- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட உள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து மாணவிகள் 3 பேர் நேரடியாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி காசியாபாத்தில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து செங்கல்பபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். குறிப்பாக பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறைக்கு அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள பெண்டிரைவ், ஹார்டிஸ்க் போன்றவற்றை கைப்பற்றினர்.…
தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை படம் மூலம் அறிமுகமானார் நடிகை சாலினி. முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து ஷாலினிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஷாலினி அமர்க்களம் படத்தில் முதல் முறையாக நடிகர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் நடிகர் அஜித்தை கரம் பிடித்து செட்டிலான ஷாலினி, குடும்பம் குழந்தை என சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.இந்நிலையில் ஷாலினி பிரமாண்ட படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி கெஸ்ட் ரோல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மதுரை மாட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ஞானப்பிரகாசம், வினோத்குமார். இவர்கள் ஆழ்த்துளைக் கிணறு மூலம் விவசாயம் செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். பருவமழையின்மையாலும், காலநிலை மாற்றத்தால் கிணற்றில் தண்ணீர் வற்றியது. இதனையடுத்து அரசு ஏற்பாட்டின் பேரில், ரூ.1 லட்சம் மதிப்பில் 20 சென்ட் பரப்பளவில் பண்ணைக்குட்டை வெட்டிக் கொடுக்கப்பட்டது. அதில் தண்ணீரைச் சேமித்து வைக்க வைக்க ஆழ்துளைக் கிணற்றின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் பண்ணைக்குட்டை பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வாழை, தென்னை, கொய்யா, கத்தரி, தக்காளி, கீரை வகைகள் என ஒரு அடி இடத்தைக்கூட விடாமல் எல்லா இடங்களிலும் நடவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் குட்டையில் கட்லா, ரோகு, கெண்டை, சில்வர் கிராப் ஆகிய மீன்களையும் வளர்த்து வந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது லாபம் ஈட்டி வருகின்றனர். சகோதரர்கள் இருவரும் விவசாயத்தில் சாதனை படைத்து வருவது பெரும் வரவேற்பை பெற்றதுடன் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
மேற்கு மண்டலத்தில் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட 34 காவல் ஆய்வாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தை நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக காவல்துறையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் மிகவும் செழிப்பான மண்டலமாக மேற்கு மண்டலம் இயங்கி வருகிறது. இந்த மண்டலத்தில் தான் அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன் ஆகியோர் தொகுதிகள் உள்ளன. இதனால் அதிமுக ஆட்சியின்போது மேற்கு மண்டலத்தில் காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமான நபர்களை மட்டும் தான் பணியமர்த்தி இருந்தனர்.மேற்கு மண்டலத்தில் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற இவர்களின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் தேர்தல் நேரத்தில் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் முதல்…
நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். கோரிக்கையை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிக்கப்பட்ட அபராத தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, சொகுசு கார் தொடர்பாக உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில், கடந்த முறை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு…
முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனையை அதிகாரிகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.20க்கும் மேற்பட்ட வருமான வரி சோதனை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. போக்குவரத்து துறை அமைச்சராக எம்ஆர் விஜயபாஸ்கர் இருந்தபோது கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது அவருடைய வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருமான வரி சோதனை முடிவில் அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று…
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வருவதை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகிசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அந்த சுற்றறிக்கையில் உள்ளது இதுதான் : மதுரை மாநகராட்சி மண்டலம் – 4 சத்யசாய் நகரில் அமைத்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் ஆர் எஸ் எஸ் தலைவரான மோகன் பகவத், 22.07.2021 முதல் 26.07.2021 வரை நேரில் கலந்து கொள்ள உள்ளார். அவரின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து, அன்னார். கலந்து கொள்ள இருக்கும் நிகழச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீராமத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல், போன்ற பணிகளை செய்திடவும், அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சிப் பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணித்தல் போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர்…
கீழடி அருகே அமைந்துள்ள அகரத்தில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் கொண்ட சுவர் கண்டறியப்பட்டுள்ளது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தொன்றியது தமிழ் நாகரிகம் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லி வருகிறது கீழடி. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கீழடியை தொடர்ந்து அகரத்தில் முதல் முறையாக மூன்று வரிசை கொண்ட சுடுமண் செங்கல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது. முன்பு கீழடியில் கிடைத்த செங்கல் நீளம், அகலம் கொண்டதாக இருந்தது. ஆனால் அகரத்தில் செங்கற்கள் மாற்பட்ட வடிவில் உள்ளன அதுவும். மூன்று வரிசையாக செங்கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்து கட்டிடம் கட்டியுள்ளனர். பிடிமானத்திற்காக களிமண் பயன்படுத்தி இருப்பதாக ஆராய்ச்சியளர்கள் கூறுகின்றனர். அகரத்தில் இதுவரை 4 அடி ஆழத்திற்கு மட்டும் அகழாய்வு பணிகள் நடந்துள்ளநிலையில் தற்போது சுமார்…
கணேஷ் என்பவர் தமிழ் எழுத்துகள் மூலமாக ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கணேஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துகள் கொண்டு திருவள்ளூர் ஓவியத்தை வரைந்து ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த படத்தைப் பகிர்ந்து, அன்பின் வழியது உயிர்நிலை என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்!” எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது பதிவாகும் கொரோனா தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்படுவதாக அமெரிக்க மருத்துவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி தெரிவித்து உள்ளதாவது: டெல்டா வகை கோவிட் வைரஸ் மிக மோசமான வைரஸ் என்பது தற்போது தெளிவாகிறது . அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பதிவு செய்யப்படும் கோவிட் தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்பட்டுள்ளது.த டுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படவில்லை. அந்த அளவுக்கு தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதே பாதிப்பில் இருந்து காக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்