அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:
திமுக அரசு ஜெயலலிதாவின் பெயரை அழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் திமுக தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வு ரத்து என கூறி நீட்டுக்கு வேட்டு வைத்தனர்.
மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதாகவும் வாய்க்கு வந்த படி பல திட்டங்களை கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அதில் ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை என கூறினார்.
மேலும், திமுக தலைவராக கலைஞர் இருந்தபோதே அதுமுகவை அழிக்க தோப்புக்கரணம் போட்டு, பல வித்தைகளை காட்டினார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை.
அவரது தந்தையாலேயே முடியவில்லை. அவரது மகன் மு.க.ஸ்டாலினால் முடியுமா? இதற்கெல்லாம் அதிமுகவினர் பயந்தவர்கள் அல்ல. கடத்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதா?, திமுக ஆட்சிக்கு வந்ததும், கல்வெட்டுக்கள் அடித்து நொறுக்கப்படுகிறது, ஜெயலலிதா படம் அகற்றப்படுகிறது, அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்படுகிறது.
ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயர்களை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது, அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாதுஎன அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
1 Comment
Pingback: தமிழக அரசியல் நாகரிகம்... தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்? - Mei Ezhuththu