Author: Admin

கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் முதல்வர் ஆற்றிய சுதந்திர தின உரையில், சுதந்திர தின நாளில் முதல்வர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி தான் என நினைவு கூர்ந்தார். மேலும் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு தொடங்கி கொரோனா பரவல் வரை அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அனைவருக்கும் சமமான உரிமை அளிக்கும் சமூக நீதி கொண்டாட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்றும், இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு குறித்த ஆவணம் உருவாக்கப்பட்டு முறையான ஆவணத்தை இதற்கான உருவாக்கி அரசு வெளியிடும் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Read More

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதில் பல்வேறு புதிய திட்டங்களையும் அதற்கான நிதி அளவையும் அறிவித்துள்ளார்.அதேபோல் டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகள் நலனுக்காகவும், தென்னை விவசாயம் வளர்ச்சி அடைவதற்காகவும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை மண்டல அலுவலகம் தொடங்கப்படும் என அறிவித்திருப்பது விவசாயிகளிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் : விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்கு உரியது. வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் என பதிவிட்டுள்ளார்.

Read More

2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தபட்ட நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் யுஏஇ சென்றது. கடந்த வியாழக்கிழமை இவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் யுஏஇ சென்றனர். அதில் தோனி,ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் அணியுடன் சென்றனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கம் சென்னை அணி யுஏஇ சென்றுள்ளது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணி சென்னையில் இருந்து கிளம்பியது முதல் யுஏஇ சென்று ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டது வரை சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு பெரிய விசில் அடிங்க பாடலும் வருகிறது. இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிசிறப்பாக உள்ளது இதுவரை 7 போட்டிகளில் விளையாடி…

Read More

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழர்களின் பழமையான நாகரீகத்தை பறைசாற்றும் ஏராளமான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. அதே போல் காளையார்கோவில் அருகே உள்ள இலந்தைக்கரை கிராமத்தில் தோண்டும்போது முதுமக்கள் தாழி உள்ளிட்டவை அடிக்கடி கிடைத்து வந்ததால் இங்கு அகழாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. தமிழ் ஆர்வலர்கள் அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்ற தமிழகஅரசு இந்தியத் தொல்லியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்கு இலந்தக்கரை கிராமத்தில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று அகழாய்வு தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வில் வரலாற்றுத்துறை இணைநிலை பேராசிரியர் ராசவேலு (இயக்குநர்), தலைவர் சரவணக்குமார் (இணை இயக்குநர்), இந்திய தொல்லியல் துறை இணை தொல்லியல் தலைமை அலுவலர் நம்பிராஜன், திருச்சி தொல்லியல் வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ், மைசூர் அகழாய்வு பிரிவு தொல்லியல் அலுவலர் அறவாழி, தொல்லியல் ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் பரந்தாமன், வரலாற்று ஆய்வாளர் இலந்தக்கரை ரமேஷ் மற்றும்…

Read More

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டு போல நடனம் ஆடுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பெட்ரோல் விலை குறைப்பால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி-க்கு கீழ் கொண்டுவர கவுன்சில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறிய அண்ணாமலை மாநிலத்தின் நிதி அமைச்சர் ஒத்துழைப்பாரா? என கேள்வி எழுப்பினார். மேலும் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டதால்தான் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கான கேள்விகளை எழுப்பாமல் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டு போல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடனம் ஆடுவதாக விமர்சித்துள்ளார்

Read More

குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீராமிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்ட மீரா மிதுன் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதோடு, அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் தெரிவித்திருந்தார். மீரா மிதுன் வெளியிட்ட இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில்,அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டது. ஆனால் என்னை…

Read More

வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு நேற்று முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மூன்று மணிநேரம் உரையாடி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவையில் பேசிய அமைச்சர், வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தொலைநோக்கு திட்டம்.வேளாண் வணிகர்களின் கருத்து கேட்கப்பட்ட பின் தான் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த…

Read More

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சிவசங்கர் பாபா மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த 3 போக்சோ வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா-வை கைது செய்த சிபிசிஐடி போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Read More

விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் நினைவாக, மனைவி அவருக்கு கோவில் கட்டி பூஜை செய்து வழிப்பட்டு வரும் நெகிழ்ச்சி சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே விவசாயம் செய்து வந்த தம்பதி அங்கி ரெட்டி- பத்மாவதி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்தில் கணவர் அங்கி ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கணவரின் உயிரிழப்பிற்கு பின் விவசாய பணிகளை அவரது மகன் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் மறைந்த கணவனின் நினைவாகவே இருந்த மனைவி பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர், தனக்கு கோவில் கட்ட சொன்னதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது கணவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தனது மகனிடம் கூறியுள்ளார் தாய் பத்மாவதி. மகனும் தாயின் விருப்படியே விவசாய நிலத்தில் மறைந்த தந்தையின் சிலையை நிறுவி கோவில் கட்டி கொடுத்துள்ளார். அதனைதொடர்ந்து தினமும் கணவரின் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வரும்…

Read More

மதுரையில் தனியார் பள்ளிக்கு இணையாக வசதிகளோடு அரசு பள்ளி செயல்பட்டு வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியில் உள்ள கள்ளர் தொடக்கப்பள்ளி 1938 ஆம் ஆண்டு கள்ளர் சீரமைப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தப் பள்ளி மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆதிக்கத்தால் மாணவ – மாணவியரின் வருகை குறைந்தது மட்டுமல்லாமல் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்து காணப்பட்டது. இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்த முருகேஸ்வரி பள்ளியின் தரம், மாணவர்களின் கல்வியை மேம்படுத்த முடிவு செய்து, மாதந்தோறும் பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டங்களை நடத்தியுள்ளார். அதில் முதலில் பள்ளியின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த முடிவு செய்து தனது சொந்தப் பணம் ரூ. 2 லட்சத்தை கொண்டு பணிகளைத் தொடங்கியுள்ளார். இதையறிந்த முன்னாள் மாணவர்களும், கிராம மக்களும் ரூ.3 லட்சம் திரட்டிக் கொடுக்க தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே…

Read More