Author: Admin

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ். அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கிங்காக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். சர்வதேச அளவில் தனது திறமையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தைப் வைத்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தவர். இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டராக கலக்கி வந்த பென் ஸ்டோக்ஸ் நேற்று அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Read More

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்படி காவலர்களின் பிறந்தநாள், திருமண நாளன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்கவேண்டும் . வார விடுமுறை தேவைப்படவில்லை என கூறும் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்பிக்கள் தவறாமல் செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Read More

இந்த கட்டுமான பணிகளின் விவரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கவுஷல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் அவரது பதிலில்கூறியிருப்பதாவது. ஒன்றிய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டுவது புதிய விஸ்டா பகுதி மறுகட்டமைப்பு ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தற்போது வரை ரூ.238 கோடியும் சென்ட்ரல் விஸ்டா பகுதியை மறுகட்டமைக்க தற்போது வரை ரூ. 63 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ரூ.971 கோடி வரை ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்ட்ரல் விஸ்டா பகுதியின் மறுகட்டமைப்பிற்கு ரூ.608 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் : 2012 முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேமுதிக தலைவர் விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த். காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் விஜயதாரணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர…[10:03 PM, 7/30/2021] Irumporai ✍🏾: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் பிறந்தநாள், திருமண…

Read More

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு பி.வி.சிந்து முன்னேறினார் . டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சிந்து, யமகுச்சியை 21 -13, 22 – 20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். காலிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பி.வி.சிந்து 2016ஆம் ஆண்டு, ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலையின் உற்பத்தி நாளையுடன் முடிவடைகிறது. அதனால், ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இம்மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.ஆகவே ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கான கால அவகாசத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இம்மனு மீதான உத்தரவை ஒரு வாரத்தில் பிறப்பிப்பதாக கூறி ஒத்திவைத்தார். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக…

Read More

கொரோனா காலக்கட்டத்தில் டிஜிட்டல் சேவை பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, பேஸ்புக் இந்தியாவின் வருவாய் 9,000 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று கோர தாண்டவம் ஆடிய நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். இதனால் பொழுது போக்கிற்காகவும், கல்வி கற்கவும், ஷாப்பிங் போன்றவற்றிற்கும் மக்கள் இணையத்தை பயன்படுத்தினர். இதனால் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்டவற்றின் ஆண்டு வருமானம் அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் பேஸ்புக்கின் வருவாய் 9,000 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு குறைந்த விலையில் அதிக டேட்டா சேவை, சாதாரண விலைக்கு ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றின் விளைவாக பேஸ்புக், கூகுள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் அதற்கு முந்தைய நிதியாண்டில் 6, 613 கோடி வருவாயை மட்டுமே ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

நடப்பு கல்வியாண்டில் 85% கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்குகள் தொடர்ந்திருந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையின்போது, பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பள்ளிக்கட்டணம் வசூல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், நடப்பு கல்வியாண்டில் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Read More

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஜுலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும்,சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான முக்கிய அறிவிப்பும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கான கால அவகாசத்தை நீட்டிக்க அனுமதி அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கோரதாண்டவம் ஆடி வந்த நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அரசு அனுமதி வழங்கியது. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் மே 12-ஆம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இந்தநிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான உச்சநீதிமன்றத்தின் அனுமதி காலம் நிறைவடைந்துள்ள நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றதுஆக்சிஜன் உற்பத்திக்கான கால அவகாசத்தை நீட்டிக்க அனுமதி அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு…

Read More