Author: Admin

மதுரையை சேர்ந்த யூடியுபர் சிக்கந்தரை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். மதுரை சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் சிக்கா என்ற சிக்கந்தர். யூடியூப்பில் பிரபலமாக இருந்து வருகிறார். கடந்த 2ம் தேதி வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக டிக் டாக் பிரபலமான சூர்யாதேவி என்பவர் தனது ஆண் நண்பருடன் வந்து சிக்கந்தரை வழிமறித்துள்ளார். சூர்யாதேவி தன்னை தாக்கியதோடு, தொடர்ச்சியாக தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி சிக்கந்தர் நேற்றைய தினம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிக்கந்தர் அளித்த புகாரின் பேரில், சூர்யா தேவி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனிடையே அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விடுப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்த நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் செல்வராகவன் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இப்படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார்போல் முறுக்கேறிய உடற்கட்டுடன் இயக்குனர் செல்வராகவனின் படம் வெளியாகியிருந்தது. இதனால் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Read More

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து கட்சியின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் ஆர்.மகேந்திரன் அதில் இருந்து விலகி கடந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனிடையே மகேந்திரனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா 2வது அலை மெல்ல குறைந்து வந்த நிலையில், தற்போது டெல்டா ப்ளஸ் வகை கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி வழங்கியது. இதனிடையே ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கக்கோரி ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கோரியது. இந்நிலையில் ஜான்சன் அண்டு ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள…

Read More

தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையானது படிப்படியாக எளிமைப்படுத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் மூர்த்தி சந்தித்தார். அப்போது பத்திரப்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் சார் பதிவாளர்கள் மீது மட்டுமின்றி எழுத்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். மேலும் முறைகேடான பத்திரப்பதிவுகளை தடுக்க எழுத்தர் மற்றும் வழக்கறிஞர்களில் உரிம எண்களை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் பதிவு செய்யும் நடைமுறை அமுலுக்கு வருவதாகவும், இதனை செய்யத் தவறும் பட்சத்தில் அந்த பத்திரப்பதிவு செல்லாது எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இதன்மூலம் முறைகேடான பத்திரப் பதிவுகள் குறையும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More

கலைஞர் என்று சென்னாலே ஊழல்தான் இருப்பதாக ஒரு கூட்டம் கூறிக்கொண்டு திரிகிறது. அவர் ஆட்சி என்றாலே விஞ்ஞான ஊழல்தான் , குடும்ப ஆட்சி இருக்கும் , வாரிசு அரசியல் இருக்கும் குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டு கொண்டதே கிடையாது என கருணாநிதி ஆட்சி என்றாலே ஊழல்தான் இருக்குமென முழங்கிவரும் தம்பிகளுக்கு சாரி தோழர்களுக்கு அதுவும் வேண்டாம் நபர்களுக்கு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட சாதனைகள் நாம் பார்க்கலாம். தமிழகத்தில் 40 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடித்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றி 1967 பொதுத் தேர்தலிலில் முதல் முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்தது. வென்ற தொகுதிகள் 138 இடங்கள். அக்கட்சியின் பொதுச்செயலாளரான அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றார். இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்த வரலாற்று சாதனையை திமுக அப்போது படைத்தது. 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அண்ணா மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து…

Read More

கலைஞரின் பாராட்டை பெற முடியாத ஏக்கம் துரத்துவதாக அவரது பேரனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக தொண்டர்கள் அவரவர் வீடுகளில் நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனிடையே நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தங்கை கனிமொழி எம்.பி., திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் கருணாநிதியின் பேரனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின்…

Read More

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவையில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முக்கியமான 9 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மாநகரில் கிராஸ்கட் சாலை ,100 அடி வீதி, துடியலூர் சந்திப்பு, புரூக்பீல்டு மால் ஆகிய 4 பகுதிகளில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளை மூட கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்திரவு பிறப்பித்துள்ளார். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த நான்கு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகமான கூட்டம் வரும் என்பதால் இந்த கடைகளை மூடவும் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Read More

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது. ராஜீவ்காந்தி அவர்களின் பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருதை மாற்றி வேறொருவர் பெயரில் பிரதமர் மோடி அறிவித்திருப்பது அவரது அரசியல்காழ்ப்புணர்ச்சியையும், சிறுமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். கடந்த கால ஆட்சித் தலைவர்களின் பெயர்களை மாற்றிக் கொண்டே போனால், இன்றைய ஆட்சியாளர்கள் வைக்கிற பெயரை வருகிற ஆட்சியாளர்கள் மாற்றுவதற்கு பிரதமர் மோடியின் நடவடிக்கை காரணமாக அமைவது மிகுந்த துரதிருஷ்டவசமாகும். இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கை கைவிட்டு, வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பொருளாதார நிலையிலிருந்து நாட்டை காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும். எனவே, இந்த பெயர் மாற்ற…

Read More