Author: Admin

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.

Read More

சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இயக்குநர்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை மீரா மிதுனுக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிட்டு வலம் வருபவர் மீரா மிதுன் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் மீரா மிதுன் மீது, பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டு உள்ளன. இந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் தான் கீழ்தரமான செயல்களில் ஈடுபடுவதாகவும், பட்டியல் சமூகத்தை சார்ந்த இயக்குனர்கள், திரை பிரபலங்கள் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்த வேண்டும். பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும்…

Read More

ஆப்கானிஸ்தானையும், அங்கு வாழும் மக்களையும் அழிப்பதை நிறுத்தங்கள் என உலகத் தலைவர்களுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள், நேட்டோ படைகள் இருந்ததால் கடந்த காலங்களில் தலிபான் தீவிரவாதிகள் ஒடுங்கி அடங்கி இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலகக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் இந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனால் அங்கு மீண்டும் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள். கடந்த மாதம் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனையுடன் உலகத் தலைவர்களுக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அன்பார்ந்த…

Read More

2028 ல் அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டினையும் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது ஜப்பானில் நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-ல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும் 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 2028-ம் ஆண்டு 34-வது ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டினையும் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி தலைவர் கிரேக் பார்கிலே கூறுகையில்கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. .இதனால் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் பங்கேற்பது பொருத்தமாக இருக்கும் என கூறினார். அதே சமயம் கிரிக்கெட்டினை ஒலிம்பிக்கில் சேர்ப்பது எளிதான காரியமில்லை எனவும் அதே சமயம் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க இதுவே சரியான நேரம். ஒலிம்பிக்…

Read More

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்சஒழிப்புத்துறை சோதனை பற்றி தான் எந்த கருத்தையும் கூறவில்லை என்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டபை தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தலிருந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வீட்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது அந்த வகையில்அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார். அவர்களின் சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களையும், முக்கிய கோப்புகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அதே போல் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். கோவை, குனியமுத்தூரில் உள்ள சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை பல மணிநேரம் நடத்தப்பட்டது. மேலும், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் போலீசார் விசாரணை…

Read More

கீழடி ஆய்வில் ஒரு அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட பழமையான கல் தூண் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சங்க காலத் தமிழரின் சிறப்பினையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்யும்போதுநிரூபித்துக் கொண்டிருக்கிறது கீழடி அந்த வகையில் கீழடி அருகே உள்ளஅகரத்தில் பாசி மணிகள், உறை கிணறு போன்றவையும் கண்டறியப்பட்டது. அவற்றை தொடர்ந்து தற்போது ஒரு அடி உயரம் ஒரு அடி அகலம் கொண்ட பழமையான கல் தூண் கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறும்போது,பழமையான இந்த கல் தூணின் உயரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் வடிவம் முழுமையாக வெளிக்கொணரப்பட்ட பின்னர் அதன் பயன்பாடு குறித்து முழுமையாக தெரியவரும் என கூறினர்.

Read More

ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு பகுதியை தலிபான்கள் நேற்று கைப்பற்றினர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும்,தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பல வருடமாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க படைகள் ஆப்கனில் ராணுவ தளம் அமைத்து, அந்நாட்டு அரசுக்கு பயிற்சி அளித்து வந்ததோடு, தலிபான்களுக்கு எதிராக சண்டையிட்டு வந்தன. இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த சமரச பேச்சை அடுத்து, ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற சம்மதித்தன.இதுவரை 95 சதவீத அமெரிக்க படைகள் திரும்பி வந்துள்ள நிலையில் தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.தற்போது குந்தூஸ், சர்-இ போல் ஆகிய இரண்டு மாகாணங்களையும் கைப்பற்றிவிட்டோம் என தலிபான் தெரிவித்துள்ளது. அதேவேளையில் தலிபான் கைப்பற்றியதாக கூறும் செய்தியை அரசு மறுத்துள்ளது. இந்தநிலையில் காங்கிரசை சேர்ந்த ஜெய்வீர் ஷெர்கில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில் அமெரிக்க படைகள் விலக்கிக்…

Read More

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தியா முதன்முறையாக 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் போட்டி நிறைவுபெறும் நாளுக்கு முந்தைய நாளில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்று புதிய உலக சாதனை படைத்தார். தற்போது தங்கமகனாக வந்துள்ள நீராஜ் சோப்ராவிடம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று அவரிடம் எடுத்த பேட்டியில், உங்களது வாழ்க்கை வரலாற்றை படமாக்க எடுக்க விரும்பினால் அந்த படத்தில் உங்கள் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த நீரஜ் சோப்ரா, எனது வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் அதில் எனது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனது முதல் தேர்வு ரந்தீப் ஹூடாதான். ஒரு வேளை ஹூடா நடிக்கவில்லை என்றால் அக்‌ஷய்குமார் எனது கதாபத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பயோகிராபி…

Read More

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் வெள்ளிகிழமைகளில் கோவில்களை திறக்க வலியுறுத்தி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் அவிநாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூ விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விஜயா, அலுவலக வாளாகத்தில் அவர் கொண்டு வந்திருந்த சாணிப் பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனயாக அவரை தடுத்தனர். அப்போது ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் தண்டுமாரியம்மன் கோவில், கோனியம்மன் கோவில்களை திறக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் போலீசாரின் கால்களில் விழுந்து கதறிய அவர், ஆடி மாத உற்சவம் நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்களை பூட்டினால் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், ஆத்தாவுக்கே இந்த…

Read More

குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் அறிவிப்புதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இந்தியாவின் தற்போதைய ஹீரோ தங்க மகன் நீரஜ் சோப்ரா தான். எங்கும் நீரஜ் எதிலும் நீரஜ் என்பது போல அனைத்து இடங்களிலும் நீரஜ் சோப்ரா பற்றிய பேச்சுக்கள் தான். இந்த நிலையில் நீராஜ் சோப்ராவுக்கு இன்டிகோ விமான நிறுவனம் இன்னும் ஒருவருடத்திகு விமானத்தில் பயணிக்க இலவசம் என அறிவித்துள்ளது. பிரபல கார் நிறுவனமான மகிந்திரா அவருக்கு சொகுசு கார் பரிசளிப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல ஹரியானா மாநில அரசு 6 கோடி ரூபாய், பஞ்சாப் அரசு 2 கோடி ரூபாய், மணிப்பூர் அரசு, சிஎஸ்கே அணி நிர்வாகம், பிசிசிஐ ஆகியவை தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளன. இந்நிலையில் குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் பங்கின் முன் வைத்துள்ள அறிவிப்பு பலகையில், ரூ .501 இலவசமாக…

Read More