மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

SHARE

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழர்களின் பழமையான நாகரீகத்தை பறைசாற்றும் ஏராளமான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

அதே போல் காளையார்கோவில் அருகே உள்ள இலந்தைக்கரை கிராமத்தில் தோண்டும்போது முதுமக்கள் தாழி உள்ளிட்டவை அடிக்கடி கிடைத்து வந்ததால் இங்கு அகழாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது.

தமிழ் ஆர்வலர்கள் அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்ற தமிழகஅரசு இந்தியத் தொல்லியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்கு இலந்தக்கரை கிராமத்தில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.

இதையடுத்து நேற்று அகழாய்வு தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வில் வரலாற்றுத்துறை இணைநிலை பேராசிரியர் ராசவேலு (இயக்குநர்), தலைவர் சரவணக்குமார் (இணை இயக்குநர்), இந்திய தொல்லியல் துறை இணை தொல்லியல் தலைமை அலுவலர் நம்பிராஜன், திருச்சி தொல்லியல் வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ், மைசூர் அகழாய்வு பிரிவு தொல்லியல் அலுவலர் அறவாழி, தொல்லியல் ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் பரந்தாமன், வரலாற்று ஆய்வாளர் இலந்தக்கரை ரமேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த அகழாய்வினை தொடங்கி வைத்த அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எம்.எல்.ராஜா கூறுகையில்

இப்பகுதியில் மக்கள் வசித்த மேட்டிலும் புதைவிடத்திலும் இன்று அரை இஞ்ச் அளவிற்கு பள்ளம் தோண்டியதில், தென்னக பிராமி எழுத்துடன் கூடிய வட்டமான மட்கல ஓடு கிடைத்துள்ளது.

இது வணிகர்கள் பயன்படுத்திய முத்திரையாக இருக்க வேண்டும். இப்பகுதி தென்னகம் மற்றும் வட இந்திய வணிகர்களுடன் தொடர்புடையதாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் கீழடிக்கு இணையான பண்பாட்டு வரலாற்றுக் கூறுகளை இலந்தக்கரை பெற்றுள்ளதை அறிய முடிகிறது என்றார்.

ஆகவே இலந்தைக்கரை மற்றொரு கீழடியாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர் தொல்லியல் வல்லுநர்கள் .


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

உன்னால் முடியாது தம்பி காணொலி சர்ச்சை. மக்கள் நீதி மய்யத்துக்கு நக்கலைட்ஸ் வலைக்காட்சி பதில்.

இனி மனித கழிவுகளை அகற்ற மனிதர்கள் வேண்டாம்.. மாஸ் காட்டும் உதய நிதி.. குவியும் பாராட்டு!!

Admin

இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Admin

‘கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என நம்ப வேண்டாம் ’’ – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Admin

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்: அதிகாரிகள் உறுதி!.

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

Leave a Comment