- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
ஆந்திராவில் சன்னிலியோனின் பேனரை வயலில் வைத்து விவசாயி ஒருவர் செய்த செயல் பலரையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கினபல்லி சென்சு ரெட்டி என்ற விவசாயி தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் முட்டைகோஸ், காளிஃபிளவர், மிளகாய் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளார். நன்கு செழித்து வளரும் இவரின் பயிர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு பொதுமக்கள் அங்கினபல்லியிடம் விவரித்துள்ளனர். இதனால் கண் திருஷ்டி படுவதாக நினைத்த அவர், அந்த கிராமத்தினர் மற்றும் தனது விவசாய நிலம் வழியாக கடந்து செல்பவர்களின் பார்வை தனது நிலத்தின் மீது படாமல் இருக்க வித்தியாசமாக ஐடியா ஒன்றை செய்தார். தனது நிலத்தை சுற்றி பல இடங்களில் நடிகை சன்னி லியோனின் ஆள் உயர போஸ்டரை தான் வைத்துள்ளார். அதுவும் சன்னி லியோனின் பிகினி ஃபோட்டோவை வைத்துள்ளார். இப்போது இவரின் நிலத்தை கடந்து செல்பவர்களின் பார்வை நிலத்தை பார்ப்பதற்கு பதிலாக சன்னி…
வாங்கிய கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரர் என ஏன் வங்கிகள் அழைக்கிறது என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றார். அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க பிரிட்டன் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய நிலுவைக் கடன் மொத்தமும் மீட்கப்பட்டதாக ஐடிபிஐ வங்கி அறிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக அவர்…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே சில தினங்களுக்கு முன் ஃபரா கான் இயக்கிய விளம்பரப் படத்தில் மீண்டும் 7 ஆம் எண் ஒருநாள் தொடருக்கான ஜெர்சியில் தோனி நடித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அவர் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்தாட்ட பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மாஸ்ஸான லுக்கில் பார்ப்பதற்கு செம்ம ஸ்டைலிஷ்ஷாக தோனி உள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக அதிகரித்துள்ளது. உலக தலைவர்களில் டிவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களில் பட்டியலில் இந்திய பிரதமர் மோடியும் ஒருவர். வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அவரது கருத்துகளையும், மக்களுக்கான தகவல்களையும் அவர் சமூகவலைத்தளத்தின் மூலமாக தெரிவித்து வருகிறார். குஜராத் முதல்வராக இருந்த போது கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முதலாக டுவிட்டரில் இணைந்த அவரை 2010ல் ஒரு லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். பின்னர் 2011ல் 4 லட்சம் பேராக உயர்ந்தது. இப்படியாக உயர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் 6 கோடியை கடந்த பாலோயர்கள் எண்ணிக்கை தற்போது 7 கோடியை எட்டியுள்ளது. உலக அளவில் அதிக டுவிட்டர் பாலோயர்களை கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் மோடிக்கு அடுத்த இடத்தில் 4.5 கோடி பாலோயர்களுடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்…
அமெரிக்காவின் அலாஸ்கா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நேற்று மாலைஅலாஸ்கா தீபகற்பத்தில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால் அலாஸ்கா பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையினை .அமெரிக்க அரசு, விடுத்துள்ளது. அமெரிக்க அரசின் எச்சரிக்கைபடி அலஸ்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால், அபாயகராமான சுனாமி அலைகள் அடுத்த மூன்று மணி நேரத்தில் சில கடற்கரைகளில் உருவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், பெர்ரிவில்லே என்ற சிறு கிராமத்தின் தென்கிழக்கு பகுதியிலிருந்து 56 மைல் தள்ளி ஏற்பட்டுள்ளது. இந்த பெர்ரிவில்லே, அலெஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆன்கோரேஜ் பகுதியை ஒட்டியதென்பதால், அங்கும் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு முன் கடந்த அக்டோபரில் 7.5 என்ற அளவில் அலாக்ஸாவின் தெற்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது விழிப்புடன் செயல்பட்டதால் உயிர்சேதம் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாரத்நெட் திட்டத்தில் தமிழகம் இடம்பெறவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி அளிப்பதற்காக மத்திய அரசு பாரத்நெட் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 16 மாநிலங்களில் உள்ள 3.61 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி விரிவுபடுத்தப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதனிடையே பாரத்நெட் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் தமிழகத்தில் எத்தனை கிராமங்கள் இடம்பெற்றுள்ளன என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பெரம்பலூர் எம்.பி., பாரிவேந்தர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசிங் சௌகான், பாரத் நெட் திட்டத்திற்காக சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது , தற்போதைக்கு இந்தத் திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கிராமங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். அதேசமயம் தமிழகம் உள்பட மீதமுள்ள மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…
இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 2013-14 ஆம் ஆண்டில் வைகை நதிக்கரையில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியே 250 கி.மீ தூரம் ஓடும் வைகை நதியின் இருகரைகளிலும் உள்ள 400 கிராமங்களில் இந்த ஆய்வு மேற்கொண்டது ஓர் ஆண்டு முழுவதும் இந்த 400 கிராமங்களில் அலைந்து திரிந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவர்கள் 263 புதை மேடுகளையும் 90 வாழ்விடங்களையும் இனம் கண்டார்கள். இதில் கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர்களின் பொருட்கள் நாணயங்கள், முதுமக்கள் தாழிகள் போன்றவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்குடி சிறப்பாக வாழ்ந்துள்ளனர் என்பதை உலகிற்கு பறை சாற்றி வருகின்றது. கீழடி தமிழர்களின் தாய் மடி என்ற சொல்லுக்கு ஏற்ப தினமும் பல பொருட்களை அகழாய்வில் கொடுத்து நம்மை பெருமைபடுத்தி வருகிறது கீழடி . இந்த நிலையில் கீழடி நாகரிகத்தினையும் அகழ்வாராய்ச்சியினையும் கொச்சை படுத்தும் வகையில் துக்ளக் எழுதிய கட்டுரை தமிழ்…
கீழடி நாகரிகத்தினையும் அகழ்வாராய்ச்சியினையும் கொச்சைப்படுத்தும் வகையில் துக்ளக் எழுதிய கட்டுரை தமிழ் ஆர்வளர்களிடையே வெறுப்பை சம்பாதித்து வருகின்றது. தனது கட்டுரைக்கு தொல்பொருள் ஆய்வு வெட்டி வேலை என தலைப்பிட்டு எங்கு தோடினாலும் வெறும் மண்டை ஒடுகளும் ஆயுதங்களும்தான் கிடைகின்றன இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ஆஸ்திரேலிய மண்ணில் தோண்டினால் கூட இதுதான் கிடைக்கும்.தமிழக அரசின் கீழடி அகழாய்வு ஒரு வெட்டி வேலை என தெரிவித்துள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. “கீழடி உள்ளிட்ட அகழாய்வில் தமிழின் தொன்மையை நிரூபிக்கும் சான்றுகள் கிடைத்துவருகின்றன. தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறது. கீழடியில் கிடைத்த பொருட்களால் தமிழின் தொன்மை கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என தெரியவந்தது. கிடைத்த சான்றுகளை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழின் தொன்மையால் சிலருக்கு வயிறு…
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ளது வெலவாடர் தேசிய பூங்கா. இந்த பூங்காவில் முழுக்க முழுக்க அழிந்துவரும் மானினமான பிளாக்பக் மான்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. வெலாவாடர் ப்ளாக்பக் தேசியப் பூங்காவில் உள்ள சாலையின் ஒருபுறமிருந்து மறுபுறம் துள்ளிப்பாயும் மான்களின் வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மான்கள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை குஜராத் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் பகிர்ந்திருந்த நிலையில், பிரதமர் மோடி அதனை ரீ- ட்வீட் செய்துள்ளார். அது குறித்து அவர் ‘எக்ஸலன்ட்’ என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 3000 மான்கள் இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் ஏற்கெனவே தனது ட்விட்டர் பக்கத்தில் மயிலுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். இந்நிலையில், அவர் தற்போது ஷேர் செய்துள்ள இயற்கையின் வரத்தின் சாட்சியான காட்சி இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
உள் வர்த்தக விதிகளை மீறியதற்காக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு செபி 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஆபாச படம் தயாரித்து அதனை இணைய செயலியில் பதிவேற்றி பணம் சம்பாதித்து தொடர்பாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை மும்பை குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர். குறிப்பாக ராஜ் குந்த்ரா நடத்தும் வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அலுவலகம் தான் ஆபாச படங்கள் எடுக்கப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதில் இயக்குனர் பொறுப்பில் இருந்து ஷில்பா ஷெட்டி திடீரென வெளியேறியிருந்தார். இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் வயான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை செபி ஆராய்ந்தது. அதில் உள்நாட்டு வர்த்தகம் தொடர்பான செபியின் விதிமுறைகளை மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விதிகளை மீறியதற்காக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.