அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும்.. ஓபிஎஸ் அறிக்கை

SHARE

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டப்படுவதற்கான முயற்சியை தடுக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் அறிவித்தது அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் கர்நாடகா எடுக்ககூடாது என்றும், கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உரிய அறிவுரையை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் மேகதாதுவில் அணைகட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்பு தமிழக மக்களையும், விவசாய மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அணை கட்டப்பட்டால் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்றும், தமிழகம் பாலைவனமாகும் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

மேலும் அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் கூறி வருவதற்கு அதிமுக கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ள ஓபிஎஸ், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டுவந்தது நாம்தான்: பிரதமர் நரேந்திர மோடி

Admin

‘‘1000 ரூபாய்” யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்

Admin

எனக்கு எதுவும் தெரியாது சார்….. காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்

Admin

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

2ஆம் கட்ட கொரோனா நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் இன்று முதல் விநியோகம்…!

Admin

நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

Admin

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

Admin

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி – கிளம்பும் எதிர்ப்பு

Admin

Leave a Comment