Author: Admin

தங்களுக்கான உரிமையை வழங்கக்கோரி, ஆப்கான் பெண்கள் சிலர் சாலையில் இறங்கி போராட்டம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது. இதனிடையே அங்கு வசிக்கும் ஆப்கான் பெண்கள் சிலர், பர்தா அணிந்தபடி கையால் எழுதப்பட்ட பதாகைகளுடன் சாலையில் போராட்டம் நடத்தியுள்ளனர். அதில் தங்களுக்கான உரிமைகளாக சமூக பாதுகாப்பு, கல்வி, அரசியல் மற்றும் பணியாற்றுவதற்கான அனுமதி ஆகியன வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தின்போது, அங்கு தலிபான் போராளிகள் சிலரும் துப்பாக்கியுடன் வாகனத்தில் நின்றிருந்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Read More

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது குடும்பத்தார் புகைப்படத்தை வெளியிட்டதால் ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை ராகுல் காந்தி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் ராகுல் காந்தியின் பக்கத்தை முடக்கியது. ஆனால் பேஸ்புக் நிறுவனம் ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பேஸ்புக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் பதிவை உடனடியாக நீக்க கோரி பேஸ்புக் நிறுவனம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Read More

போலந்து வீராங்கனை ஒருவர், ஒலிம்பிக்கில் தனக்கு கிடைத்த வெள்ளி பதக்கத்தை ஏலத்திற்கு விட்டு, 8 மாத குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டை சேர்ந்த மரியா, ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார்.இந்த பதக்கத்தை தனது வீட்டில் வைத்து அலங்கரிக்க விரும்பாத அவர், அதனை பயன்படுத்தி பிறருக்கு உதவி செய்ய முன்வந்தார். இந்நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட, 8 மாதக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக 2.86 கோடி ரூபாயை பெற போராடுவதை கேள்விப்பட்டுள்ளார். குழந்தைக்கு உதவ முன்வந்த மரியா, தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்திற்கு விட்டுள்ளார். இதனை 1.4 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்துக்கொண்ட Żabka சூப்பர்மார்க்கெட் நிறுவனம், மரியாவின் செயலை கண்டு நெகிழ்ந்து போன, அந்த நிறுவனம் வெள்ளி பதக்கத்தை மரியாவிடமே திரும்ப வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

Read More

ஆப்கானில் பெண்கள் அரசியலில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்விக்கு தலிபான்கள் விழுந்து விழுந்து சிரித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை விலகியதை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பின் தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது தலிபான்கள் தனது ஆட்சியை கையில் எடுத்துள்ள நிலையில், தங்களை துன்புறுத்தக்கூடும் என பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்தநிலையில் பெண்களுக்கான உரிமையை அளிப்போம் என தலிபான்கள் கூறியுள்ளனர். இந்தநிலையில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தலிபான்கள் சிலர் பேட்டியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தலிபான்கள் ஆட்சியில், பெண்கள் அரசியலில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படுமா என கேள்வி எழுப்பியிருந்தார். இதனை கேட்டு விழுந்த விழுந்து சிரித்த தலிபான்கள், பத்திரிக்கையாளரின் கேள்வி தன்னை சிரிக்க வைத்ததாகவும், எனவே இந்த காட்சியை பதிவு செய்யாது உடனடியாக நிறுத்தும்படியும் கூறியுள்ளனர்.

Read More

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரி, வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார். என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்…

Read More

பல கோமாளிகளின் மேதாவித்தனங்களை விட பாம்பு, பல்லிகளின் தொல்லைகள் பரவாயில்லை எனத் தோன்றுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிதாக திமுக அரசு ஆட்சியமைத்ததும் ஆங்காங்கே மின்தடை ஏற்பட தொடங்கியதால் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது . இதற்கு சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதில், ‘சில இடங்களில் செடிகள் வளர்ந்து மின் கம்பிகளுடன் மோதுவதால் அங்கு அணில்கள் வந்து அதனால் மின்தடை ஏற்படுகிறது’ என அவர் விளக்க இணையத்தில் மீம்ஸ்கள், எதிர்ப்புகள், கிண்டல்கள் என ரெக்கை கட்டி பறந்தன. அதுமட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரும் செந்தில்பாலாஜியின் விளக்கத்தை விமர்சித்தனர். இதனிடையே சில தினங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ஈங்கூர் – திங்களுர் 110KV துணை மின் நிலையத்தில், Bphase conductor பழுதானது. அதை சீர்ப்படுத்தும் போது, அந்த பழுதுக்கு…

Read More

ஆப்கானிஸ்தானில் உள்ள பொழுதுப்போக்கு பூங்கா ஒன்றில் தாலிபான் அமைப்பினர் ராட்டினம் ஆடி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதால் 20 ஆண்டுகளாக அடங்கி இருந்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இதனிடையே தாலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ என்ற பீதியில் ஏராளமான மக்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதன் வீடியோ உலக நாடுகளை பதற்றத்திற்குள்ளாக்கி வரும் நிலையில், ஆங்காங்கே தாலிபான்கள் துப்பாக்கி சூடும் நடத்தி வருகின்றனர். இதனால் ஏராளமான பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு சென்ற தாலிபான்கள் அங்குள்ள ராட்டினங்களில் ஏறி விளையாடும் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி 2021-22 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. பெட்ரோல் வரி லிட்டருக்கு ரூ.7 உயர்த்தப்பட்டு இப்போது ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. நான் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அது மாநில அரசுகளின் முடிவு’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2016ஆம் ஆண்டு முதல் மற்றும் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களுக்கான இடையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அதிமுக அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு இரண்டு கட்டங்களாக…

Read More

நியூசிலாந்து நாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இருவருடங்களாக கொரோனா நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் போராடி அதனை கட்டுப்படுத்தி வருகின்றது. சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை பூஜ்யத்தில் உள்ளது. அந்த வகையில் நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வந்தது இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இதனிடையே முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் 58 வயது நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆக்லாந்து மட்டுமின்றி நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக என அந்நாட்டின் பிரதமர் ஜெசிகா அறிவித்துள்ளார். லட்சக்கணக்கில் பாதிப்புள்ள நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே ஒருவருக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது உலக நாடுகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில் அடுத்தடுத்து நான்கு சிவப்பு நிற பானைகள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழக தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம் தலைமையில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், அஜய், ரமேஷ், காவ்யா உள்ளிட்டோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், கீழடியில் இதுவரை மூடியுடன் கூடிய பானை, உறைகிணறுகள், வரி வடிவ பானை ஓடுகள், சுடுமண் பகடை, கல் உழவு கருவி, வெள்ளி முத்திரை நாணயம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழங்கால தமிழர் நாகரிகம் அடுத்தடுத்து வெளிவருவதால் பொதுமக்கள் பலரும் கீழடி அகழாய்வு பணியை ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர். இந்நிலையில்…

Read More