அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும்.. ஓபிஎஸ் அறிக்கை

SHARE

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டப்படுவதற்கான முயற்சியை தடுக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் அறிவித்தது அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் கர்நாடகா எடுக்ககூடாது என்றும், கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உரிய அறிவுரையை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் மேகதாதுவில் அணைகட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்பு தமிழக மக்களையும், விவசாய மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அணை கட்டப்பட்டால் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்றும், தமிழகம் பாலைவனமாகும் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

மேலும் அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் கூறி வருவதற்கு அதிமுக கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ள ஓபிஎஸ், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Admin

என்ன கொடுமை சார் இது… அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி

Admin

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு வரலாம்!: சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!.

இன்று அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்..!!

Admin

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

Leave a Comment