ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

SHARE

ஒன்றிய அரசு எனக் கூறுவதன் காரணத்தைக் கேட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என கூறுவதை சமூக குற்றம் என நினைக்க வேண்டாம், இந்தியா மாநிலங்களை கொண்ட ஒன்றியம் என்றே அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார் ஸ்டாலின். அதனால் தான் தற்போது மத்திய அரசை, ஒன்றிய அரசு என பயன்படுத்துவதாகவும், பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும் ஒன்றியம் என்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார் என்பதையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்தார்.

மேலும், ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி இருப்பதால்தான் அதை பயன்படுத்துவதாகவும், இனியும் அதைத்தான் பயன்படுத்துவோம் என்றும் ஆணித்தனமாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும், தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் ’வாக்களிக்க தவறி விட்டோமே’ என்று வருத்தப்படும் அளவுக்கு இந்த ஆட்சி நடைபெறும் எனக் கூறிய முதலமைச்சர், கோவை உள்ளிட்ட எந்தவொரு மாவட்டத்தையும், எந்நாளும் புறக்கணிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

கி.ரா. எனும் கதை கேட்பவர்!.

சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

ஏசி வசதியோடு இயங்கும் அரசு பள்ளி… தலைமை ஆசிரியையின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

Leave a Comment