தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கா..? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

SHARE

தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்

சென்னை சைதாப்பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்துக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு அதிலும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்துக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு இந்த முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, மா.சுப்ரமணியன்,

கேரளாவில் இதுவரை 18 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழக கேரள எல்லையோர கிராமங்களில் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது

Admin

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

Admin

ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை! – காரணம் என்ன?

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி…!

Admin

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

Leave a Comment