- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
உங்களை மன்னிக்க மாட்டோம்.. கண்டிப்பா உங்களை வேட்டையாடுவோம் – ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை
ஆப்கானில் நேற்று காபூல் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டுதாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தங்களின் கண்டணத்தை தெரிவித்து வருகின்றன. நேற்று இந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 13 கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெடிகுண்டு தாக்குதல் குறித்து காட்டமாகப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: இந்தத் தாக்குதலை யார் முன்னின்று நடத்தினார்களோ, யார் அமெரிக்கா பாதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்கள் இதனை தெரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் இதை மன்னிக்க மாட்டோம். நாங்கள் இதை மறக்க மாட்டோம். நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும் என கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிரான பாலியல் ரீதியிலான வீடியோ அரசியல் களத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு இதனை சட்டப்படி சந்திப்பேன் என்றும், தர்மம் வெல்லும் என்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பாக மாநில செயலாளர் மலர்க்கொடி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகியான மதன் ரவிச்சந்திரனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதனிடையே கே.டி.ராகவன் வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசியதாக கூறி மதன் ரவிச்சந்திரன் நேற்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ்…
நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி கால்பந்து தொடருக்கான அணி ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும்,சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையுடன் இருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. தாத்தா, பெரியப்பா, அப்பா, அத்தை என அனைவரும் அரசியலில் ஆளுமைகளாக வலம் வர இன்பன் உதயநிதியோ சென்னையிலுள்ள மேக்ஸ் கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். கால்பந்தில் டிபெண்டர் ரோலில் பயிற்சி செய்து வரும் அவரை ஐலீக் தொடருக்காக நேரடியாக ஒரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியளவில் பிரபலமான ஐ லீக் தொடர் 2007 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் 21 கிளப் பணிகள் கலந்துகொள்வது வழக்கம். இந்தாண்டுக்கான தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளில் கிளப் அணிகள் ஈடுபட்டு வருகிறது.…
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று, இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட, 90 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது ஆப்கானில் தாலிபான்கள் கைபற்றியதிலிருந்து பதட்ட நிலைதான் நீடித்து வருகிறது. இந்த நிலையில் காபூல் விமான நிலையத்திற்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை காபூல் விமான நிலையம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் பெண்டகன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட அப்பாவி மக்கள் பலர் உடல் சிதறி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயில்இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்று அமெரிக்க பெண்டகன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 3 அமெரிக்க ராணுவத்தினரும், தாலிபான்களில் சிலரும் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானை…
பிரபல யாகூ’நிறுவனம், இந்தியாவில்,தனது செய்தி இணையதள சேவையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. இந்தியாவில், டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை குறைத்ததை அடுத்து, யாகூ நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆகவே யாகூ செய்திகள், யாகூ கிரிக்கெட், நிதி, பொழுதுபோக்கு மேக்கர்ஸ் இந்தியா’ ஆகிய சேவைகள் நிறுத்தப்படுவதாக கூறியுள்ளது. அதே சமயம் யாகூ மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், அதன் சேவைகள் வழக்கம் போலவே தொடரும் என்றும் யாகூ’நிறுவனம் தெரிவித்துள்ளது. .யாகூ நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக செய்தி சேவைகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில், நடிகை மீரா மிதுனை இரண்டாவது வழக்கில் போலீசார் கைது செய்தனர். மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு என அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றவர் நடிகை மீரா மிதுன். தான் ஒரு சூப்பர் மாடல் என்றும், தன்னுடைய ஸ்டைலை தான் மற்ற நடிகைகள் பின்பற்றுகிறார்கள் என்றும் சொல்லி கொண்டு வலம் வருபவர்மீரா மிதுன். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் கடந்தாண்டு அளித்திருந்த புகாரில், மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் எனக்கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீரா மிதுன் மீது மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் காலசூழ்நிலை காரணமாக ஜெர்மனியில் ‘பீட்சா டெலிவரி’ செய்யும் வேலை பார்த்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக சையது அகமது சதாத் பணியாற்றியவர் . கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிபருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்பு இவர் ஆப்கானிஸ்தானை விட்டும் வெளியேறினார். பின் ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் சக்சோனி மாகாணத்தில் உள்ள லெய்ப்சிக் நகரில் தஞ்சமடைந்தார். அவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து டெலிவரி பாய் வேலையை பார்த்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. பீட்சா டெலிவரி செய்ய அவர் சைக்கிளில் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பணம் இல்லாத காரணத்தால் டெலிவரி பாய் வேலையில் சேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுநிலை பட்டங்களை பெற்றுள்ள சையது சவுதி அரேபியா உள்ளிட்ட 13 நாடுகளில் தகவல் தொடர்புத் துறையில்…
கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் 8 குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சிவப்பு பானை, உறைகிணறுகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகடை 4 கிராம் எடையும், 1 புள்ளி 5 செ.மீ கன சதுரமும் கொண்டு ஆறு பக்கங்களிலும் 6 புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏற்கனவே இங்கு சுடுமண் பகடை கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் இறுதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளின் இருக்க வேண்டியது. ஆனால் கடந்த 12-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நாரிமன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நீதிபதிகள் எண்ணிக்கை 25 ஆக குறைந்தது. இதுவரை நீதிபதிகள் நியமனம் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 9 நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கி கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உள்பட 3 பெண் நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலிஜியம் குழு பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தனது நகைச்சுவை மூலமும் பல்வேறு நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சென்ற கலைஞரின் மறைவு, திரையுலகினர்களின் மத்தியில் மட்டுமல்லாது, ரசிகர்களிடமும் மீளா துயரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் நடிகர் விவேக் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்து சர்ச்சை ஏற்படுத்தியது. இ இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்தார் என்று புகார் தெரிவித்துள்ளார். அதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்றுள்ளது. விரைவில் விவேக் மரணத்தில் உள்ள உண்மை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.