வேலுமணி வீட்டு ரெய்டு பத்தி நான் எதுவுமே சொல்லவில்லை.. ட்விட்டர் பதிவுக்கு விளக்கமளித்த பாண்டியராஜன்!

SHARE

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்சஒழிப்புத்துறை சோதனை பற்றி தான் எந்த கருத்தையும் கூறவில்லை என்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டபை தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தலிருந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வீட்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது அந்த வகையில்அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார். அவர்களின் சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களையும், முக்கிய கோப்புகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதே போல் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். கோவை, குனியமுத்தூரில் உள்ள சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை பல மணிநேரம் நடத்தப்பட்டது.

மேலும், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் மூன்று பைகள் நிறைய ஆவணங்களும், முக்கிய கோப்புகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழக அர்சியலில் பரபரப்பை ஏற்படுத்த வேலூர் சரவணன் என்ற தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி தனது ட்விட்டர் பக்கத்தில், வேலுமணி போன்றவர்களை இந்த அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும். என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாக பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் தமிழ்த்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் வேலூர் சரவணனின் பதிவிற்கு கீழ், தயவு செய்து இந்த போலியான செய்தியை நிறுத்துங்கள். நான் இதுபோன்று சொல்லவே இல்லை”என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்த முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தான் இனி தன்னுடைய தொழிலில் 100 சதவீத கவனத்தை செலுத்த உள்ளதாகவும், அதனால் அரசியல்வாதியாக ஊடகத்தின்முன்பு வரமாட்டேன் என்றும் கூறிருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நாளை காபூல் பயணம்!

Admin

எச்.ராஜா மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்.. பாஜக மாநில தலைவர் எல்.முருகன்..சிக்குவாரா எச் ராஜா?

Admin

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

Pamban Mu Prasanth

வாரத்தில் 5 நாட்களுக்கு திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி

Admin

வரி கட்டுங்க விஜய்; கடனை அடைங்க அஜித்: ட்விட்டரில் வெடித்த மோதல் காரணம் என்ன?

Admin

விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… சிறப்பு டிஜிபிக்கு ஜாமின்

Admin

Leave a Comment