப் சேனல் இன்று பெருமையை பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, இந்த யூடியூப் சேனலின் நிர்வாகிகள் 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதிக்கு வழங்கினர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், “வில்லேஜ் குக்கிங் சேனல் அடைந்த உயரத்திற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழக அரசுக்கு கொரோனா நிவாரணமாக தங்களது பங்களிப்பை அளித்ததற்கும்…
ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூ-டியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வந்தார் மதன். இந்த நிலையில் மதன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மதனின் வங்கிக் கணக்குகளை முடக்கி, அவரின் சொகுசு கார்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே தனக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை என கோரி மதன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அதில் விசாரணை முழுமையாக முடிவடையாததால், தற்போது மதனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.…
கோவிலில் சாமி வந்தவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் – இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படம் குறித்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் டையடாகி விட்டனர். இந்த படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள், மோடி, எடப்பாடி தொடங்கி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியிடம் கூட அப்டேட் கேட்டு அதிர்ச்சி கொடுத்தனர். அஜித் தரப்பில் அறிக்கையே விட்ட நிலையிலும் அடங்காத அஜித் ரசிகர்கள், சாமி வந்த ஒருவரிடம் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரியில் அஜித் ரசிகர்கள் கோயில் ஒன்றில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அடுத்த 5 மாதத்திற்கு இலவசமாக கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சாஸ்திரி பவனில் தென் மண்டல இந்திய உணவு கழக இயக்குனர் நசீம் மற்றும் தமிழக பொது மேலாளர் சைஜூ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய அரசு ரூ. 18க்கு நெல்லை கொள்முதல் செய்து, 1 கிலோ அரிசிக்கு ரூ.38 வரை செலவு செய்வதாகவும், அதனை மாநில அரசுகள் அரிசி ரூ.3க்கும், கோதுமை ரூ.2க்கும் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர். பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொரோனா நேரத்தில் 80 கோடி மக்களுக்கு எப்போதும் வழங்கப்படும் 5 கிலோ அரிசியை விட கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்பட்டதாகவும், இந்த திட்டம் அடுத்த 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். தமிழகத்திற்கு எப்போதும் 3 லட்சத்து 6 ஆயிரம் டன் வழங்கி வருவதாகவும், தற்போது பிரதமர் யோஜனா…
சிவசிங்கர் பாபா’வின் பக்தைகள் ஐந்து பேருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி கைது செய்த நிலையில்தேடப்பட்டு வந்த பள்ளியின் ஆசிரியை தீபா வெங்கடராமன், ஜானகி சினிவாசன், கருணாம்பிகை, திவ்யா, பாரதி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில் இன்று இது தொடர்பான வழக்கினை விசாரித்த நீதி மன்றம் பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை காவல்துறையினர் தாக்கல் செய்தனர் சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை என தீர்பளித்த நீதிபதிகள். இவர்கள் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்து இட வேண்டும்; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் நிபந்தனையோடு ஜாமீன் வழங்கினர்.
திருச்சியை சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சாமி, கடந்த 2018ஆம் ஆண்டில் பீமா கோரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கர் பரிஷத் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், தலேஜா சிறையில் பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஸ்டேன் சாமிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க மனித உரிமைகள் ஆணையமும், ஐநா முக்கிய பிரமுகரும் அறிவுறுத்தி இருந்த நிலையில் அவர் சிறையிலேயே காலமானார். சமூக ஆர்வலர் ஸ்டேன் சாமியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரஙகலை தெரிவித்து வரும் நிலையில் வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில் பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான்சாமி உயிரிழந்தார் பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் பயங்கரவாதத்தை’ வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
ஊரடங்கு தளர்வினால் நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் எலிகள் ஒயினை குடித்சம்பவம் அரேங்கேறியுள்ளது. உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் இயற்கைக்கு நன்மை செய்பவைதாம். மரங்களின் விதைகள் பல்வேறு இடங்களில் பரவுவதற்கு எலிகளின் பங்கு மிகவும் அவசியம். உலகின் உணவுச்சங்கிலி நிச்சயம் எலிகளின்றி முழுமை பெறாது. அதே சமயம் எலிகள் சில சமயம் தனது சேட்டைகளால் மனித குலத்துக்கு அவ்வப்போது தொந்தரவு கொடுத்து வருகிறது. அந்த வகையில் தான் , நீலகிரி மாவட்டம் கூடலூர் காலம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இன்று (ஜூலை 05) காலை மேற்பார்வையாளர் செந்தில்குமார், விற்பனையாளர் நித்தியாநந்தன் ஆகியோர் திறந்தனர். அப்போது, கடையில் இருந்த 12 குவாட்டர் பாட்டில்களின் மூடியை சேதப்படுத்தி இருந்ததுடன், அதிலிருந்த ஒயின் காலியாக இருப்பதை கண்டு, ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடையில் நடந்தது என்ன என்பது குறித்து ஊழியர்கள் சோதனை செய்தபோது எலிகள் பாட்டில்களை கீழே தள்ளி, மூடிகளை சேதப்படுத்தி…
அமெரிக்காவில். கால்பந்து வீரர் தனது காதலியிடம் காதலை மைதானத்தில் வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 24 அணிகள் மற்றும் கனாடாவைச் சேர்ந்த 3 அணிகள் என மொத்தம் 27 அணிகள் பங்கேற்று விளையாடும்மேஜர் லீம் சாக்கர் கால்பந்து தொடர் நடந்து வருகிறது இதில் தொடரின் ஒரு போட்டியில், மின்னிசோட்டா எஃப்.சி மற்றும் சான் ஜோஸ் எர்த்குவேக் ஆகிய அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியின் முடிவில் 2-2 என இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்து போட்டி டிரா ஆனது. இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் மின்னிசோட்டா எஃப்.சி அணியைச் சேர்ந்த ஹஸ்ஸானி டாட்சன் ஸ்டீபன்சன் என்ற வீரர், அவரது காதலியிடம் .மைதானத்தில் மண்டியிட்டு மோதிரத்தை பரிசளித்து தனது காதலியிடம் ப்ரொபோஸ் செய்தார்.மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகப்படுத்த காதலை சொன்னவுடன் வெட்கபட்ட ஹஸ்ஸானி காதலி கட்டித்தழுவி காதலை ஏற்றுக்கொண்டார். ஹஸ்ஸானி விளையாடி அந்த போட்டியில் என்னமோ அவரது…
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலில் விலை 100 ரூபாயைக் கடந்த நிலையில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்கள் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், சைக்கிளில் வந்து பிரமேலதா விஜயகாந்த் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தால் சாமானிய மக்கள் எவ்வாறு வாழ முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.