- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ஆய்வு செய்வதற்காக சென்றார். அப்போது அங்கு இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் அவர் மீது கை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த நபரை கன்னத்தில் அறைந்ததாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக பாஜக அமைச்சர் சிடி ரவி, “கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவக்குமார் தன்னுடைய கட்சி நபர் ஒருவரை பொதுவெளியில் அறைந்துள்ளார்? வன்முறை செயல்களில் ஈடுபட சிவக்குமாருக்கு ராகுல் காந்தி முழு சுதந்திரம் அளித்துவிட்டாரா என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார். பலரும் டி.கே.சிவக்குமாரின் செயல்பாட்டை கண்டித்து வரும் சூழலில் அடி வாங்கிய நபர் சரியாக கொரோனா…
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னையில் நடந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி காலில் செருப்பு அணிந்து பங்கேற்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறுகையில், தேர்தலுக்கு முன் ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்’ எனப் பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து இந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்துள்ளார் என்றும் ,கருணாநிதி சமாதிக்கு செருப்பு அணியாமல் செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், இந்து கடவுள்களை செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார். இதற்கு…
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலைகள், அரசு மானியங்கள் கிடைக்காது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என உத்தரப் பிரதேசத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அரசு உருவாக்கியுள்ள மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன. அதன்படிஉத்தர பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள்அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது. 2 குழந்தைகள் மட்டும் பெற்றவர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் கூடுதலாக 3 சதவீத படி உயர்த்தி தரப்படும். 2 குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு, அவர்களது பணிக்காலத்தில் கூடுதலாக 2 இன்க்ரிமென்ட் வழங்கப்படும். அல்லது பேறு கால விடுமுறை 12 மாதம் முழு சம்பளத்துடன் வழங்கப்படும். இதனைத் தவிர குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து உயர்நிலை வகுப்பில் பாடம் சேர்க்கப்படும். அனைத்து…
பிரதமர் மோடி தலைமையிலான .அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 42 சதவீத பேர் (33 பேர்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ள அறிக்கையின்படிபிரதமர் அமைச்சரைவையில் 24 பேர் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. 5 பேர் மீது வகுப்புவாத ஒற்றுமையைக் குலைத்த வழக்குகளும், 7 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறிய வழக்குகளும் உள்ளன. அத்துடன், அமைச்சரவையில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். சராசரியாக ஒரு அமைச்சருக்கு 16.24 கோடி சொத்து உள்ளது. நான்கு பேருக்கு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. மேலும் 12 மத்திய அமைச்சர்கள் 8 வகுப்பு முதல் 12 வகுப்புவரை படித்துள்ளனர். 64 அமைச்சர்கள் பட்டப்படிப்போ அல்லது அதற்கு மேலோ படித்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.
ரஜினிகாந்த் தன் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவபரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில். அங்கு பரிசோதனை முடித்து விட்டு கடந்த 09 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்பினார். தற்போது ரஜினிகாந்த் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் ரஜினி தரப்பினர் கூறியுள்ளனர். இந்த நிலையில், வரும் ஜூலை 12 ஆம் தேதி தன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சென்னையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர் மன்றத்தினர் பலரும்வேறு கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில் ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்க ஒப்பந்தமானார் லோகேஷ் கனகராஜ். இதன் பணிகள் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில்தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. முன்னதாக, படத்தின் பெயரை டீஸரை க அறிவித்த படக்குழு. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுள்ளது. சமூக வலைதளத்தில் இதனைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில்விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கமல்: வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம் என தெரிவித்துள்ளார். இயக்குநர் லோகஷ்கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில்…
கொங்கு நாடு தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலக்கியங்களில் இருந்து ஆதாரங்களை மேற்கோள்காட்டி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகி உள்ளது. மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட எல். முருகன் பற்றிய மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கொங்குநாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் கொங்குநாடு என ஒரு மாவட்டம் இல்லை ஆகவே கொங்குநாடு என மத்திய அரசு ஏன் குறிப்பிட்டது என கேள்வி எழுந்த நிலையில் கொங்குநாடு தனி மாநிலம் உருவாக்கப்படலாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று வெளியான நாளிதழ் செய்தியை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன். அத்துடன் கொங்குநாடு தொடர்பான பல்வேறு இலக்கிய ஆதாரங்களையும் வானதி சீனிவாசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் வானதி சீனிவாசன், கொங்கு தனி…
தமிழ்கத்தின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமான சோ.சத்தியசீலன் திருச்சியில் உடல்நலக் குறைவால் காலமானார். 88 வயதான சத்தியசீலன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இலக்கியத் திறனுக்காக கலைமாமணி, சொல்லின் செல்வர் விருதுகளை சோ.சத்தியசீலன் பெற்றுள்ளார். குன்றக்குடி அடிகளாரால் நாவுக்கரசர் என்ற பட்டமும் பெற்றவர். பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஆகிய பதவிகளையும் சோ.சத்தியசீலன் வகித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. சத்யசீலன் மறைவுக்கு ஆசிரியர்களும், தமிழறிஞர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
துரோகம் என்பதை அன்றே குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்: மகேந்திரன், பத்மபிரியாவை விளாசும் மக்கள் நீதி மய்யம்!
யாரென்றே அடையாளம் தெரியாதவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்து அங்கீகாரம் பெற்றவுடன் பிற கட்சிகளுக்கு சென்றுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மெளரியா விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வி அடைந்ததால் மக்கள் நீதி மையம் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா உள்ளிட்ட பலரும் கட்சியிலிருந்து விலகி நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் மகேந்திரனும் பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தது குறித்து வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் துணை தலைவர் மெளரியா , துரோகம் என்பதை கமல்ஹாசன் அன்றே குறிப்பிட்டு இருந்தார். யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் இருந்தவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடையாளத்தைப் பெற்று வியாபாரப் பொருளாக்கி பிற…
சென்னை அண்ணா சாலையில் 10 வயது சிறுவன் சசிவர்ஷன் என்பவர் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை உடனடியாக சிகிச்சை செய்ய முடிவெடுத்த டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கான ஊசியை செலுத்த முயற்சித்துள்ளனர். அந்த சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் டாக்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். அப்போது அங்கு வந்த தன்னார்வலர் ஒருவர் சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தபோது, சசிவர்ஷன் ஒரு தீவிரமான விஜய் ரசிகன் என்பதை தெரிந்து கொண்டார். இதனையடுத்து அவர் தனது மொபைல் போனில் இருந்த விஜய் நடித்த பிகில் படத்தை காண்பித்தார். அந்த சிறுவன் உற்சாக மிகுதியில் பிகில் படத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்கும் ஊசியை டாக்டர்கள் செலுத்தினர். அந்த சிறுவனும் விஜய் படத்தை பார்த்துக் கொண்டே சிகிச்சைக்கு ஒத்துழைத்தான். இதனையடுத்து…