- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். திரைத்துறையில் மட்டும் கவனம் செலுத்தாது சமூக அக்கறைகளிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இளைஞர்களுக்கு கல்வி, விவசாயிகளுக்கு உதவி என இருவரும் சேர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் இருவரும் தனிப்பட்ட முறையில் செல்பி எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் சூர்யாவின் 46 வது பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவுடன் 2019ஆம் ஆண்டு முதன் முதலில் எடுத்த செல்பி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி ஆட்சியில் உள்ள திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்ட அறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுக அரசு பொய் வழக்குப் போடும் அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளதாக அதிமுக குற்றச்சாட்டியுள்ளது. தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளனர். நீட்தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை.இதனை எதிர்த்து கொரோனா விதியைப் பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அதிமுக அறிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்:- நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும், அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கபட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. சமூகநலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல. திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை…
முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார். நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் சாந்தினி. மலேசிய குடியுரிமை பெற்ற இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஒன்றாக ஐந்து வருடங்கள் வாழ்ந்ததாகவும் மூன்று முறை கர்ப்பம் அடைந்து அவர் மிரட்டலால் அதை கலைத்ததாகவும் கூறியிருந்தார். தற்போது திருமணம் பற்றி பேசினால் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.இந்த புகார் மனு மீது அடையாறு மகளிர் போலீசார் விசாரித்து, மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு, நடிகை சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் மீதான விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது
குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கியது யார்..? டுவிட்டர் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம்
குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது தொடர்பான விவரங்களை கேட்டு சென்னை சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். கடந்த 20ம் தேதி டி.ஜி.பி சைலேந்திர பாபுவை சந்தித்து பாஜக நிர்வாகி குஷ்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தவறாது யாரும் பயன்படுத்த விடக்கூடாது, எனது ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி” புகாரில் குஷ்பு தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்மிற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் குஷ்பு கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர், ஜி.பி.எஸ் மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி வாங்க அனுமதித்ததில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாகனங்களில் ஒட்டப்படும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஒப்பந்தம், வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் வாங்கும் ஒப்பந்தம் ஆகிய இந்த இரண்டு ஒப்பந்தங்கள் தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சிக்க காரணம் என்று கூறப்படுகிறது. மோட்டார் வாகன சட்டத்தின் படி விபத்தை தவிர்க்க வாகனங்களுக்கு பின்பக்கம் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வேண்டும். அப்படிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே ஆர்.டி.ஒ அனுமதி கொடுப்பார். இந்த ஸ்டிக்கர்களை விற்பனை செய்ய மத்திய அரசு இந்தியாவில் 11 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு, தனியார் இணைய தளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே ஸ்டிக்கர் பெற முடியும் என்ற விதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. அனுமதி பெற்ற…
பிரேசில் அதிபர் போல்சனேரோவின் காணொளிகள் சிலவற்றை இணையதளத்தில் இருந்து யூடியூப் நீக்கியுள்ளது. கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக பிரேசில் அதிபர் போல்சனேரோவின் வீடியோக்கள் சிலவற்றையூடியூப் நீக்கியுள்ளது. யூடியூப்பின் கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த முடிவை எடுக்கவில்லை என்றும். யூடியூப்பின் கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை; உள்ளடக்க விதிகள் காரணமாகவே நீக்கியுள்ளோம் என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று தொடங்கிய போது அதிபர் போலசனேரோ பொது முடக்கம், முக்கவசம் அணிதல், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
தங்கள் பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப் நிறுவனம் உலகம் முழுவதும் தகவல் பறிமாற்றத்தில் முதன்மையாக உள்ளது. இதனால் நாளுக்கு நாள் அதன் பயன்பாடு அதிகரித்தது. இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில் அண்மையில் மாற்றம் செய்தது. அதன்படி, பயனாளிகளின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவித்தது. இதற்கு வாட்ஸ் அப் பயனர்கள் தரப்பில் இருந்தும், அரசு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வழக்கின் விசாரணையின்போது, ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பகிரப்படாது என வாட்ஸ்அப் உறுதியளித்ததுள்ளது
டெல்டாவை விட வீரியம் நிறைந்த வைரஸ் தோன்றலாம் உலகசுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது. சீனாவில் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போதைய உருமாற்றம் ஆன டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் போன்ற வைரஸ்கள் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலகளவில் கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதித்தவர்களில் 75% பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக உறுதி செய்யப்பட்ட டெல்டா வகை கொரோனா, 124 நாடுகளில் இருந்த நிலையில் மேலும் 14 நாடுகளுக்கு இந்த வகை கொரோனா பரவியுள்ளது. உருமாற்றமடைந்த ஆல்பா, பீட்டா, காமா வகை கொரோனாவை காட்டிலும் டெல்டா வகை மிக வேகமாக பரவும் என்றும் அனைத்து நாடுகளிலும் இன்னும் சில மாதங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தப்போவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டெல்டாவை விட வீரியம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள்ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கான அப்டேட்காக காத்திருந்தனர். படத்தின் ஒரு சில புகைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் இப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவலுக்காக காத்திருந்தனர். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது சூர்யா 23ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ளதால் தற்போது படக்குழு சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்தற்போது இவர்கள் சொன்னபடியே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது