மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், மைசூர் சாமுண்டி கோவில் அருகே கடந்த 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு, தனியார் கல்லூரி மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவரை வழிமறித்த சிலர், இளைஞரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செல்போன் டவர் மூலம் கர்நாடக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மனைவியை கடித்த பக்கத்து வீட்டு நாய்… கடுப்பான கணவன்… துப்பாக்கியால் சுட்டுக்கொலை
மேலும், அவர்கள் ஐவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து சேயூர் காவல் சரக எல்லை பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்த பெங்களூரு போலீசார், அவர்களை மைசூருக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக ஈரோட்டில் இருந்து ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 Comment
Pingback: பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்? - Mei Ezhuththu