அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 34 இன்ஸ்பெக்டர்கள்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

SHARE

மேற்கு மண்டலத்தில் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட 34 காவல் ஆய்வாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தை நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக காவல்துறையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் மிகவும் செழிப்பான மண்டலமாக மேற்கு மண்டலம் இயங்கி வருகிறது.

இந்த மண்டலத்தில் தான் அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன் ஆகியோர் தொகுதிகள் உள்ளன.

இதனால் அதிமுக ஆட்சியின்போது மேற்கு மண்டலத்தில் காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமான நபர்களை மட்டும் தான் பணியமர்த்தி இருந்தனர்.மேற்கு மண்டலத்தில் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற இவர்களின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் தேர்தல் நேரத்தில் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணியிடாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று 67 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் பணியாற்றி வந்த 34 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

Pamban Mu Prasanth

போராடும் தாயின் நீதிக்கு இது நீண்ட காலம்…அற்புதம்மாளுக்கு கார்த்திக் சுப்புராஜ் ஆதரவு

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

ஹைட்ரோ கார்பனுக்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிகளை வழங்காது – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Admin

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஊரடங்கில் தளர்வு.. 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Admin

நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

Admin

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Admin

Leave a Comment