‘ஊரை ஏமாற்றும் அண்ணாமலையே..ராஜினாமா செய்’- ஜோதிமணியின் காட்டமான அறிக்கை

SHARE

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிரான பாலியல் ரீதியிலான வீடியோ அரசியல் களத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு இதனை சட்டப்படி சந்திப்பேன் என்றும், தர்மம் வெல்லும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பாக மாநில செயலாளர் மலர்க்கொடி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகியான மதன் ரவிச்சந்திரனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கே.டி.ராகவன் வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசியதாக கூறி மதன் ரவிச்சந்திரன் நேற்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க முடியாமல் தடுப்பது எது? பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுப்பது எது? சொந்த கட்சியிலுள்ள பெண்களிடமே பாஜக தலைவர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்கள், அதை அந்த கட்சியின் தலைவர் சிறிதும் வெட்கமும்,மனசாட்சியும் இல்லாமல் ஆதரிக்கிறார்.

இப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அவலம் ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரம் அல்ல. பெண்களின் கௌரவம், கண்ணியம், பாதுகாப்போடு தொடர்புடையது. எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் நமது சகோதரிகளே. அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது மற்றும் தமிழக அரசின் கடமை.

எனவே தேசம்,தெய்வீகம் என்றெல்லாம் பேசி ஊரை ஏமாற்றிக்கொண்டிக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பெண்களை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்டு, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தலைவர்களை புகழ்ந்து பேச தடை போட்ட முதல்வர்… காரணம் என்ன?

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

ஆர்க்காடு இளவரசரிடம் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலின் : முதல்வரை புகழ்ந்த நடிகர் சத்யராஜ்!

Admin

ஐ.பி. எல் விளையாட்டு போல நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் நடனம் ஆடினார்கள்- அண்ணாமலை விமர்சனம்

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

ஜாதிவெறிக்கு சீட் கொடுக்கும் திமுக – சமுக நீதி எல்லாம் நடிப்புதானா?

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

Leave a Comment