மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

SHARE

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழர்களின் பழமையான நாகரீகத்தை பறைசாற்றும் ஏராளமான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

அதே போல் காளையார்கோவில் அருகே உள்ள இலந்தைக்கரை கிராமத்தில் தோண்டும்போது முதுமக்கள் தாழி உள்ளிட்டவை அடிக்கடி கிடைத்து வந்ததால் இங்கு அகழாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது.

தமிழ் ஆர்வலர்கள் அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்ற தமிழகஅரசு இந்தியத் தொல்லியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்கு இலந்தக்கரை கிராமத்தில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.

இதையடுத்து நேற்று அகழாய்வு தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வில் வரலாற்றுத்துறை இணைநிலை பேராசிரியர் ராசவேலு (இயக்குநர்), தலைவர் சரவணக்குமார் (இணை இயக்குநர்), இந்திய தொல்லியல் துறை இணை தொல்லியல் தலைமை அலுவலர் நம்பிராஜன், திருச்சி தொல்லியல் வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ், மைசூர் அகழாய்வு பிரிவு தொல்லியல் அலுவலர் அறவாழி, தொல்லியல் ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் பரந்தாமன், வரலாற்று ஆய்வாளர் இலந்தக்கரை ரமேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த அகழாய்வினை தொடங்கி வைத்த அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எம்.எல்.ராஜா கூறுகையில்

இப்பகுதியில் மக்கள் வசித்த மேட்டிலும் புதைவிடத்திலும் இன்று அரை இஞ்ச் அளவிற்கு பள்ளம் தோண்டியதில், தென்னக பிராமி எழுத்துடன் கூடிய வட்டமான மட்கல ஓடு கிடைத்துள்ளது.

இது வணிகர்கள் பயன்படுத்திய முத்திரையாக இருக்க வேண்டும். இப்பகுதி தென்னகம் மற்றும் வட இந்திய வணிகர்களுடன் தொடர்புடையதாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் கீழடிக்கு இணையான பண்பாட்டு வரலாற்றுக் கூறுகளை இலந்தக்கரை பெற்றுள்ளதை அறிய முடிகிறது என்றார்.

ஆகவே இலந்தைக்கரை மற்றொரு கீழடியாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர் தொல்லியல் வல்லுநர்கள் .


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

மேகதாது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!

Admin

கால்நடை என்ற சொல் ஏன் மனிதர்களுக்குப் பொருந்தாது?.

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

”1 தொகுதிதானா? மாநிலங்களவை ல பாத்துக்குறேன்” – வைகோ சொன்னது என்ன?

Admin

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Admin

திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Admin

தமிழகத்தில் சமஸ்கிருத கல்வெட்டியாளர் தேவை என்ன? – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி

Admin

இந்த முறையும்கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தடை ..காரணம் என்ன?

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

Leave a Comment