- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
கொரோனா அலை படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் 3 வது அலை அச்சம் காரணமாக முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2வது அலையில் பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்று தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிக்கும் வகையிலும், அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையிலும் அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை, கொரோனாவால் பெற்றோர்களை இழந்து உறவினர் ஆதரவில் வளரும் குழந்தை பராமரிப்பு செலவாக ஒவ்வொரு மாதமும் ரூ.3000 உதவித்தொகையும், இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
ஜார்கண்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரமணா, இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும், நீதிபதிகள் புகார் அளித்தால் காவல்துறையோ, சிபிஐ அமைப்போ உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில், சிபிஐ, உளவுத்துறை அமைப்புகள் நீதித்துறையின் விசாரணைக்கு உதவ மறுப்பதாகவும் குற்றசாட்டியுள்ளார். மேலும், புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை என்றும் கருத்தை முன் வைத்துள்ளார்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கி வருவதாக, கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஒரு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் விலக்கு பெற்றுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 6,412 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீ ‘நீட்’ என்னும் நுழைவு தேர்வை மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2021-2022 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடும் சரிவடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரையில் 6,412 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாகவும், அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேரும்…
இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த்” எனும் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான் சந்த் பெயரிட வேண்டுமென்று இந்தியா முழுவதிலிமிருந்து பல கோரிக்கைகள் எனக்கு வந்தது. அவர்கள் உணர்வை மதித்து கேல் ரத்னா விருது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும். ஜெய் ஹிந்த்“ என்று பதிவிட்டுள்ளார். 1991ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு “ராஜிவ் காந்தி கேல் ரத்னா” வழங்கப்பட்டு வருகிறது. செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், ரோகித் சர்மா , தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட 45 வீரர்களுக்கு இதுவரை இவ்விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு தவிர்த்து பிற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பேராசிரியர்களும், பணியாளர்களும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும் எனவும், அனைத்து வேலை நாட்களிலும் பேராசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியாவுக்கு ரூ. 4 கோடி பரிசு அறிவித்துள்ளது ஹரியானா அரசு. இந்திய மல்யுத்த வீரரான ரவி தஹியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.57 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் ரவி தஹியா, ரஷ்யாவின் ஜாவூர் உகுவேவ்வை எதிர் கொண்டு தோல்வியை தழுவினார். இதனையடுத்து, ரவி தஹியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. ரவி தஹியாவை கவுரவிக்கும் வகையில் ஹரியானா அரசு அவருக்கு 4 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்துள்ளது. மேலும் அரசு வேலை, ரவி தஹியாவின் கிராமத்தில் நவீன வசதிகளுடன் கூடிய உட்புற மல்யுத்த அரங்கம் ஒன்றை அமைத்து கொடுப்பதாகவும் ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
சிம்பு நடிக்கும் 47வது படமான ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தலைப்பு மாற்றப்பட்டு புதிய தலைப்பை வெளியாகியுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு – இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ தலைப்பு மாற்றப்பட்டிருப்பதாகவும், புதிய தலைப்பு நாளை மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு தரப்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வெளியான அறிவிப்பில் சிம்புவின் 47வது படத்திற்கு “வெந்து தணிந்தது காடு” என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் உடல் மெலிந்து பார்ப்பதற்கு சோகத்தை ஏற்படுத்தும் தோற்றத்தில் சிம்பு உள்ளார். அவரின் இந்த தோற்றம்…
மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுசூதனனின் உடல் மருத்துவமனையில் இருந்து அதிகாலையில், தண்டையார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள் மரியாதை செலுத்திய பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுசூதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மதுசூதனனின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.
கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் குத்துவாள் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அங்குள்ள கொந்தகை தளத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. 11 முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு, அதிலிருந்து பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முதுமக்கள் தாழியில் இரும்பு வாள் கண்டறியப்பட்ட நிலையில், 46 செ.மீ நீளமுள்ள குத்துவாள் கிடைத்துள்ளது. இதுவரை உறைகிணறுகள், வெள்ளி நாணயம், பவழம், உழவு கருவி, பானைகள், பானைஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.