- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசுப் பொருளை பிரித்து பார்த்ததும் கோபமான மணப்பெண் அதை தூக்கி எறிந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக நண்பர்களின் திருமணங்களின் போது மணமகன், மணமகளின் நண்பர்கள் அவர்களுக்கு வேடிக்கையான பரிசுபொருட்களை கொடுப்பார்கள். வெங்காய விலை உயர்ந்த போது மணமகனுக்கு வெங்காய மாலைகளை அணிவித்தனர். மேலும் கொரோனா நேரத்தில் மாஸ்க்குகளையும் சானிடைசர்களையும் பரிசாக கொடுத்ததையும் சிலிண்டர் விலையேற்றத்தின் போது சிலிண்டரையும் நம்மாட்கள் பரிசாக கொடுத்ததையும் யாரும் மறக்கவில்லை. அந்த வகையில் வடமாநிலத்தவரின் திருமண நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசு பொருளை பார்த்து கோபமடைந்த மணப்பெண் அந்த பொருளை தூக்கிபோடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. அப்படி அந்த மணப்பெண்ணுக்கு என்னதான் கிப்ட் கொடுத்தார்கள் மணப்பெண் கோபம் அடைய காரணம் என்ன? காரணம் இதுதான் மணமகளுக்கு கிப்ட் கொடுத்த நண்பர்கள் உடனடியாக அதை பிரிக்க சொல்கிறார்கள். ஆர்வத்துடன் பிரித்த பார்த்த மணமகள் அதை பார்த்தவுடன் கடுப்பாகிவிடுகிறார். காரணம்…
புலவா் இரா. இளங்குமரனாா் (94), உடல்நலக் குறைவு காரணமாக மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானாா். திருநெல்வேலி மாவட்டம், வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927 ஜனவரி 30 ஆம் தேதி பிறந்த இளங்குமரனாா்திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946 ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ் ஆசிரியரக தனது தமிழ் வளர்ச்சி பணியினை தொடங்கினார். நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா், இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளாா். மதுரை அங்கையற்கண்ணி ஆலயத்தில் 1958 இல் ‘குண்டலகேசி’ எனும் நூலை வெளியிட்டாா்.அதனை தொடா்ந்து, திருக்கு கட்டுரைத் தொகுப்பு எனும் நூலை 1963 ல் பிரதமா் நேரு வெளியிட்டாா். சங்க இலக்கிய வரிசையில் புானூறு எனும் நூலை 2003 ல் அப்போதைய குடியரசு தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டாா் அதனை தொடர்ந்து எங்கும் பொழியும் இன்பத்தமிழ், திருக்கு தமிழ் மரபு என்பன உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும் திருச்சியில் திருவள்ளுவா் தவசாலை…
மாமல்லபுரம் அருகே அதிவேகமாக ஓட்டி காரை விபத்துக்கு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாடல் அழகியாக வலம் வந்த யாஷிகா ஆனந்த், துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த யாஷிகா, இருட்டு அறையில் முரட்டு குத்து என்றப் படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமானார். உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், சல்ஃபர், பாம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார் யாஷிகா. இந்நிலையில், நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று திரும்பிய யாஷிகாவின் கார் மாமல்லபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் காரில் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும்…
டுவிட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 20ம் தேதி டி.ஜி.பி சைலேந்திர பாபுவை சந்தித்து பாஜக நிர்வாகி குஷ்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தவறாக யாரும் பயன்படுத்தி விடக்கூடாது எனவும், எனது டுவிட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி” யும் புகாரில் குஷ்பு தெரிவித்துள்ளார். குஷ்பு அளித்த புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, இந்த விவகாரத்தை கையிலெடுத்த சைபர் கிரைம் போலீசார் குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார் என்ற விவரத்தை தருமாறும், அந்த கணக்கை மீண்டும் அவரிடமே வழங்குமாறும் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம்…
அரியலூரில் அதிசயமாக ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆர்வமுடன் பொதுமக்கள் கண்டு செல்கின்றனர். அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவர் கடந்த பத்தாண்டுகளாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆடு ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றது. அதில் சிவன் போன்று நெற்றியில் ஒற்றை கண்ணுடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வியந்து ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர். ஆடி முதல் வெள்ளியில் சிவனைப் போன்று நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியால் கிராமத்திற்கு அதிசயம் நிகழும் என பொதுமக்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்து ஆர்வமுடன் கண்டு வணங்கி செல்கின்றனர். இதனால் அந்த விவசாயிக்கும், ஆடு வளர்க்கும் தங்களது குடும்பத்திற்கும் நல்லது நடக்கும் என மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்வது தொடர்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்திற்காக நிற்கும் போது, ஒரு பயணியாக இருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச்செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உரிய நிறுத்தத்தில் மட்டுமே பேருந்தை நிறுத்த வேண்டும், பேருந்தில் இடமில்லை என மகளிர்களை பேருந்தில் இருந்து இறக்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வயது முதிர்ந்த மகளிருக்கு இருக்கையில் அமர உதவிபுரிய வேண்டும் என்றும், பெண் பயணிகளுடம் எரிச்சலாகவோ, கோபமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இன்று திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஒ. பன்னீர்செல்வம் தமிழக தேர்தலுக்கு பின் முதன்முறையாக திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை குறித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் உள்ள கட்சிக்குதான் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதால் அது தொடர்பாகவும் பேசப்படலாம் என கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டியது வரலாம் என எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம் கொரோனா வேகமாக உருமாறி வருவதால் இந்தியாவில் மூன்றாம் அலைக்கான பாதிப்பும் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர், இந்தியாவில் உருமாற்ற கொரோனா அதிகரிப்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளோடு நிறுத்தாமல் மூன்றாவது டோஸ் போட வேண்டிய தேவை ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.
உலக பணக்காரர் எலான் மஸ்க் போட்ட ஒரு லைக்கால், சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஏழரை கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற சென்னையில் இயங்கி வரும் நிறுவனம் ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே ட்ரோன் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் என்பவரால் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் உலக பணக்கார்களில் ஒருவரான எலான் மஸ்க் கருடா ஏரோஸ்பேஸ் குழுவினர், சிங்கப்பூரில் உள்ள சூரியசக்தி மின் உற்பத்தி மையத்தில் உள்ள, 1 லட்சத்துக்கும் அதிமான சோலார் பேனல்களை பராமரிக்க, தங்களது ட்ரோன் பயன்படுத்தப்படுவதாக கூறி அந் நிறுவனத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் லைக் செய்துள்ளார், இதனால் கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்திற்கு ஏழரைக் கோடி ரூபாய் முதலீடு செய்ய…
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முதற்கட்ட தகவல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது, இதானால் முன்னாள் அமைச்சரின் வங்கி கணக்கு முடக்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இந்த சோதனையொல் ரூ 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர். மேலும், விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில்,எம்.ஆர்.விஜய பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 % சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது,2016 ஆம் ஆண்டு தேர்தல் வேட்புமனுவில் ரூ.2.51…